Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
நீங்க சமைக்கும் உணவு எப்போதும் பாதுகாப்பானதா இருக்கணுமா? அப்டினா இப்படி சமையல் பண்ணுங்க...!
உலக உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 7 அன்று உலகளவில் அனுசரிக்கப்பட்டது, இந்த சந்தர்ப்பத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) ஊட்டச்சத்துக்கள் சிதையாத வண்ணம் உணவின் பாதுகாப்பை பராமரிக்க முக்கியமான ஐந்து முக்கிய நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டது.
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சத்தான, பாதுகாப்பான மற்றும் போதுமான உணவின் தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உணவு சமைக்கும் போது நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை WHO பரிந்துரைத்துள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

உணவை சுத்தமாக கழுவ வேண்டும்
மக்கள் சமையலறையில் தூய்மையை பராமரிக்க வேண்டும் என்று WHO அறிவுறுத்தியுள்ளது. எந்தவொரு உணவையும் சாப்பிடுவதற்கு முன் அல்லது தொடுவதற்கு முன் மக்கள் கைகளை கழுவ வேண்டும் என்று WHO கூறியுள்ளது. இது தவிர, குப்பையைத் தொட்டபின் அல்லது சுத்தம் செய்தபின் சோப்பு பயன்படுத்தி கைகளைக் கழுவவும்.
சமைத்த மற்றும் பச்சை உணவுகளை பிரித்து வைக்கவும்
கடல் உணவு, பச்சை இறைச்சி, கோழி போன்ற பச்சையான உணவுகள் மற்றும் அவற்றின் பச்சை சாறுகள் சமைத்த உணவில் இருந்து தனித்தனியாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமைக்காத உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன, அவை சமைத்த உணவுடன் கலந்து அவற்றையும் மாசுபடுத்தும். சமைக்காத மற்றும் சமைத்த உணவுகளை வைத்திருக்கவும் வெட்டவும் மக்கள் தனித்தனி கொள்கலன்கள், வெட்டும் பலகைகள் மற்றும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
நன்றாக சமைக்க வேண்டும்
உணவில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உணவை நன்கு சமைக்கவும். உணவை சரியாக சமைத்தால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. நீங்கள் உணவு வெப்பமானியைப் பயன்படுத்தி இதைச் சரிபார்க்கலாம், உங்கள் உணவு சரியாக சமைக்கப்பட்டதா இல்லையா என்பதை இது உங்களுக்கு சரியாக காட்டும்.
உணவை சரியான வெப்பநிலையில் வைக்கவும்
பாதுகாப்பான வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழலில் உணவை வைத்திருப்பதன் மூலம், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. கெட்டுப்போகும் உணவை குளிர்சாதனப் பெட்டியில் 5 டிகிரி செல்சியசுக்குக் குறைவான வெப்பநிலையில் அதாவது 41 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் உணவில் பாக்டீரியாக்கள் வளராது மற்றும் உணவு விரைவில் கெட்டுப் போகாது.
சுத்தமான தண்ணீரை மட்டும் பயன்படுத்தவும்
சமைப்பதில் இருந்து குடிப்பது வரை சுத்தமான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்துங்கள். சுத்தமான நீரின் பயன்பாடு மூலம் அழுக்குகள் மற்றும் கிருமிகள் பரவாது, அதே போல் ப்ரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
