Just In
- 7 min ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- 37 min ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 1 hr ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 2 hrs ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
Don't Miss
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
வாடும் செடியை எப்படி காப்பாற்றலாம்...???
செடியைக் காப்பாற்ற சில வழிகள்...
1. பொதுவாக செடிகள் வாடுவதற்கு முதற்காரணம் போதிய தண்ணீர் இல்லாததே ஆகும். எல்லா செடிகளுக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீரானது இருக்க வேண்டும். அப்படி தண்ணீர் இல்லாமல் குறைவாக இருந்தால், ஈரப்பசை இல்லாமல் அது வறண்டுவிடும். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை ஊற்றக் கூடாது. வாடும் நிலையில் இருக்கும் செடி இருக்கும் தரையை முழுவதுமாக நனைக்க வேண்டும் மற்றும் இலைகளின் மீது நீரை தெளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை செய்தால் செடியானது வாடாமல் இருக்கும்.
2. செடி இருக்கும் நிலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தோ அல்லது மழை அதிகமாக பெய்ததால் நீரானது தேங்கி இருந்து, செடி நிலையில்லாமல் இருந்தால், அந்த செடியை சூரிய வெளிச்சத்திலோ அல்லது செடியை புதிதான வேறு இடத்திலோ வைக்க வேண்டும்.
3. செடியின் ஏதேனும் ஒரு பகுதி நோயால் பாதிக்கப்பட்டாலும், அந்த பகுதியை அகற்றிவிட வேண்டும். சில நேரங்களில் இலையின் அமைப்போ அல்லது உருவமோ பூச்சி அரித்ததால் மாறி இருக்கும். அப்போது அதனை யோசிக்காமல் அகற்றிவிட வேண்டும். இப்போது அனைத்து இலைகளும் பாதிக்கப்பட்டிருந்தால் அனைத்தையும் அகற்றிவிடலாம். ஏனெனில் அதன் தண்டு ஆரோக்கியமாக இருப்பதால் அது நன்கு வளரும். செடியின் வேர் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் தான் செடிக்கு ஏதேனும் உரம் தேவைப்படும். உரம் போட்டும் செடியானது செழிப்பாக இல்லையென்றால் அதனை அகற்றி தான் ஆக வேண்டும். இல்லையெனில் அந்த செடியில் உள்ள நோய் மற்ற செடிக்கு பரவும்.
4. செடியானது அழியாமல் இருக்க, நோயால் பாதிக்கப்பட்ட செடியின் தண்டுப் பகுதி ஆரோக்கியமாக இருந்தால், அதன் தண்டை எடுத்து வேறு இடத்தில் வைத்து வளர்க்கலாம். சில செடிகள் வேர் இல்லாமல் வளராது, அத்தகைய செடிகளை அதன் ஆரோக்கியமான வேரை எடுத்து வைத்து வளர்க்கலாம்.
5. சில செடிகள் அதிக வெப்பத்தினால் வாடும் நிலையில் இருக்கும். அதற்கு அறிகுறியாக அதன் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆகவே அப்போது அதனை வீட்டின் உட்பகுதியில் லைட் வெளிச்சத்தில் வைக்கவும். பின் சிறிது நாட்கள் கழித்து, அதனை நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைத்து வளர்க்கவும்.
இவ்வாறெல்லாம் செடிகளை பாதுகாத்து பராமரித்தால் செடியானது வாடாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.