உடற்பயிற்சி செய்யும் போது ஏன் கொட்டாவி வருகிறது தெரியுமா?

ஒருவர் மிகவும் களைப்பாக இருக்கும் போது கொட்டாவி வருகிறது என்றால் அது இயற்கையானதே. ஆனால் கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, கொட்டாவி வந்தால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது?

ஒருவர் மிகவும் களைப்பாக இருக்கும் போது கொட்டாவி வருகிறது என்றால் அது இயற்கையானதே. அதுப்போல் மதிய வேளையில் ஏற்படும் தூக்கக் கலக்கத்தில் கொட்டாவி வருகிறது என்றாலும் அதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் முழு உடலையும் ஈடுபடுத்தி, கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, கொட்டாவி வந்தால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? அவ்வாறு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஏன் கொட்டாவி வருகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
களைப்பு அல்லது மயக்கம்

களைப்பு அல்லது மயக்கம்

ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, அவருக்கு கொட்டாவி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் களைப்பு ஆகும். நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்காக விடியற்காலையிலேயே எழ வேண்டும் அல்லது மாலை வேலையில் அதற்காக நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அவ்வாறு தவறாமல் அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் போது உடலும், மனமும் களைத்துவிடுகிறது.

அதீத பரபரப்பு அல்லது அழுத்தம்

அதீத பரபரப்பு அல்லது அழுத்தம்

நம்மிடம் இருக்கும் அழுத்தம் அல்லது பரபரப்பு ஆகியவற்றுக்கும் கொட்டாவிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. குறிப்பாக ஒருவருக்கு உடற்பயிற்சி சம்பந்தமான போட்டிகள் நெருங்குகிறது என்றால், அவரை பரபரப்பும், மன அழுத்தமும் தொற்றிக் கொள்கிறது. அது இயற்கையானதும் கூட. இந்த பரபரப்பு அல்லது மன அழுத்தத்தில், அவர் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது இயல்பாகவே கொட்டாவி வருகிறது.

அதே நேரத்தில், மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதற்கு கொட்டாவி உதவி செய்வதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நமது கவனத்தை ஒருமுகப் படுத்துவதற்கும் கொட்டாவி உதவி செய்வதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடினமான உடற்பயிற்சிகள்

கடினமான உடற்பயிற்சிகள்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உடலை தயார்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுவர். அவ்வாறு ஈடுபடும் போது அவர்களுடைய மொத்த உடலும், தசைநார்களும் இயக்கத்தில் இருக்கும். அது அவர்களுடைய உடலின் வெப்பநிலையை பல மடங்கு அதிகரிக்கும். பின் உடற்பயிற்சியை முடித்து அவர்கள் ஓய்வெடுக்கும் போது தானாகவே கொட்டாவி வந்துவிடும்.

ஆர்வம் இல்லாமல் செய்யும் உடற்பயிற்சிகள்

ஆர்வம் இல்லாமல் செய்யும் உடற்பயிற்சிகள்

திரும்ப திரும்ப ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளைத் தினந்தோறும் செய்து வரும் போது அவற்றில் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. மேலும் ஆர்வம் குறைந்துவிடுகிறது. அவ்வாறு ஆர்வம் இல்லாமலும், சலிப்புத் தன்மையுடனும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொட்டாவி வருகிறது. எனவே புதிய புதிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அப்போது சலிப்பு ஏற்படாமல் உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.

உடல் வெப்பநிலை அதிகரிப்பு

உடல் வெப்பநிலை அதிகரிப்பு

உடற்பயிற்சியின் போது கொட்டாவி வருவதற்கு மேலும் ஒரு காரணம் உடலின் வெப்பம் அதிகரிப்பதாகும். அதாவது உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உடலின் வெப்பம் அதிகரித்துவிடுகிறது. அது கொட்டாவி வருவதற்கு ஏதுவாகிறது. எனவே குளிர்ந்த காற்றை சுவாசிக்க வேண்டும். அப்போது உடலின் வெப்பமும், மூளையின் வெப்பமும் குறையும். அதன் மூலம் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கலாம்.

கொட்டாவியை எவ்வாறு தடுக்கலாம்?

கொட்டாவியை எவ்வாறு தடுக்கலாம்?

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொட்டாவி வந்தால், அதனால் எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை. மாறாக அது உடலை குளிர்வித்து, கவனத்தைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்துகிறது. மேலும் கொட்டாவி வருவதைத் தடுக்க முடியாது. எனவே உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் ஓய்வாகவோ அல்லது களைப்பில்லாமலோ இருக்க வேண்டும். அதோடு உடல் பலவீனமாகவோ அல்லது உடலில் காயமோ இருந்தால், உடற்பயிற்சிக்கு விடுமுறை கொடுக்க வேண்டும். அதன் மூலம் கொட்டாவியைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, November 11, 2020, 10:30 [IST]
Desktop Bottom Promotion