Just In
- 34 min ago கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 1 hr ago ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- 2 hrs ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- 3 hrs ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
Don't Miss
- News வெள்ளை முடி கருப்பாக.. நரைமுடி மறையணுமா? செம்பருத்தி போதுமே.. இந்த 4 இருந்தாலே கருகரு முடி வளரும்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நம் முன்னோர்கள் இந்த மூலிகை தேநீரை குடிச்சிதான்... கல்லீரல் & சர்க்கரை நோய் வரமால் இருந்தார்களாம்!
நிலவேம்புஆயுர்வேத மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியங்களில் அதன் ஆற்றல்மிக்க ஆரோக்கிய நன்மைகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பண்டையகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு மூலிகைகள் நம் முன்னோர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் வைத்திருந்திருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றங்களால் நாம் பல்வேறு குப்பை உணவுகளை தற்போது சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இது நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, உயிருக்கு ஆபத்தை விளைக்கும் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது. ஆயுர்வேத மூலிகைகள் நமக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நாள்பட்ட நோய்களை தடுத்து, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு மூலிகைதான் சிராட்டா(நிலவேம்பு). தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கசப்பான நிலவேம்பு பானத்தை ஒரு கிளாஸ் குடித்து வந்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல அற்புதங்களை செய்யுமாம்.
நம்மில் பெரும்பாலோர் குழந்தைகளாக இருந்தபோது கசப்பான உணவுகள் மற்றும் பானங்களை சாப்பிட்டிருப்போம். அதற்கான காரணங்கள் ஆயுர்வேத புத்தகங்களுக்குள் மறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இயற்கை வைத்தியங்கள் அறிவியலால் ஆதரிக்கப்படுகின்றன. சிராட்டா என்றும் அழைக்கப்படும் ஸ்வெர்டியா பற்றியும், இந்த பழமையான மூலப்பொருள் எவ்வாறு அன்றாட நோய்களை சரிசெய்கிறது என்பதை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.
நிலவேம்பு என்றால் என்ன?
'பிட்டர் ஸ்டிக்', என்றும் அழைக்கப்படும் நிலவேம்பு, அதிக உயரத்தில் வளரும் பாரம்பரிய இமயமலைத் தாவரமாகும். இந்த மூலிகைத் தாவரம் காஷ்மீர் முதல் பூட்டான் வரையிலான இமயமலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இந்த நேரான நீண்ட தண்டு பட்டையால் மூடப்பட்டிருக்கும். இந்த இலை மலேரியா, நீரிழிவு நோய், கல்லீரல் கோளாறுகள் போன்ற பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆரோக்கியமாக வைத்திருப்பது எது?
நிலவேம்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியங்களில் அதன் ஆற்றல்மிக்க ஆரோக்கிய நன்மைகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் கிளைகோசைடுகள் போன்ற சாந்தோன்ஸ், சிரட்டானின், சிராட்டால், பால்மிடிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
உணவில் நிலவேம்பு தண்ணீரை ஏன் சேர்க்க வேண்டும்?
நிலவேம்பு உடலுக்கு மட்டுமல்ல, மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் சிறந்தது. இது சிராட்டா உற்பத்தி செய்யும் ஸ்வெர்டியாமார்ட்டின் எனப்படும் கலவை காரணமாகும். இது நரம்பு மண்டலத்தை குணப்படுத்தவும் மற்றும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. கடுமையான மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்கிறது, மேலும் வலிப்பு சிகிச்சையிலும் உதவுகிறது. நிலவேம்பு தண்ணீர் அல்லது தேநீர் குடிப்பதால், சொறி, அரிப்பு, எரியும் உணர்வு மற்றும் சிவத்தல் போன்ற தோல் பிரச்சினைகளை தடுக்கலாம். ஏனெனில் இந்த மூலிகையில் உள்ள சத்துக்கள் நச்சுத்தன்மையை நீக்கி புதிய இரத்தத்தை உருவாக்க உதவுவதுடன் இரத்த சோகை போன்ற இரத்த சம்பந்தமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது.
நிலவேம்பு தண்ணீர் அல்லது தேநீர் தயாரிப்பது எப்படி?
இந்த எளிதான தேநீர் அல்லது உங்கள் ஆரோக்கியமான காலை பானத்தை தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை அல்லது உலர்ந்த சிராட்டாவின் 2 குச்சிகளை போட வேண்டும். 2 கப் தண்ணீர் அதன் அசல் அளவின் ½ வது அளவிற்குக் குறைக்கும் வரை கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி 3-4 டீஸ்பூன் 2 முறை உணவுக்குப் பிறகு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
சிராட்டாவின் ஆரோக்கிய நன்மைகள்?
சிராட்டாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உயிரணு மீளுருவாக்கம் மற்றும் கல்லீரலின் வெளிப்புற அடுக்குகளில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்த மூலிகையின் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருந்து ரவுண்டு புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்களை அகற்ற உதவும். சிராட்டா தண்ணீரைக் குடிப்பதால் வீக்கம், எடை, வயிற்று வலி ஆகியவற்றைக் குறைக்கலாம். மேலும், இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதால், உங்கள் எடையை நிர்வகிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த மூலிகையின் மிதமான உட்கொள்ளல் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், இயற்கையாகவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும்.