Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
வாடும் செடியை எப்படி காப்பாற்றலாம்...???

செடியைக் காப்பாற்ற சில வழிகள்...
1. பொதுவாக செடிகள் வாடுவதற்கு முதற்காரணம் போதிய தண்ணீர் இல்லாததே ஆகும். எல்லா செடிகளுக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீரானது இருக்க வேண்டும். அப்படி தண்ணீர் இல்லாமல் குறைவாக இருந்தால், ஈரப்பசை இல்லாமல் அது வறண்டுவிடும். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை ஊற்றக் கூடாது. வாடும் நிலையில் இருக்கும் செடி இருக்கும் தரையை முழுவதுமாக நனைக்க வேண்டும் மற்றும் இலைகளின் மீது நீரை தெளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை செய்தால் செடியானது வாடாமல் இருக்கும்.
2. செடி இருக்கும் நிலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தோ அல்லது மழை அதிகமாக பெய்ததால் நீரானது தேங்கி இருந்து, செடி நிலையில்லாமல் இருந்தால், அந்த செடியை சூரிய வெளிச்சத்திலோ அல்லது செடியை புதிதான வேறு இடத்திலோ வைக்க வேண்டும்.
3. செடியின் ஏதேனும் ஒரு பகுதி நோயால் பாதிக்கப்பட்டாலும், அந்த பகுதியை அகற்றிவிட வேண்டும். சில நேரங்களில் இலையின் அமைப்போ அல்லது உருவமோ பூச்சி அரித்ததால் மாறி இருக்கும். அப்போது அதனை யோசிக்காமல் அகற்றிவிட வேண்டும். இப்போது அனைத்து இலைகளும் பாதிக்கப்பட்டிருந்தால் அனைத்தையும் அகற்றிவிடலாம். ஏனெனில் அதன் தண்டு ஆரோக்கியமாக இருப்பதால் அது நன்கு வளரும். செடியின் வேர் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் தான் செடிக்கு ஏதேனும் உரம் தேவைப்படும். உரம் போட்டும் செடியானது செழிப்பாக இல்லையென்றால் அதனை அகற்றி தான் ஆக வேண்டும். இல்லையெனில் அந்த செடியில் உள்ள நோய் மற்ற செடிக்கு பரவும்.
4. செடியானது அழியாமல் இருக்க, நோயால் பாதிக்கப்பட்ட செடியின் தண்டுப் பகுதி ஆரோக்கியமாக இருந்தால், அதன் தண்டை எடுத்து வேறு இடத்தில் வைத்து வளர்க்கலாம். சில செடிகள் வேர் இல்லாமல் வளராது, அத்தகைய செடிகளை அதன் ஆரோக்கியமான வேரை எடுத்து வைத்து வளர்க்கலாம்.
5. சில செடிகள் அதிக வெப்பத்தினால் வாடும் நிலையில் இருக்கும். அதற்கு அறிகுறியாக அதன் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆகவே அப்போது அதனை வீட்டின் உட்பகுதியில் லைட் வெளிச்சத்தில் வைக்கவும். பின் சிறிது நாட்கள் கழித்து, அதனை நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைத்து வளர்க்கவும்.
இவ்வாறெல்லாம் செடிகளை பாதுகாத்து பராமரித்தால் செடியானது வாடாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications