Just In
- 1 hr ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 2 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 2 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 3 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வறட்டு இருமல் பாடாய் படுத்துதா? இதோ அதிலிருந்து விடுவிக்கும் சில ஆயுர்வேத வழிகள்!
நாள்பட்ட வறட்டு இருமல் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கி, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் தடுக்கும். இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேதம் எளிமையான மற்றும் விரைவான தீர்வை அளிக்கும்.
தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் மோசமான காலநிலை காரணமாக பலர் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படுகிறார்கள். அதில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது வறட்டு இருமல் தான்.
வறட்டு இருமல் பல காரணங்களால் வரலாம். அதில் சுவாச பாதையில் தொற்றுக்கள், நிமோனியா, அழற்சி மற்றும் சைனஸ் பிரச்சனை போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமின்றி, தூசி, நச்சுமிக்க பொருட்கள் காற்றில் இருப்பது போன்றவையும் ஒருவருக்கு வறட்டு இருமலை உண்டாக்கலாம். வறட்டு இருமல் என்பது நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்ற முடியாத ஒரு நிலையாகும்.
ஒருவருக்கு வறட்டு இருமல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம் மற்றும் இது குளிர் அல்லது காய்ச்சலாக கூட முன்னேறக்கூடும். நாள்பட்ட வறட்டு இருமல் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கி, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் தடுக்கும். இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேதம் எளிமையான மற்றும் விரைவான தீர்வை அளிக்கும். இப்போது வறட்டு இருமல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சில ஆயுர்வேத வழிகளைக் காண்போம்.
MOST READ: கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் இந்திய மூலிகைகள்!
மிளகு
மிளகு சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் சிறப்பான ஒரு பொருள் தான் மிளகு. ஒரு டீஸ்பூன் தேனில், ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள சேர்த்து கலந்து சாப்பிட்டால், தொண்டைப்புண் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், பட்டை, இஞ்சி, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்தும் குடிக்கலாம். இது கடுமையான இருமல் மற்றும் சளியில் இருந்து விரைவில் விடுவிக்கும்.
தேன்
பகல் மற்றும் இரவு நேரங்களில் இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு தேன் மிகச்சிறந்த தேர்வு. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளது. இது தொண்டைப் புண் மற்றும் இருமலால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும். சுடுநீரில் தேன் கலந்து ஒரு நாளைக்கு பலமுறை குடித்து வந்தால், எரிச்சலூட்டும் இருமலில் இருந்து விடுபடலாம்.
புதினா
புதினாவில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இரண்டுமே உள்ளன. இது தொண்டை கரகரப்பு மற்றும் இருமலைக் குறைக்கும். அதற்கு புதினாவை பல வழிகளில் உணவில் சேர்க்கலாம். அதில் இரவு உறங்குவதற்கு முதன் புதினா டீயை குடித்தால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் செய்யும் வறட்டு இருமல் தடுக்கப்படும்.
மஞ்சள் பால்
மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன. மஞ்சள் வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால், வறட்டு இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். அதிலும் அத்துடன் சிறிது பூண்டு சேர்த்துக் கொண்டால், அது இன்னும் சிறப்பான பலனை விரைவில் தரும்.
இஞ்சி
இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மேம்படுத்துவதோடு, உடலில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வறட்டு இருமல் பிரச்சனைக்கான அறிகுறிகளில் இருந்து விடுபட, இஞ்சி துண்டை வாயில் போட்டு மெல்லவோ அல்லது இஞ்சி டீயைத் தயாரித்துக் குடிக்கவோ செய்யலாம்.
இதர வழிகள்
வெறும் ஆயுர்வேத வழிகளை மட்டும் முயற்சித்தால் வறட்டு இருமலில் இருந்து விடுபட முடியாது. வாழ்க்கை முறையில் குறிப்பிட்ட மாற்றங்களை செய்ய வேண்டியதும் அவசியம். கீழே அவை கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதை பின்பற்றினால், நிச்சயம் எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம்.
டயட்டில் கவனம்
* வறட்டு இருமலால் அவஸ்தைப்படும் போது காரமான அல்லது ஜங்க் உணவுகளை உண்ணும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
* ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
ஓய்வு தேவை
* கடுமையான இருமலால் கஷ்டப்படும் போது, போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.
* அதிகம் பேசாமல் குரல்வளைக்கு ஓய்வு கொடுப்பதோடு, எப்போதும் வெதுவெதுப்பான நீரைப் பருக வேண்டும்.
நுரையீரல் ஆரோக்கியத்தை கவனிக்கவும்
* நுரையீரலுக்கு செல்லும் சுவாசக் குழாயில் எரிச்சலூட்டி இருமலைத் தூண்டிவிடும் கொசுவர்த்திகள், ஊதுபத்திகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகாக்களை அன்றாடம் செய்ய வேண்டும்.