சிக்கன் மற்றும் மீன் சமைக்கும் போது இந்த தவறுகளை பண்ணிராதீங்க...இல்லனா டேஸ்ட் ரொம்ப கேவலமா இருக்கும்...!

அசைவ உணவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியதாகும். அசைவ உணவுகள் என்றால் முதல் நினைவிற்கு வருவது மீன் மற்றும் சிக்கன்தான். ஆனால் எப்போதும் இந்த அசைவ உணவுகள் சுவையாக இருந்து விடுவதில்லை. ஏனெனில் நாம் இறைச்சி வாங்கும் போது அல்லது சமைக்கும் போது செய்யும் சில தவறுகள் அவற்றின் சுவையை கெடுத்துவிடும்.

ஒவ்வொரு முறையும் மீன் மற்றும் இறைச்சியை சமைக்கும் போது அவற்றை சரியாக சமைக்க உதவும் சில அத்தியாவசிய குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வது உங்கள் உணவின் சுவையை மேலும் அதிகரிக்கும். இறைச்சி மற்றும் மீன் உணவுகளை சமைக்கும்போது தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Mistakes Should Avoid While Cook Fish and Meat in Tamil

சரியாக சுத்தம் செய்ய வேண்டும்

சமைப்பதற்கு முன் மீன் மற்றும் இறைச்சியை சரியாக சுத்தம் செய்வது அவற்றின் சுவை மற்றும் வாசனையை பாதிக்கும். மீன் மற்றும் இறைச்சியை நன்கு சுத்தம் செய்யாவிட்டால் கடுமையான வாசனை நீண்டு கொண்டே இருக்கும். சமைப்பதற்கு முன் எப்போதும் தண்ணீரில் கழுவவும், மஞ்சள் தூள் கலந்த நீரில் இறைச்சிகளை கழுவுவது அவற்றின் விரும்பத்தகாத வாசனையை நீக்கும்.

இறைச்சி/மீனை மேரினேட் செய்வது

நீங்கள் புதிதாக சமைப்பவராக இருந்தால், எப்போதும் மீன் மற்றும் இறைச்சியை மேரினேட் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது மீன் மற்றும் இறைச்சியின் சுவை மற்றும் அமைப்பை பராமரிக்க உதவுகிறது. மேரினேட் செய்வது சமைக்கும் நேரத்தை குறைத்து, உணவை கூடுதல் சுவையாக மாற்றுகிறது.

நன்றாக ஊற வைக்கவும்

இறைச்சி அல்லது மீன் உணவுகளை சமைத்த பிறகு, மீன்/இறைச்சி குழம்பு மற்றும் சாஸ்களில் இருந்து சாறுகளை உறிஞ்சுவதற்கு அனுமதிப்பது முக்கியம், இது உணவின் சுவை மற்றும் அமைப்பை மேம்படுத்த உதவும். இது மீன் மற்றும் இறைச்சியை உள்ளே இருந்து சுவையாக மாற்றுகிறது.

தரம் குறைந்த மசாலாக்களை உபயோகிப்பது

நீங்கள் அசைவ உணவை சமைக்கும் போது பயன்படுத்தும் பொருட்கள் புதியவை மற்றும் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சேர்க்கும் மசாலா பொருட்கள் மீன் மற்றும் இறைச்சியுடன் நன்றாக இணைந்திருக்க வேண்டும். இது உணவின் சுவையை அதிகரிக்க உதவும்.

அதிக நேரம் சமைப்பது

மீன் மற்றும் இறைச்சி உணவுகளை அதிகமாகச் சமைப்பது, சுவையையும், அதன் அமைப்பையும் அழித்துவிடும். சில சமயங்களில், மீன்/இறைச்சி கடினமாக இறுகி அல்லது குழைந்து போய், சுவையை இழக்கும். எனவே சமைக்கும் போது வெப்பநிலை மற்றும் அமைப்பை தொடர்ந்து சரிபார்க்க வேண்டியது அவசியம்.

தவறான சமைக்கும் முறை

அனைத்து இறைச்சியையும் ஒரே மாதிரியாக சமைக்க வேண்டிய அவசியமில்லை. வெவ்வேறு வகையான மீன்களுக்கு வெவ்வேறு சமையல் முறைகள் தேவை. உதாரணமாக, மென்மையான மீன்களை ஆழமாக வறுக்காமல் க்ரில் செய்வது அல்லது நீராவில் வேகவைப்பது நல்லது. நீங்கள் கடினமான இறைச்சிகளை சமைக்கிறீர்கள் என்றால், முதலில் அதை மரைனேட் செய்து அதன்பிறகு சமைப்பது நல்லது. தவறான சமையல் முறையைப் பயன்படுத்துவது உலர்ந்த, சுவையற்ற உணவுகளுக்கு வழிவகுக்கும்.

Story first published: Tuesday, June 27, 2023, 14:15 [IST]
Desktop Bottom Promotion