Just In
- 18 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மணமணக்கும் ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி உங்க வீட்லயும் செய்யணுமா? இதோ ரெசிபி
எல்லோருக்கும் மிகவும் பிடித்த மணமணக்கும் ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி செய்வது பற்றி இங்கே ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. செய்து பார்த்து மகிழுங்கள்.
அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி நம்ம வீட்லயும் எப்படி செய்யறது
அய்யங்கார் வீடு என்றாலே நெய்யும் நல்லெண்ணெயும் மணக்க மணக்க இருக்கிற சாப்பாடு தான் நம்முடைய நினைவுக்கு வரும்.
பெருமாள் கோவிலுக்குப் போகிற பலருக்கும் பெருமாள் இருக்குமிடம் நோக்கி கால் நகருகிறதோ இல்லையோ புளியோதரை, பொங்கல் வைத்திருக்கும் இடம் நோக்கி, மூக்கு வாசனைப் பிடித்து விட்டால் கால்கள் அந்த பக்கமாக தானாக நடக்க ஆரம்பித்து விடும்.
பொடி வகைகள்
அய்யங்கார் வீடுகளில் பெரும்பாலும் நம்மைப் போல ரெடிமேட் சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லிப் பொடி, பருப்பு பூண்டு பொடி ஆகியவற்றை கடைகளில் வாங்கிக் கொண்டு வந்து பயன்படுத்த மாட்டார்.
தங்களுடைய சொந்த கைப்பக்குவத்தில் தாங்களே மசாலாப் பொருள்களை தரமாகவும், பக்குவமாகவும் தேர்ந்தெடுத்து, அதை குறிப்பிட்ட பக்குவத்தில் வறுத்து, பொடியாகத் திரித்து ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்துவார்கள்.
பக்குவம் முக்கியம்
சமையல் என்றால் பக்குவமாக ஒரு சேர செய்தல் என்று தானே பொருள். அதனால் சமையலைப் பொருத்தவரையில் பக்குவம் என்பது மிக மிக முக்கியம். அதேபோல் சமையலில் ஆர்வம் இருந்தால் தான் சுவை கூடும். நாம் சமைப்பதை வீட்டிலோ அல்லது நண்பகளோ நான்கு பேர் வயிறாற சாப்பிடப் போகிறார்கள் என்பதை உணர்ந்தாலே சமைக்கும் போது அந்த பக்குவம் கூடி விடும்.
வீட்டு மசாலா
வீ்ட்டிலேயே சுத்தமாக, தரமாக மசாலா தயார் செய்து சமைப்பதால் தான் அய்யங்கார் வீட்டு சமையலுக்கு தனி ருசி கூடுகிறது. அவர்களுடைய அரைச்சு விட்ட சாம்பார் நாம என்ன தான் அரைச்சு விட்டாலும் சரி வராது. ஏனெனில் நாம் பயன்படுத்தும் மசாலாப் பொருள்களின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அவர்கள் போடுகிற அதே எல்லா பொருள்களும் தான் நாமும் போடுகிறோம். ஆனால் அந்த ருசி வருவதேயில்லை என்று புலம்புவது வேஸ்ட். மசாலாப் பொருள்கள் முக்கியமல்ல. அதன் விகிதம் தான் அதில் மிக முக்கியம் என்பதை மனதுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
சாம்பார் பொடி
அய்யங்கார் வீட்டு சாம்பார் பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் இந்த லோகத்தில் யார் இருக்கா? என்ன சொல்லும்போதே எச்சில் ஊறுகிறதா? சரி விடுங்க. இனி நம்ம வீட்லயும் அய்யங்கார் வீட்டு சாம்பார் மாதிரியே வைச்சிட்டா போச்சு. எப்படின்னு கேட்கறீங்க. அவங்களுாட சாம்பார் பொடி சீக்ரெட் இப்பதான் நமக்கு கிடைச்சிடுச்சே. அதேமாதிரி செஞ்சு அசத்தி விட வேண்டியது தான். சரி சரி வாங்க. அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி எப்படி திரிக்கிறதுன்னு பார்க்கலாம்.
அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி
தேவையான பொருள்கள்
தனியா - அரை கிலோ
குண்டு மிளகாய் - கால் கிலோ
துவரம்பருபு்பு - 200 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
வெந்தயம் - 20 கிராம்
விரளி மஞ்சள் - 50 கிராம்
பதப்படுத்தும் முறை
மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். அதுவே மழைக்காலமோ பனி காலமாகவோ இருந்தால் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே உலர்த்தி, தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
பொடி திரித்தல்
சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள். பொடி அரைக்கும்முன் மில்லில் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. இந்த சாம்பார் பொடி அரைப்பதற்கு முன்னால் அந்த மெஷினில் வேறு ஏதேனும் சுாம்பு கலந்து பொடி அரைக்கப்படாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.
சேமிக்கும் முறை
அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைககாதீர்கள். அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி. இனி நம்ம வீட்டு சாம்பார் பொடி. நாமும் அதே மாதிரி ஊர் மணக்க சாம்பார் வைத்து சாப்பிடலாம்.