Latest Updates
-
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி வீட்டில் இந்த 5 பொருட்களை வாங்கி வையுங்க.. பணப் பிரச்சனையே வராது!
Vastu Tips In Tamil: அனைவருமே மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்பான வாழ்க்கையையே வாழ விரும்புகிறோம். அதற்காக கடினமாக உழைக்கவும் செய்கிறோம். ஆனால் என்ன தான் கடினமாக உழைத்தாலும், சில சமயங்களில் அதற்கான பலன் கிடைக்காமல் போகும். இதற்கு நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நிறைந்த பொருட்கள் காரணமாக இருக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு பொருளுமே ஒவ்வொரு ஆற்றலை கொண்டுள்ளன. அதனால் தான் நம் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் நேர்மறை ஆற்றல் நிரம்பிய பொருட்களை வீட்டில் வைத்திருக்கும் போது, அது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிப்பதோடு, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை குடியிருக்க செய்யும்.

அதுவும் குறிப்பிட்ட சில பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கும் போது, அது அதிர்ஷ்டத்தை ஈர்த்து, வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும். அதுமட்டுமின்றி தொழிலில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றத்தையும் கொண்டு வரும். இப்போது நல்ல அதிர்ஷ்டத்திற்காக வீட்டில் வைத்திருக்க வேண்டிய மங்களகரமான பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.
1. பகவத் கீதை
இந்து மதத்தில் பகவத் கீரை ஒரு புனிதமான நூலாக கருதப்படுகிறது. இந்த புனிதமான புத்தகத்தை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வாழ்வில் முன்னேற்றத்தைக் காண வழிவகை செய்யும். அதுவும் இந்த பகவத் கீரையை பாராயணம் செய்வது மனதிற்கு அமைதியை தந்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஒருவரது மனம் ரிலாக்ஸாக இருந்தாலே, அவரால் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்து வெற்றி காண முடியும்.
2. வெள்ளி நாணயம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது மிகவும் நல்லது. எப்படியெனில் வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையது. எனவே இதை வைத்திருக்கும் போது மன அமைதி கிடைத்து, மனநிலை சிறப்பாக இருக்கும். இப்படிப்பட்ட வெள்ளி நாணயத்தை வீட்டின் பூஜை அறையிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைத்திருந்தால், அது நிதி நிலையை வலுப்படுத்துவதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும்.
3. ஐந்து சோழிகள்
சாஸ்திரத்தின் படி, சோழிகளானது லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. ஏனெனில் சோழிகளானது கடலில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த கடல் அரசனின் மகள் தான் லட்சுமி தேவி. எனவே இந்த சோழியானது செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, 5 முழு சோழிகளை எடுத்து, மஞ்சள் பூசி, வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால், வீட்டில் செல்வம் பெருகுவதோடு, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியையும் மகிழ்விக்கும்.
4. மஞ்சள் வேர்
நம்பிக்கைகளின் படி, மஞ்சள் விஷ்ணு பகவானுடன் தொடர்புடையது. விஷ்ணு பகவான் எங்கு உள்ளாரோ, அங்கு லட்சுமி தேவியும் இருப்பார். எனவே இந்த மஞ்சள் வேர் அல்லது மஞ்சள் கட்டியை பணம் வைக்கும் இடத்திலோ வைத்தால், அது பண வரவை அதிகரிப்பதோடு, வீட்டில் நிதி நிலை உயரவும் வழிவகை செய்யும்.
5. ரோஜாப்பூ செடி
ரோஜா பூக்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த பூ. வாஸ்துப்படி, இந்த ரோஜாப் பூ செடியை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. அதுவும் வீட்டில் அதை சரியான இடத்தில் வைத்து வளர்க்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதன் மூலம் வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். லட்சுமி தேவியும் வீட்டில் வசிப்பதோடு, அவரது பரிபூர்ண ஆசி கிடைத்து, வீட்டில் நிதி நிலையும் உயரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications