Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
நம் முன்னோர்கள் இந்த மூலிகை தேநீரை குடிச்சிதான்... கல்லீரல் & சர்க்கரை நோய் வரமால் இருந்தார்களாம்!
நிலவேம்புஆயுர்வேத மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியங்களில் அதன் ஆற்றல்மிக்க ஆரோக்கிய நன்மைகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பண்டையகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு மூலிகைகள் நம் முன்னோர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் வைத்திருந்திருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றங்களால் நாம் பல்வேறு குப்பை உணவுகளை தற்போது சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இது நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, உயிருக்கு ஆபத்தை விளைக்கும் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது. ஆயுர்வேத மூலிகைகள் நமக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நாள்பட்ட நோய்களை தடுத்து, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு மூலிகைதான் சிராட்டா(நிலவேம்பு). தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கசப்பான நிலவேம்பு பானத்தை ஒரு கிளாஸ் குடித்து வந்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல அற்புதங்களை செய்யுமாம்.

நம்மில் பெரும்பாலோர் குழந்தைகளாக இருந்தபோது கசப்பான உணவுகள் மற்றும் பானங்களை சாப்பிட்டிருப்போம். அதற்கான காரணங்கள் ஆயுர்வேத புத்தகங்களுக்குள் மறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இயற்கை வைத்தியங்கள் அறிவியலால் ஆதரிக்கப்படுகின்றன. சிராட்டா என்றும் அழைக்கப்படும் ஸ்வெர்டியா பற்றியும், இந்த பழமையான மூலப்பொருள் எவ்வாறு அன்றாட நோய்களை சரிசெய்கிறது என்பதை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

நிலவேம்பு என்றால் என்ன?
'பிட்டர் ஸ்டிக்', என்றும் அழைக்கப்படும் நிலவேம்பு, அதிக உயரத்தில் வளரும் பாரம்பரிய இமயமலைத் தாவரமாகும். இந்த மூலிகைத் தாவரம் காஷ்மீர் முதல் பூட்டான் வரையிலான இமயமலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இந்த நேரான நீண்ட தண்டு பட்டையால் மூடப்பட்டிருக்கும். இந்த இலை மலேரியா, நீரிழிவு நோய், கல்லீரல் கோளாறுகள் போன்ற பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆரோக்கியமாக வைத்திருப்பது எது?
நிலவேம்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியங்களில் அதன் ஆற்றல்மிக்க ஆரோக்கிய நன்மைகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் கிளைகோசைடுகள் போன்ற சாந்தோன்ஸ், சிரட்டானின், சிராட்டால், பால்மிடிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

உணவில் நிலவேம்பு தண்ணீரை ஏன் சேர்க்க வேண்டும்?
நிலவேம்பு உடலுக்கு மட்டுமல்ல, மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் சிறந்தது. இது சிராட்டா உற்பத்தி செய்யும் ஸ்வெர்டியாமார்ட்டின் எனப்படும் கலவை காரணமாகும். இது நரம்பு மண்டலத்தை குணப்படுத்தவும் மற்றும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. கடுமையான மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்கிறது, மேலும் வலிப்பு சிகிச்சையிலும் உதவுகிறது. நிலவேம்பு தண்ணீர் அல்லது தேநீர் குடிப்பதால், சொறி, அரிப்பு, எரியும் உணர்வு மற்றும் சிவத்தல் போன்ற தோல் பிரச்சினைகளை தடுக்கலாம். ஏனெனில் இந்த மூலிகையில் உள்ள சத்துக்கள் நச்சுத்தன்மையை நீக்கி புதிய இரத்தத்தை உருவாக்க உதவுவதுடன் இரத்த சோகை போன்ற இரத்த சம்பந்தமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

நிலவேம்பு தண்ணீர் அல்லது தேநீர் தயாரிப்பது எப்படி?
இந்த எளிதான தேநீர் அல்லது உங்கள் ஆரோக்கியமான காலை பானத்தை தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை அல்லது உலர்ந்த சிராட்டாவின் 2 குச்சிகளை போட வேண்டும். 2 கப் தண்ணீர் அதன் அசல் அளவின் ½ வது அளவிற்குக் குறைக்கும் வரை கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி 3-4 டீஸ்பூன் 2 முறை உணவுக்குப் பிறகு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

சிராட்டாவின் ஆரோக்கிய நன்மைகள்?
சிராட்டாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உயிரணு மீளுருவாக்கம் மற்றும் கல்லீரலின் வெளிப்புற அடுக்குகளில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்த மூலிகையின் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருந்து ரவுண்டு புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்களை அகற்ற உதவும். சிராட்டா தண்ணீரைக் குடிப்பதால் வீக்கம், எடை, வயிற்று வலி ஆகியவற்றைக் குறைக்கலாம். மேலும், இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதால், உங்கள் எடையை நிர்வகிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த மூலிகையின் மிதமான உட்கொள்ளல் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், இயற்கையாகவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும்.



Click it and Unblock the Notifications