Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
பௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா?
சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி நீரின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலருக்கும் தெரிவதில்லை. கடல் அலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம் சூரியன் மற்றும் நிலாவில் இருந்து வரும் புவிஈர்ப்பு விச
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சூரியன் மற்றும் சந்திரன் இரண்டுமே மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த இரண்டின் ஒளியுமே பூமிக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். நிலா அழகானது மட்டுமல்ல அதன் ஒளி பூமியில் பல மாற்றங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தும்.

சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி நீரின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலருக்கும் தெரிவதில்லை. கடல் அலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம் சூரியன் மற்றும் நிலாவில் இருந்து வரும் புவிஈர்ப்பு விசைதான். பூமியும், சந்திரனும் ஒன்றையொன்று தொடர்ந்து காந்தம் பல ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பூமியின் ஈர்ப்பு விசை சந்திரனை விட அதிகமாக இருப்பதால், அது தண்ணீரைத் தவிர எல்லாவற்றையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

அலைகளின் மீது சந்திரனின் விளைவு
பூமியில் உள்ள நீர் ஒரு பரந்த இடத்திற்கு தொடர்ந்து நகர்கிறது, மேலும் சந்திரனின் மெல்லிய ஈர்ப்பு விசையால் அலைகளை உருவாக்க முடியும். எனவே, ஒவ்வொரு நாளும், இரண்டு உயர் அலைகளும் இரண்டு குறைந்த அலைகளும் உருவாகின்றன.

மனித உடலின் நீர் அளவு
பூமியில் இருக்கும் நீரின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி தெரிந்து கொள்ளும் அவசியம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனித உடல் 70 சதவீதம் நீரால் ஆனது என்பதை மறந்து விடாதீர்கள். சந்திரனின் ஈர்ப்பு விசை மனித உடலின் மீதும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். நீர்நிலைகளைப் போலவே, சந்திரனின் ஈர்ப்பு விசை நம் உடலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நமது மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முழுநிலவு பெண்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம்
முழுநிலவானது பெண்களிடையே மாதவிலக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் சில நேரங்களில் தவறான மனநிலை மாற்றங்கள் மற்றும் வேறொரு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

முழுநிலவு ஆண்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம்
முழுநிலவு ஆண்கள் மீதும் இதுபோன்ற பாதிப்பைத்தான் ஏற்படுத்திக்கிறது. ஆண்கள் அடிக்கடி மனசோர்வுக்கு ஆளாவதுடன், சிறிய கருத்துப்பிரச்சினைகளுக்குக் கூட காயமுறுவது, போன்ற உணர்ச்சிரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பௌர்ணமி இரவில் என்ன நடக்கும்?
பௌர்ணமி இரவில் நம்மில் சிலருக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். அதேபோல சில அதிக உணர்ச்சிரீதியான குழப்பங்களுக்கு ஆளாவார்கள், சிலர் அதீத சுறுசுறுப்புடன் அனைத்து வேலைகளையும் செய்வார்கள். இது அவர்கள் உடலில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்தது.

சந்திர விளைவு
இந்த சூழ்நிலைகள் அனைத்தும் சந்திர விளைவு என்னும் கோட்பாடு மூலம் விளக்கப்படுகிறது. சந்திர விளைவு என்பது சந்திரனின் கட்டங்களுக்கும் மனித நடத்தைக்கும் இடையிலான தொடர்பாகும்.

விலங்குகள் மற்றும் தாவரங்கள் மீது முழு நிலவின் விளைவு
அலைகள் மட்டுமல்ல, சந்திரனின் ஈர்ப்பு சமநிலை தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் உயிரியல் ரிதத்துடன் ஒத்துப்போகிறது.

சந்திர நாள்
29 நாட்கள், 12 மணி நேரம் 44 நிமிடங்கள் நீடிக்கும் நிலாவின் சந்திர நாள், மாதவிடாய் சுழற்சியின் சராசரி காலத்திற்கு ஏற்ப என்பது உங்களுக்குத் தெரியுமா?

பண்டைய நடைமுறை
இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இது பண்டைய காலங்களில், தொழில்மயமாக்கல் தொடங்குவதற்கு முன்பு, பெண்கள் அனைவரும் பௌர்ணமி அன்று ஒன்றாகத் தூங்குவார்கள், பௌர்ணமி நாளில் கருமுட்டை வெளிப்படுதல் ஏற்பட்டு புதிய நிலவில் மாதவிடாயை தொடங்குவார்கள்.

ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணம்
பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் இயற்கை ஒளியின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், செயற்கை ஹார்மோன்களில் இருப்பவர்கள், செயற்கை விளக்குகளின் கீழ் தூங்குவது, பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது போன்றவர்கள் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.

எப்படி சரிசெய்வது?
இயற்கை நிலா ஒளியில் தூங்குபவர்களுக்கு ஹார்மோன் செயல்பாடுகள் சீராக இருக்கிறது. 70% நீரால் ஆன மனித உடல், சந்திர ஒளியால் ஏற்படும் மாறுபட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுகிறது, மெலடோனின் அளவை அதிகரித்து நல்ல தூக்கத்தை கொடுக்கிறது.



Click it and Unblock the Notifications











