Latest Updates
-
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
இதய நோய் ஏற்படாமல் இருக்க பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
தேங்காய் எண்ணெயுடன் ஆயில் புல்லிங் சிறப்பாக செயல்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய் வகைகளை விட கரிம, கூடுதல் சிறப்பு வாய்ந்த அல்லது சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் மிக
ஆயில் புல்லிங் என்பது ஒரு பழங்கால ஆயுர்வேத பல் பராமரிப்பு நுட்பமாகும். இது உங்கள் வாயில் சமையல் எண்ணெயை ஊற்றி வாய்கொப்பளிப்பது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவான இந்த நுட்பம், பாக்டீரியாவை அகற்றுவதிலும், வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் உள்ள அதன் செயல்திறன் காரணமாக உலகளவில் பிரபலமடைந்துள்ளது. இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து வாயில் ஊற்றி கொப்பளிக்கும்எளிய நுட்பம். நீங்கள் பயன்படுத்தும் பிரஷால் செல்ல முடியாத உங்கள் வாயின் மறைவான பகுதிக்கும் சென்று பாக்டீரியாவை இதனால் சுத்தப்படுத்த முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஈறுகளில் ஈரப்பதம் மற்றும் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. உங்கள் வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதைத் தவிர, ஆயில் புல்லிங் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. உங்கள் தினசரி வழக்கத்தில் எண்ணெய் பயன்படுத்துதை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

வாய் சுகாதாரத்தை பராமரிக்கவும்
சுமார் 600 வகையான பாக்டீரியாக்கள் நம் வாயில் வாழ்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் சில ஆரோக்கியமானவை, மற்றவை பல் சிதைவு மற்றும் ஈறு நோய்கள் போன்ற வாய்வழி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். காலையில் தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்வது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும். இந்த நுட்பம் சிறு வயதிலிருந்தே அடிக்கடி பல் சிதைவு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் வாய்வழி பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது.

ஈறு வீக்கத்தைக் குறைக்கிறது
குழிவுகள் என்பது பல் சொத்தையின் பொதுவான பிரச்சினையாகும். இது மோசமான வாய்வழி சுகாதாரம் மற்றும் பற்களைச் சுற்றி பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இது அவற்றில் துளைகளுக்கு வழிவகுக்கிறது. பாக்டீரியா பற்களின் எனாமலை அழித்து, பல் சிதைவுக்கு வழிவகுக்கிறது. ஆயில் புல்லிங் அத்தகைய பாக்டீரியாக்களை வெளியேற்றி, குழிவுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கு மற்றும் ஈறுகளின் வீக்கத்திற்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

வாய் துர்நாற்றத்தை குறைக்கிறது
வாய் துர்நாற்றம் அல்லது ஹலிடோசிஸ் என்பது 50 சதவீத மக்கள்தொகையில் காணப்படும் பொதுவான வாய்வழி ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினையாகும். வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மோசமான வாய்வழி சுகாதாரம் மற்றும் நாக்கில் பூச்சு. இது பாக்டீரியாவை தங்க வைத்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாய் துர்நாற்றத்தைக் குறைக்க, நாக்கை க்ளீன் செய்வது மற்றும் எண்ணெய் வாய் கொப்பளிப்பு ஆகிய இரண்டு சிறந்த வழிகள். ஆயில் புல்லிங் என்பது வாயில் இருந்து பாக்டீரியாவைக் குறைப்பதற்கான ஒரு இயற்கையான வழியாகும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நீங்கள் அடிக்கடி அஜீரண பிரச்சனையால் அவதிப்பட்டால், ஆயில் புல்லிங் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக இருக்கும். உங்கள் வாயில் எண்ணெய் தேய்ப்பது உங்கள் செரிமான மண்டலத்தைத் தூண்டும். இது செரிமான செயல்முறையை அதிகரிக்கும் மற்றும் மலச்சிக்கலின் பிரச்சனைகளை குறைக்கும். மற்றொரு நன்மை என்னவென்றால், இது ஜலதோஷங்களை சமன் செய்யும் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
ஆயில் புல்லின் நீண்டகால நன்மைகளைப் புரிந்து கொள்ள மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பண்டைய வீட்டு வைத்தியம் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை எடுத்துக்காட்டுகிறது. மோசமான வாய்வழி சுகாதாரம் மோசமான இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நீங்கள் எண்ணெய் இழுக்கும் போது, அது உமிழ்நீரில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் சிறந்த உணவுகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

எண்ணெய் தேர்வு
தேங்காய் எண்ணெயுடன் ஆயில் புல்லிங் சிறப்பாக செயல்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய் வகைகளை விட கரிம, கூடுதல் சிறப்பு வாய்ந்த அல்லது சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. அதனுடன், இது உண்ணக்கூடியது மற்றும் பாதுகாப்பானது. வலுக்கட்டாயமாக ஆயில் புல்லிங் செய்ய முயற்சி செய்யுங்கள் மற்றும் எண்ணெயை விழுங்காதீர்கள். ஆயில் புல்லிங் காலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.

ஆயில் புல்லிங் செய்வது எப்படி?
படி 1: ஒரு தேங்காய் எண்ணெயை உங்கள் வாயில் ஊற்றி 1 நிமிடம் வாய் கொப்பளித்து கொள்ளவும்.
படி 2: பின்னர், எண்ணெயை துப்பவும் மற்றும் உங்கள் வாயை தண்ணீரில் நன்றாக கலுவவும். நீங்கள் 1 நிமிடத்தில் தொடங்கி பின்னர் உங்கள் நேரத்தை அதிகரிக்கலாம்.



Click it and Unblock the Notifications