Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தண்ணீர் அதிகமா குடிப்பதுனால உங்க உடலில் எந்தெந்த பாகங்கள் பாதிக்கப்படும் தெரியுமா?
இரத்தத்தில் குறைந்த சோடியம் மூளை செல்களை வீக்கமடையக்கூடும். மேலும் இது பேச்சு இழப்பு, திசைதிருப்பல் மற்றும் நடைபயிற்சி உறுதியற்ற தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்
அமிர்தமாகவே இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு என்று கூறப்படுகிறது. அதன்படி, தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு மிக அவசியம். ஆனால், அவை அளவுக்கு மீறி அதிகமாக குடிக்கும்போது, உங்கள் உடலுக்கு பல சுகாதார பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருநாளைக்கு நாம் அருந்தும் நீரின் அளவு அவர்களின் உடல்களை பொருத்து மாறுகிறது. பொதுவாக 8 கிளாஸ் நீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த அளவுக்கு குறைவாக அருந்தினாலும், அதிகமாக அருந்தினாலும் உடல்நலத்திற்கு சிக்கல் ஏற்படும்.

நீர் அதிமாக குடிப்பதன் பொதுவான அறிகுறிகள் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு அல்லது இரத்தத்தில் குறைந்த சோடியம் செறிவு இருப்பது ஆகும். இது ஹைபோநெட்ரீமியா என்றும் அழைக்கப்படுகிறது. மற்ற அறிகுறிகள் குழப்பம், குமட்டல், வாந்தி, தலைவலி. அதிகப்படியான நீர் நுகர்வு காரணமாக இந்த நிலை எழுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாறாக இரும்புச்சத்து நிறைந்த நீரை அதிகமாக உட்கொள்வதால் இது நிகழ்கிறது. அதிகப்படியான நீரிழப்பின் பொதுவான பக்க விளைவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

செல்கள் பெருகும்
அதிகப்படியான நீரிழப்பு காரணமாக, உடலில் சோடியம் அளவு குறையும் போது, சவ்வூடுபரவல் செயல்முறை மூலம் நீர் உயிரணுக்களில் நுழைகிறது. இதனால் செல்கள் வீக்கமடைகிறது, இது தசை திசுக்களுக்கும், மூளைக்கும் மேலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

மூளையை பாதிக்கிறது
இரத்தத்தில் குறைந்த சோடியம் மூளை செல்களை வீக்கமடையக்கூடும். மேலும் இது பேச்சு இழப்பு, திசைதிருப்பல் மற்றும் நடைபயிற்சி உறுதியற்ற தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.

கனமான இதயம்
நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான நீர் நுகர்வு இதய செயலிழப்புக்கும் வழிவகுக்கும். அதிகப்படியான நீர் உங்கள் உடலுக்குள் இரத்தத்தின் அளவை அதிகரிக்கக்கூடும். மேலும் இந்த இரத்தம் இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் தேவையற்ற அழுத்தத்தை செலுத்துகிறது.

சிறுநீரக பிரச்சினை
அதிகப்படியான நீரிழப்பு சிறுநீரகத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான நீர் அர்ஜினைன் வாசோபிரசினின் பிளாஸ்மா அளவைக் குறைக்கிறது. இது சிறுநீரக செயல்பாட்டை குறைக்கிறது மற்றும் சிறுநீரகத்தை சேதப்படுத்தும்.

கல்லீரல் பிரச்சினை
அதிகப்படியான நீரைக் குடிப்பதன் விளைவாக அதிகப்படியான நீரிழப்பு ஏற்படுவதில்லை. ஆனால் அதிக அளவு இரும்புச்சத்து கொண்ட குடிநீரை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அதிக இரும்புச்சத்து உள்ள நீர் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

நீர் போதைக்கு சிகிச்சையளிப்பது எப்படி?
உங்கள் அன்றாட நீர் உட்கொள்ளலைக் கணக்கிடுவதும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி மேலும் உட்கொள்வதைத் தவிர்ப்பதும் முதன்மையான படியாகும். குழப்பம் ஏற்பட்டால், எப்போதும் மருத்துவ உதவியை நாடுங்கள். மேலும் உடலில் நீர் தக்கவைக்கும் எந்த மருந்துகளையும் தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications











