Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
ஆயுர்வேதத்தின் படி நீங்க நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது ஆபத்தாம்... என்ன காரணம் தெரியுமா?
நாம் ஒவ்வொருவரும் தினமும் தண்ணீர் அருந்துகிறோம். தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க சொல்லி நிபுணர்கள் நமக்கு பரிந்துரைக்கிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எனத் தெரிந்து வைத்திருக்கும் நாம், அதை எப்படி குடிக்க வேண்டும் என்பதில் கவனம் சரியாக கவனம் செலுத்துவதில்லை.
பண்டைய காலம் முதல் பின்பற்றி வரும் ஓர் மருத்துவ முறை ஆயுர்வேதம். நாம் பின்பற்றி வரும் சில உடல்நல குறிப்புகளை ஆயுர்வேதம் தவறு என விளக்குகிறது. ஆயுர்வேத முறைப்படி, நாம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில், நீங்கள் தண்ணீரை எவ்வாறு அருந்த வேண்டும் என்று ஆயுர்வேதம் விளக்குகிறது.

நீங்கள் நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பை பாதிக்கிறது, அது நரம்பு மண்டலத்தை சீர்குலைக்கிறது மற்றும் நிற்கும் நிலை உடலுக்குள் செல்லும் தண்ணீரின் வேகத்தை அதிகரிக்கிறது. இது ஒருவிதத்தில் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இவற்றை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
ஆயுர்வேதம் பல்வேறு விஷயங்களை சரியான வழியில் கடைபிடிக்க கூறுகிறது. அந்த வகையில், நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பை பாதிக்கும் என்று கூறுகிறது ஆயுர்வேதம். தண்ணீர் அதிக சக்தியுடனும் வேகத்துடனும் உடலில் நுழைந்து வயிற்று பகுதியில் விரைவில் சேர்கிறது என்று பல சுகாதார அறிக்கைகள் கூறுவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது திரவங்களின் சமநிலையை சீர்குலைத்து அஜீரணத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அதோடு, உட்கார்ந்த நிலையில் தண்ணீர் குடித்தால்தான் மனித உடலுக்கு பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
நின்று கொண்டே தண்ணீர் குடிக்கிறீர்களா?
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் மூட்டுப் பகுதிகளில் நீர் தேங்கி, மூட்டுவலி உருவாகும் என்றும் ஆயுர்வேத நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது உடலில் திரவ சமநிலையை சீர்குலைத்து, நச்சு திரட்சியை அதிகரிக்கிறது. மேலும், இது உங்களுக்கு மூட்டுவலி பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள்.
எந்த பிரச்சனையும் இல்லை
சில மருத்துவர்கள் நின்று கொண்டு அல்லது உட்கார்ந்து குடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்கள். மேலும், படுத்திருக்கும் போதுதான் தண்ணீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள்.
தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?
தண்ணீர் அருந்தும்போது நீங்கள் நின்றிந்தாலும் அல்லது உட்கார்ந்தாலும், அது விரைவாக உடலில் உறிஞ்சப்படுகிறது. நீர் அடிப்படையில் 100% வாய்வழி உயிர் கிடைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது, மேலும் குடல் சுவர் வழியாக முக்கியமாக சிறுகுடலில் விரைவாக உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சுதல் கிட்டத்தட்ட முழுமையானது, விரைவானது மற்றும் முக்கியமாக சிறுகுடலின் ஆரம்ப பகுதியில் ஏற்படுகிறது.
உறிஞ்சப்பட்ட நீர் பின்னர் உடல் திரவப் பெட்டிகளில் விகிதாசாரமாக விநியோகிக்கப்படுகிறது. உள்ளக திரவத்தில் 66% சதவீதமும், இடைநிலை திரவத்தில் 25.5% சதவீதமும், இரத்த ஓட்டத்தில் 8.5% சதவீதமும் பகிரப்படுகிறது. மேலும், சிறுநீரகங்கள் மூலமும் தண்ணீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
உடலை நீரேற்றம் செய்யுங்கள்
உங்கள் உடலை சரியான முறையில் நீரேற்றம் செய்வதில் கவனம் செலுத்துங்கள். தண்ணீர் உட்கொள்ளல் பற்றி பேசும்போது, அதன் உட்கொள்ளலை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நம் உடலுக்கு பல உடல் செயல்பாடுகளுக்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. இல்லையெனில், நீரிழப்பு ஏற்படலாம். நீரிழப்பு பிரச்சனைக்கு சீக்கிரம் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உடலுக்கு கடுமையான மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தும். ஆதலால், தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிக தண்ணீர் குடிக்க உதவும் திரவ உட்கொள்ளலில் மாறுபாடுகளைச் செய்யுங்கள். உதாரணமாக, இளநீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட புதிய பழச்சாறு, எலுமிச்சை நீர் மற்றும் ஸ்மூத்திகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்து உங்கள் திரவ உட்கொள்ளலை அதிகரிக்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












