Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
வாடும் செடியை எப்படி காப்பாற்றலாம்...???

செடியைக் காப்பாற்ற சில வழிகள்...
1. பொதுவாக செடிகள் வாடுவதற்கு முதற்காரணம் போதிய தண்ணீர் இல்லாததே ஆகும். எல்லா செடிகளுக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீரானது இருக்க வேண்டும். அப்படி தண்ணீர் இல்லாமல் குறைவாக இருந்தால், ஈரப்பசை இல்லாமல் அது வறண்டுவிடும். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை ஊற்றக் கூடாது. வாடும் நிலையில் இருக்கும் செடி இருக்கும் தரையை முழுவதுமாக நனைக்க வேண்டும் மற்றும் இலைகளின் மீது நீரை தெளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை செய்தால் செடியானது வாடாமல் இருக்கும்.
2. செடி இருக்கும் நிலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தோ அல்லது மழை அதிகமாக பெய்ததால் நீரானது தேங்கி இருந்து, செடி நிலையில்லாமல் இருந்தால், அந்த செடியை சூரிய வெளிச்சத்திலோ அல்லது செடியை புதிதான வேறு இடத்திலோ வைக்க வேண்டும்.
3. செடியின் ஏதேனும் ஒரு பகுதி நோயால் பாதிக்கப்பட்டாலும், அந்த பகுதியை அகற்றிவிட வேண்டும். சில நேரங்களில் இலையின் அமைப்போ அல்லது உருவமோ பூச்சி அரித்ததால் மாறி இருக்கும். அப்போது அதனை யோசிக்காமல் அகற்றிவிட வேண்டும். இப்போது அனைத்து இலைகளும் பாதிக்கப்பட்டிருந்தால் அனைத்தையும் அகற்றிவிடலாம். ஏனெனில் அதன் தண்டு ஆரோக்கியமாக இருப்பதால் அது நன்கு வளரும். செடியின் வேர் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் தான் செடிக்கு ஏதேனும் உரம் தேவைப்படும். உரம் போட்டும் செடியானது செழிப்பாக இல்லையென்றால் அதனை அகற்றி தான் ஆக வேண்டும். இல்லையெனில் அந்த செடியில் உள்ள நோய் மற்ற செடிக்கு பரவும்.
4. செடியானது அழியாமல் இருக்க, நோயால் பாதிக்கப்பட்ட செடியின் தண்டுப் பகுதி ஆரோக்கியமாக இருந்தால், அதன் தண்டை எடுத்து வேறு இடத்தில் வைத்து வளர்க்கலாம். சில செடிகள் வேர் இல்லாமல் வளராது, அத்தகைய செடிகளை அதன் ஆரோக்கியமான வேரை எடுத்து வைத்து வளர்க்கலாம்.
5. சில செடிகள் அதிக வெப்பத்தினால் வாடும் நிலையில் இருக்கும். அதற்கு அறிகுறியாக அதன் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆகவே அப்போது அதனை வீட்டின் உட்பகுதியில் லைட் வெளிச்சத்தில் வைக்கவும். பின் சிறிது நாட்கள் கழித்து, அதனை நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைத்து வளர்க்கவும்.
இவ்வாறெல்லாம் செடிகளை பாதுகாத்து பராமரித்தால் செடியானது வாடாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications