Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
வாடும் செடியை எப்படி காப்பாற்றலாம்...???

செடியைக் காப்பாற்ற சில வழிகள்...
1. பொதுவாக செடிகள் வாடுவதற்கு முதற்காரணம் போதிய தண்ணீர் இல்லாததே ஆகும். எல்லா செடிகளுக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீரானது இருக்க வேண்டும். அப்படி தண்ணீர் இல்லாமல் குறைவாக இருந்தால், ஈரப்பசை இல்லாமல் அது வறண்டுவிடும். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை ஊற்றக் கூடாது. வாடும் நிலையில் இருக்கும் செடி இருக்கும் தரையை முழுவதுமாக நனைக்க வேண்டும் மற்றும் இலைகளின் மீது நீரை தெளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை செய்தால் செடியானது வாடாமல் இருக்கும்.
2. செடி இருக்கும் நிலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தோ அல்லது மழை அதிகமாக பெய்ததால் நீரானது தேங்கி இருந்து, செடி நிலையில்லாமல் இருந்தால், அந்த செடியை சூரிய வெளிச்சத்திலோ அல்லது செடியை புதிதான வேறு இடத்திலோ வைக்க வேண்டும்.
3. செடியின் ஏதேனும் ஒரு பகுதி நோயால் பாதிக்கப்பட்டாலும், அந்த பகுதியை அகற்றிவிட வேண்டும். சில நேரங்களில் இலையின் அமைப்போ அல்லது உருவமோ பூச்சி அரித்ததால் மாறி இருக்கும். அப்போது அதனை யோசிக்காமல் அகற்றிவிட வேண்டும். இப்போது அனைத்து இலைகளும் பாதிக்கப்பட்டிருந்தால் அனைத்தையும் அகற்றிவிடலாம். ஏனெனில் அதன் தண்டு ஆரோக்கியமாக இருப்பதால் அது நன்கு வளரும். செடியின் வேர் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் தான் செடிக்கு ஏதேனும் உரம் தேவைப்படும். உரம் போட்டும் செடியானது செழிப்பாக இல்லையென்றால் அதனை அகற்றி தான் ஆக வேண்டும். இல்லையெனில் அந்த செடியில் உள்ள நோய் மற்ற செடிக்கு பரவும்.
4. செடியானது அழியாமல் இருக்க, நோயால் பாதிக்கப்பட்ட செடியின் தண்டுப் பகுதி ஆரோக்கியமாக இருந்தால், அதன் தண்டை எடுத்து வேறு இடத்தில் வைத்து வளர்க்கலாம். சில செடிகள் வேர் இல்லாமல் வளராது, அத்தகைய செடிகளை அதன் ஆரோக்கியமான வேரை எடுத்து வைத்து வளர்க்கலாம்.
5. சில செடிகள் அதிக வெப்பத்தினால் வாடும் நிலையில் இருக்கும். அதற்கு அறிகுறியாக அதன் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆகவே அப்போது அதனை வீட்டின் உட்பகுதியில் லைட் வெளிச்சத்தில் வைக்கவும். பின் சிறிது நாட்கள் கழித்து, அதனை நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைத்து வளர்க்கவும்.
இவ்வாறெல்லாம் செடிகளை பாதுகாத்து பராமரித்தால் செடியானது வாடாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











