Latest Updates
-
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
வெற்றிலை சாப்பிட்ட பிறகு நீங்க இந்த உணவு பொருட்கள சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா ஆபத்தாம்!
பான் மற்றும் மசாலா பொருள் இணைப்பு உடலுக்கு நல்லதல்ல. நீங்கள் பான் சாப்பிட்ட பிறகு மசாலாப் பொருட்களை உட்கொண்டால், அது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பான் எனப்படும் வெற்றிலையில் அபரிமிதமான மருத்துவ திறன்கள் உள்ளதாக, சரக சம்ஹிதா மற்றும் சுஷ்ருத சம்ஹிதாவின் பண்டைய ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை கசப்பான மற்றும் கடுமையான சுவையைக் கொண்டுள்ளன மற்றும் வலுவான ஆற்றலுடன் உடலில் வெப்பத்தை உருவாக்குகின்றன. பச்சை நிறத்தில் உள்ள பானில் கார குணம் உள்ளது. இது வயிறு மற்றும் குடலில் உள்ள pH ஏற்றத்தாழ்வுகளை திறம்பட நடுநிலையாக்கி, செரிமான ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. இதை எல்லா மக்களும் எளிதாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது பேஸ்ட்கள், பொடிகள் மற்றும் பழச்சாறுகள் என உட்கொள்ளலாம். மேலும், இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம்.

அவை பித்த தோஷங்களை உயர்த்த உதவுகின்றன, அதே நேரத்தில் வாத மற்றும் கபா கூறுகளை சமநிலைப்படுத்துகின்றன. பெரும்பாலும், சுவையை மனதில் வைத்துதான் பான் சாப்பிடுகிறோம். பான் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. ஆனால், பானுக்குப் பிறகு நாம் உட்கொள்ளக் கூடாத பல பொருட்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? தண்ணீர் முதல் மருந்து பால் வரை வெற்றிலை சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய பொருட்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பால்
பான் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக் கூடாது. பானுக்குப் பிறகு பால் உட்கொள்வது பல் பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆதலால், பான் சாப்பிட பிறகு பால் குடிக்கக்கூடாது என நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள்.

மருந்துகள்
ஒரு நபர் பான் சாப்பிட்ட பிறகு மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. அது அவர்களுக்கு உடல்நல சிக்கலை ஏற்படுத்தலாம். நீங்கள் பான் சாப்பிட்ட பிறகு ஏதேனும் மருந்துகளை உட்கொண்டால், அது தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பழச்சாறுகள்
பொதுவாக பான் சாப்பிட்ட பிறகு சில உணவு பொருட்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படவில்லை. அந்த வகையில், நீங்கள் பான் சாப்பிட்ட பிறகு எந்த விதமான பழச்சாறையும் அருந்தக்கூடாது. ஏனெனில் அது ஒரு நபரின் வாய் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மசாலா
பான் மற்றும் மசாலா பொருள் இணைப்பு உடலுக்கு நல்லதல்ல. நீங்கள் பான் சாப்பிட்ட பிறகு மசாலாப் பொருட்களை உட்கொண்டால், அது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

குளிர்ந்த நீர்
பான் சாப்பிடுவது வாய் மற்றும் மார்பில் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்துகிறது, அதன் பிறகு நீங்கள் குளிர்ந்த நீரை உட்கொண்டால், அது மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். மேலும், குளிர்ந்த நீர் அல்சரை உண்டாக்கும் என்றும் கூறப்படுகிறது.

குளிர்ந்த உணவுகள்
பொதுவாக சூடான மணமணக்கும் விருந்து அல்லது கருவிருந்து சாப்பிட பிறகு பான் சாப்பிடப்படுகிறது. ஆனால், நீங்கள் பான் சாப்பிடப்பிறகு வயிறு மற்றும் மார்பில் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தக்கூடிய குளிர்ந்த உணவுகளை தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது ஒரு நபருக்கு வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications