Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
National Vaccination Day 2023: இன்னும் எந்த நோய்களுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவில்லை என்று தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் இன்னமும் ஒருசில கொடிய நோய்களுக்கு தடுப்பூசிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
National Vaccination Day 2023: இன்று குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் உயிர்கொல்லி நோய்களால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதுவும் போலியோ என்ற கொடிய நோயால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த போலியோ நோயில் இருந்து மக்களைக் காப்பாற்ற சொட்டுமருந்து வடிவில் தடுப்பூசி முதலில் மக்களுக்கு போடப்பட்டன.

அப்படி முதன்முதலாக போலியோ சொட்டு மருந்து 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி போடப்பட்டது. இந்த போலியோ தடுப்பு மருந்தானது பல உயிர்களை காத்ததால், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மற்றும் தடுப்பூசியின் விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதுவரை எத்தனையோ தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளை தவறாமல் போட்டுக் கொள்வதனால் தான், நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிகிறது. இருப்பினும் இன்னமும் ஒருசில கொடிய நோய்களுக்கு தடுப்பூசிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது எந்த நோய்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதைக் காண்போம்.

தடுப்பூசி இல்லாத நோய்கள்
மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் பல கடுமையான நோய்களுக்கு நமது விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் என்ன தான் மருத்துவ துறையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஒருசில நோய்களுக்கு தடுப்பூசிகளை கண்டுபிடிக்க முடியவில்லை மற்றும் இன்றும் அந்த நோய்களுக்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதுவரை முழுமையாக சரிசெய்ய முடியாத மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்காத நோய்கள் பின்வருமாறு:
* எய்ட்ஸ்/எச்.ஐ.வி
* எபோலா
* ஆஸ்துமா
* அல்சைமர்
* சிக்கன்குனியா
* ஆஸ்டியோபோரோசிஸ்
* அரிவாள் செல் இரத்த சோகை
* ட்ரைஜெமினல் நியூரோசிஸ்
* அட்ரினோகார்டிகல் கார்சினோமா
* டோக்ஸோபிளாஸ்மோசிஸ்

எய்ட்ஸ்
உலகிலேயே எஸ்ட்ஸ் மிகவும் கொடிய நோய். இந்த எய்ட்ஸிற்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், தீவிரமாகாமல் தடுக்கலாம்.

எபோலா வைரஸ்
எபோலா வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவக்கூடியது. இந்த வகை வைரஸ் ஆப்பிரிக்காவில் உள்ள விலங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. இந்த வைரஸை முற்றிலும் அழிக்க தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆஸ்துமா
ஏராளமானோர் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த ஆஸ்துமா பிரச்சனையை முழுமையாக சரிசெய்ய தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சிகிச்சைகளின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ்
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோயானது கடுமையான மூட்டு வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும். இந்நோயால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நோயைத் தடுக்கவும் எந்த ஒரு தடுப்பு மருந்தும் இல்லை. வேண்டுமானால் இதன் அறிகுறிகளுக்கு ஏற்ப சில வைத்தியங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அல்சைமர்
அல்சைமர் என்பது ஒரு ஞாபக மறதி நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாற்றல் பலவீனமாக இருக்கும். இந்நோயானது ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். இந்த அல்சைமர் நோய்க்கு என்று பிரத்யேக தடுப்பு மருந்து எதுவும் இல்லை. ஆனால் இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சைகளின் மூலம் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்.

சிக்கன்குனியா
சிக்கன்குனியா என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்று. இதன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் மூட்டு வலி. இந்த சிக்கன்குனியாவிற்கு தடுப்பூசி எதுவும் இல்லை. ஆனால் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை வழங்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
இதுப்போன்று பல நோய்கள் அல்லது பிரச்சனைகளுக்கு தடுப்பூசிகளோ அல்லது முழுமையான தீர்வோ இல்லை. நாம் கவனமாக இருந்தால், இவற்றின் அபாயத்தைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











