Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
காதலுக்கு பெயர்போன ரோஜா...உங்கள் இதயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன தெரியுமா?
ரோஸ்ஷிப் டீ இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
ரோஜா என்றால் எல்லாருக்குன் நினைவில் வருவது காதல்தான். காதலர்கள் அனைவரும் அழகான ரோஜா பூவை கொடுத்துதான் அவர்களுடைய அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள். ரோஜா ஒரு மென்மையான மலர் மற்றும் இனிமையான சுவை கொண்டது. ரோஜா பூவை, பெண்கள் தலையில் சூடிக்கொள்ளவும், பூஜையில் சாமிக்கு மாலையாக சூடவும் பயன்படுத்துகிறோம். ரோஜா என்றால் அழகான பூ என்றுதான் பலர் நினைக்கிறார்கள். ஆனால், ரோஜாவில் உள்ள மருத்துவமும், மகத்துவமும் நம்மில் பலருக்கு தெரியாது.

பல காலங்களுக்கு முன்பே மூலிகை தேநீர் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இதில், துளசி, இஞ்சி, புதினா, இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் பல பொதுவான மூலிகை தேநீர்களும் அடங்கும். அந்த வகையில், ரோஸ்ஷிப் தேநீரும் ஒரு மூலிகை தேநீர்தான். ரோஸ்ஷிப் என்பது காட்டு ரோஜாவின் ஒருவகை ஆகும். உலர்ந்த ரோஜா மொட்டுக்கள் மற்றும் ரோஸ்ஷிப் பழங்களிலிருந்து ரோஸ்ஷிப் டீ தயாரிக்கப்படுகிறது. ரோஸ்ஷிப் தேநீர் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதய பாதுகாப்பு
ரோஸ்ஷிப் டீ இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரோஸ்ஷிப்பில் ஃபிளாவனாய்டுகள் அதிகம் உள்ளன. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 40 கிராம் ரோஸ்ஷிப் தூள் கொண்ட ஒரு பானத்தை உட்கொண்டால், இரத்த அழுத்தம் மற்றும் மோசமான கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயைத் தடுக்கிறது
ஒரு ஆய்வின்படி, ரோஸ்ஷிப் பவுடர் இன்சுலின் அளவைத் தூண்டுவதற்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் சாதகமான விளைவைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயை தடுக்கிறது. ரோஸ்ஷிப் சாற்றில் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
ரோஸ்ஷிப்பில் வைட்டமின் சி உள்ளது. இது நீரில் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்றியாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரோஸ்ஷிப் டீ அருந்துவதால், உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமும், வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது
ரோஸ்ஷிப் தேநீர் எடை குறைக்க உதவும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ரோஸ்ஷிப்பில் டிலிரோசைடு எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை கொழுப்பை கரைக்கும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. இதனால் உடல் பருமன் அபாயத்தை குறைக்கிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ரோஸ்ஷிப்பில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. இது சூரிய கதிர் பாதிப்புகளுக்கு எதிராக தோல் செல்களைப் பாதுகாக்கிறது. இதனால், ரோஸ்ஷிப் தேநீர் குடிப்பதால் உங்கள் சருமம் இறுக்கமாகவும் இளமையாகவும் இருக்க உதவும். கூடுதலாக, ரோஸ்ஷிப் தேநீரில் அஸ்டாக்சாண்டின் எனப்படும் கீட்டோ கரோட்டினாய்டு உள்ளது. இது சருமம் இளமையாக இருக்க உதவுகிறது.

வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது
ரோஸ்ஷிப் டீயில் கேலக்டோலிப்பிட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளிட்ட அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள் அதிகமாக உள்ளது. கேலக்டோலிப்பிட்கள் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன என்றும் அவை மூட்டு வலியைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரோஸ்ஷிப் டீயின் பக்க விளைவுகள்
ரோஸ்ஷிப் டீ எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், நீங்கள் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் என்ற மருந்தை உட்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் ரோஸ்ஷிப் டீயைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ரோஸ்ஷிப்கள் ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டிருக்கின்றன. இது உடலில் லித்தியத்தின் செறிவை அதிகரிக்கக்கூடும். இதனால் உடலில் பல கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ரோஸ்ஷிப் டீ செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
4 தேக்கரண்டி உலர்ந்த அல்லது நொறுக்கப்பட்ட ரோஸ்ஷிப்
4 கப் தண்ணீர்
4-5 புதினா இலைகள்
1 தேக்கரண்டி தேன்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, உலர்ந்த அல்லது நொறுக்கப்பட்ட ரோஸ்ஷிப்பை சேர்க்கவும். மெதுவாக அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதை வடிகட்ட வேண்டும். அதில் தேனை கலந்து, புதினா இலைகளை மேலே தூவலாம். இப்போது சுவையான ஆரோக்கியமான ரோஸ்ஷிப் டீ ரெடி.



Click it and Unblock the Notifications











