உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க தற்கொலை செய்துகொள்ள போறாங்களாம்...!

2000ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன, கிட்டத்தட்ட தற்கொலைகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளன.

தற்கொலை என்பது தனிநபர்களுக்கும் அவர்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களுக்கும் ஒரு பயங்கரமான சோகம். 2000ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன, கிட்டத்தட்ட தற்கொலைகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளன. இளைஞர்கள் மற்றும் பெண்களின் தற்கொலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க மரணத்திற்கு 10 வது முக்கிய காரணமாக தற்கொலை உள்ளது. இந்த அதிகரிப்பு ஏன் நிகழ்ந்தன என்பது முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் இது சிறந்த மனநலப் பராமரிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

Warning Signs of Suicidal Behavior in Tamil

தற்கொலை எண்ணத்தின் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து அனைவரும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. நீங்கள் அக்கறை கொண்ட ஒருவர் தற்கொலை நடத்தைக்கான அறிகுறிகளைக் காட்டினால், அவர்களைக் காப்பாற்ற நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்கொலைக்கான அறிகுறிகள் தெளிவாக அல்லது எளிதில் அறிய முடியாதவையாக உள்ளன. சிலர் தங்கள் உணர்வுகளையும் நோக்கங்களையும் நன்றாக மறைக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்ஒருவரின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எளிதில் அறிந்துகொள்ள கூடிய அறிகுறிகள்

எளிதில் அறிந்துகொள்ள கூடிய அறிகுறிகள்

தற்கொலை செய்து கொள்ளும் முன் ஒருவரின் நடத்தையில் பல அறிகுறிகள் இருக்கும், ஆனால் பொதுவான எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கும்போது இவற்றில் ஒன்று அல்லது பலவற்றை நீங்கள் காணலாம். இவை பொதுவாக தெளிவான மற்றும் கவனிக்க எளிதான அறிகுறிகளாக இருக்கும்.

- இறப்பதைப் பற்றி பேசுவது அல்லது இறக்க விரும்புவது போல பேசுவது

- வெறுமையாக, நம்பிக்கையற்றதாக அல்லது பிரச்சனைகளில் இருந்து வெளியேற வழியில்லாமல் இருப்பதைப் பற்றி பேசுவது

- குற்ற உணர்வு மற்றும் அவமானம் போன்ற வலுவான உணர்வுகளைக் குறிப்பிடுதல்

- வாழ காரணம் இல்லை அல்லது அவர்கள் இல்லாமல் மற்றவர்கள் நன்றாக இருப்பார்கள் என்று பேசுவது

- சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல்

- மிகவும் பிடித்த தனிப்பட்ட பொருட்களைக் கொடுப்பது

- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பிரியும் தொனியில் பேசுவது

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களிடம் இருக்கும் மறைமுகமான அறிகுறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

நடத்தையில் அசாதாரண மாற்றங்கள்

நடத்தையில் அசாதாரண மாற்றங்கள்

தற்கொலை செய்து கொள்ளும் ஒருவருக்கு இது பொதுவானது, ஆனால் மாற்றங்கள் மனச்சோர்வு அல்லது நம்பிக்கையற்ற தன்மையுடன் தொடர்புடையதாகத் தோன்றாததால், கவனிக்காமல் விடுவது எளிது. உதாரணமாக, உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பொதுவாக அன்பானவர், கோபமாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கலாம் அல்லது சோகமாக இருந்த மற்றும் மனச்சோர்வுடன் போராடும் ஒருவர் திடீரென்று அமைதியாகவும், வெளித்தோற்றத்தில் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம். மற்ற மாற்றங்களில் அதிகரித்த போதைப்பொருள் அல்லது அசாதாரண மனநிலை மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

தூங்கும் முறைகளில் மாற்றங்கள்

தூங்கும் முறைகளில் மாற்றங்கள்

ஒருவர் எப்படி தூங்குகிறார் என்பதில் ஏற்படும் மாற்றம் மனச்சோர்வின் அறிகுறியாகும் ஆனால் தற்கொலை நடத்தைகளும் அதில் அடங்கும். தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர் இயல்பை விட அதிகமாக தூங்கலாம், படுக்கையில் இருந்து எழுந்திருக்கவே சிரமப்படுவார். அவர்கள் குறைவாக தூங்கலாம், தூக்கமின்மையை அனுபவித்து, இரவு முழுவதும் விழித்திருந்து, அடுத்த நாள் சோர்வுடன் போராடுவார்கள். இது தற்கொலைக்கான அறிகுறியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தூங்கும் பழக்கவழக்கங்களில் இத்தகைய மாற்றங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன, மேலும் அவை கவனிக்கப்பட வேண்டும்.

ஆபத்தான பொருட்களை வாங்குதல்

ஆபத்தான பொருட்களை வாங்குதல்

இது மிகவும் வெளிப்படையான அறிகுறியாகும். ஆபத்தான பொருட்களை வாங்குவது எளிதில் மறைக்கப்படக்கூடிய அறிகுறியாகும். யாரும் கவனிக்காமல் மாத்திரைகளை பதுக்கி வைக்க ஆரம்பிக்கலாம். அவை மறைக்க எளிதானவை. நீங்கள் அக்கறையுள்ள ஒருவர் எளிதில் அணுகக்கூடிய தற்கொலை வழிமுறைகளை நாடுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

உணர்ச்சிரீதியாக தூரமாக இருப்பது

உணர்ச்சிரீதியாக தூரமாக இருப்பது

தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர் பொதுவாக வாழ்க்கையிலிருந்தும், மற்றவர்களிடமிருந்தும், வழக்கமான செயல்பாடுகளிலிருந்தும் விலகிவிடலாம். அவர்கள் சமூகரீதியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், உணர்ச்சிரீதியாக மக்களிடமிருந்து தொலைவில் இருப்பதாகத் தோன்றலாம். உணர்ச்சிகரமான சூழ்நிலைகளில் அலட்சியமாக செயல்படுவது ஒரு தற்கொலை நடத்தை போல் தோன்றாது, எனவே இதுபோன்ற நடத்தையை கவனிக்க வேண்டியது அவசியம் மற்றும் இது ஒரு சாத்தியமான எச்சரிக்கை அறிகுறி அல்லது மனச்சோர்வின் அறிகுறியாக அங்கீகரிக்க வேண்டும். அதே வழியில், தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர் சாதாரண நடவடிக்கைகள், வேலை மற்றும் வீடு மற்றும் அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த விஷயங்களில் ஆர்வத்தை இழக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion