Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சிக்கன் அல்லது மட்டன் சாப்பிட்ட பிறகு நீங்க பால் குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
ஆட்டிறைச்சி சாப்பிட்டப் பிறகு பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இவை இரண்டிலும் அதிகளவு புரதம் இருப்பதால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உணவு விஷத்திற்கு வழிவகுக்கும்.
அசைவ உணவை நன்றாக சாப்பிட யார்தான் விரும்ப மாட்டார்கள்? பொதுவாக சிக்கன் மற்றும் மட்டன் போன்ற அசைவ உணவுகளை சாப்பிட்ட பின், ஜூஸ், டீ அல்லது மில்க் ஷேக் சாப்பிட பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். நீங்கள் ஒரு கிளாஸ் மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தியுடன் ருசியான இறைச்சி உணவை உண்ண விரும்புகிறவரா? அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும். இரவு உணவிற்கு சிக்கன் அல்லது மட்டன் சாப்பிட்டுவிட்டு பால் குடிப்பதை நம் பெரியவர்கள் ஏன் தடுத்தார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஆம். இந்த பழமையான பழக்கத்திற்கான காரணங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளன. சிக்கன் அல்லது மட்டன் சாப்பிட்ட பிறகு நீங்க ஏன் பால் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பாலையும் இறைச்சியையும் ஏன் இணைக்கக் கூடாது?
இறைச்சி சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது அல்லது இரண்டையும் சேர்த்துக் குடிப்பது வாயு, வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி, குமட்டல், அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏனென்றால், பால் மற்றும் இறைச்சி இரண்டும் புரதத்தின் ஆதாரங்கள் மற்றும் இரண்டையும் இணைப்பது அமைப்பை மெதுவாக்குகிறது. செரிமானத்தை பாதிக்கிறது மற்றும் அமில ரிஃப்ளக்ஸ்க்கு வழிவகுக்கும். இதைப் பற்றி ஆயுர்வேதம் கூறுவதை இங்கே காணலாம்.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
ஆயுர்வேத புத்தகங்களின்படி பாலையும் இறைச்சியையும் இணைத்து அல்லது இறைச்சி சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது தவறான கலவையாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஒவ்வொரு உணவுக்கும் வெவ்வேறு ஆற்றல் உள்ளது. மேலும் இது வட்டா, பிதா, கபா போன்ற தோஷங்களின் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இது உடலில் பல நோய்களைத் தூண்டும் மற்றும் தோல் ஒவ்வாமையையும் ஏற்படுத்தும். அனைத்து உணவுகளும் ஜீரணிக்க ஒரு குறிப்பிட்ட செரிமான சூழல் தேவைப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது.

செரிமான மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பை பாதிக்கிறது
பால் குடித்த பிறகு மீன், கோழி அல்லது ஆட்டிறைச்சி சாப்பிட்டால், இரண்டு வகையான புரோட்டீன்களை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்கிறீர்கள். ஒரே நேரத்தில் செரிமானம் ஆவதற்கு பல்வேறு வகையான செரிமான செயல்பாடுகள் தேவைப்படும். எனவே, இது உடலை ஜீரணிக்க கடினமாக்குகிறது மற்றும் உடலின் செரிமான மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளை மோசமாக பாதிக்கிறது.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்
ஆட்டிறைச்சி சாப்பிட்டப் பிறகு பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இவை இரண்டிலும் அதிகளவு புரதம் இருப்பதால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உணவு விஷத்திற்கு வழிவகுக்கும். இது உங்கள் உடலில் வெப்பத்தை உருவாக்கும். மேலும், இது இறுதியில் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆதலால், இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இறுதி குறிப்பு
இந்த காரணங்கள் இருந்தபோதிலும், நீங்கள் இன்னும் உங்கள் உணவில் இறைச்சி மற்றும் பால் இரண்டையும் சேர்க்க விரும்பினால், இந்த இரண்டு புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் கிட்டத்தட்ட 2-3 மணிநேர இடைவெளியில் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது சிறந்த செரிமானத்திற்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications