Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இரவு நேரத்தில் அதிகப்படியான வாயு வெளியேறுகிறதா? அதற்கு உங்களோட இந்த செயல்தான் காரணமாம்...!
உங்களுக்கு வாயு அடிக்கடி வெளியேறுவதற்கு உயர் ஃபைபர் உணவும் ஒரு காரணமாக இருக்கலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பொதுவாக ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால், அவை உங்களை வாயுவாக்குகிறது.
பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், அது வாயு தொல்லைதான். இது வெளியில் சொல்லமுடியாத சங்கட்டத்தை ஏற்படுத்தும். வாயுப் பிரச்சினை, மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான் என்றாலும், அதற்கு உங்களது உணவு பழக்கவழக்கம் முக்கிய காரணம். பெரும்பாலும் இரவு உணவு அதிகமாக சாப்பிடும்போது இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்லும்போது அல்லது ஏதாவது விருந்துக்கு செல்லும்போது, இந்த பிரச்சனை உங்களை வாட்டிவதைக்கும்.

தினமும் சராசரியாக 15 முறை உங்களுக்கு வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. அது சாதாரணமானது. ஆனால், இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை வந்தால் என்ன காரணம் என்று மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. நீங்கள் கூடுதல் வாயுவை உணர்கிறீர்கள், இது உங்களுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. மேலும், இரவு தூங்கும்போது, வாயு பிரச்சனை உங்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்றால், அதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இக்கட்டுரையில் என்னென்ன காரணங்கள், அவற்றை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி தெரிவித்துள்ளோம்.

முதல் காரணம்
வாயு உருவாக்கம் என்பது உடலின் ஒரு சாதாரண செயல்முறையாகும். உணவை ஜீரணிக்க உதவும் நமது குடலில் வாழும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள், நமது செரிமான அமைப்பில் நாள் முழுவதும் வாயுவை உற்பத்தி செய்கின்றன. சில வாயு பாக்டீரியாவால் உறிஞ்சப்படுகிறது. மற்றவை உடலில் இருந்து ஃபார்டிங் மற்றும் பர்பிங் மூலம் அகற்றப்படுகின்றன. வாயு உற்பத்தி செய்யும் செயல்முறை குறிப்பாக அதிகமாக உணவு சாப்பிடத்திற்குப் பிறகு தீவிரமடைகிறது. எனவே, இரவு உணவு உங்கள் நாளின் மிகப்பெரிய உணவாக இருந்தால், இரவில் அதிகப்படியான வாயுவை நீங்கள் உணரலாம்.

இரண்டாவது காரணம்
நீங்கள் இரவில் மிதமான உணவைச் சாப்பிட்டாலும், நாள் முழுவதும் வாயு உருவாக்கப்படுவது மற்றும் இரவில் உங்களை அசெளகரியாமாக உணரவைக்கும். ஆரோக்கியமான குடல் பாக்டீரியா உணவை முழுமையாக ஜீரணிக்க சுமார் ஆறு மணி நேரம் ஆகும். ஆகவே, உங்கள் மதிய உணவு உட்பட கடந்த ஆறு மணி நேரத்தில் நீங்கள் சாப்பிட்டவற்றின் காரணமாக வாயு வெளியேறலாம்.

மூன்றாவது காரணம்
உங்களுக்கு வாயு அடிக்கடி வெளியேறுவதற்கு உயர் ஃபைபர் உணவும் ஒரு காரணமாக இருக்கலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பொதுவாக ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால், அவை உங்களை வாயுவாக்குகிறது. பீன்ஸ், பட்டாணி, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை அதிக நார்ச்சத்துள்ள உணவுக்கு சில பொதுவான எடுத்துக்காட்டுகள். நம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க இதுபோன்ற உணவுகள் முக்கியம். ஆனால் மற்றொரு உண்மை என்னவென்றால், நம் உடல் நார்ச்சத்தை உடைக்காது. அந்த வேலையைச் செய்வது நமது குடல் பாக்டீரியா மட்டுமே.

இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தூங்க செல்வதற்கு முன்பு 20 நிமிடங்கள் நடைப்பயிற்சிக்கு செல்லுங்கள். இரவு உணவை சாப்பிட்ட உடனேயே படுக்கையில் படுத்து தூங்க வேண்டும் என்று நினைப்பது நல்லதல்ல. ஆனால் ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு, உங்கள் இரவு உணவிற்குப் பிறகு குறைந்தது 20 நிமிடங்கள் நடக்க வேண்டும். இந்த நடைப்பயிற்சி உங்கள் உணவை செரிக்க வைக்க உதவுகிறது.

தண்ணீர் அருந்துங்கள்
பகல் முழுவதும் குறைந்த தண்ணீரை உட்கொள்வது இரவில் உங்கள் துயரங்களையும் அதிகரிக்கும். எனவே உணவை சீராக செரிமானப்படுத்துவதற்கும், ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தண்ணீர் குடிக்கும்போது, உங்கள் உணவு செரிமானம் சரியாக நடக்கும். இதனால், வாயு பிரச்சனை ஏற்படாது.

உணவு நேரத்திற்கு இடையிலான இடைவெளி
உங்கள் உணவு நேரத்திற்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கக்கூடாது. இது உங்கள் செரிமான அமைப்பில் வாயு உருவாக்கத்தை அதிகரிக்கிறது. இதைத் தடுக்க உங்கள் உணவுக்கு இடையில் ஏதாவது சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications











