Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
Lassa Fever: இங்கிலாந்தில் பரவும் லஸ்ஸா காய்ச்சல் - அதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?
லஸ்ஸா காய்ச்சலால் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் பிப்ரவரி 11 ஆம் தேதி லண்டனின் வடக்கே பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி மெதுவாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இங்கிலாந்தில் லஸ்ஸா காய்ச்சல் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவை சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, லஸ்ஸா காய்ச்சல் பரவி வருவது சுகாதார நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் லஸ்ஸா காய்ச்சலால் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் பிப்ரவரி 11 ஆம் தேதி லண்டனின் வடக்கே பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இவர்கள் சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, எப்படி பரவும், எவ்வளவு அபாயகரமானது போன்ற விஷயங்களை விரிவாக காண்போம்.

லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன?
நோய் கட்டுப்பாடு மற்றும் மாசுபாட்டு மையங்களின் கூற்றுப்படி, லஸ்ஸா காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. மேலும் இது முதன்முதலில் 1969 இல் நைஜீரியாவில் உள்ள லஸ்ஸாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே இந்த காய்ச்சலுக்கு லஸ்ஸா காய்ச்சல் என்ற பெயர் வந்தது.

லஸ்ஸா காய்ச்சல் எப்படி பரவுகிறது?
லஸ்ஸா காய்ச்சல் எலிகளால் பரவுகிறது மற்றும் இந்த தொற்று முதன்மையாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
இந்த காய்ச்சலானது பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்ட உணவுப் பொருட்களுடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் போது வரலாம். அதோடு பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு கொள்வதாலும் பரவலாம். மொத்தத்தில் இந்த காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.

லஸ்ஸா காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
லேசான காய்ச்சல், சோர்வு, பலவீனம் மற்றும் தலைவலி போன்றவை லஸ்ஸா காய்ச்சலின் லேசான அறிகுறிகளாகும். அதே வேளையில் இரத்தப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், வாந்தி, முக வீக்கம், மார்பு, முதுகு மற்றும் அடிவயிற்று பகுதியில் வலி ஆகியவை இதன் தீவிர அறிகுறிகளாகும். இந்த காய்ச்சலின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்ட 1-3 வாரங்களுக்குப் பிறகு தோன்றும். சிடிசி-யின் படி, லஸ்ஸா காய்ச்சலுடன் தொடர்புயை மிகவும் பொதுவான சிக்கல் காது கேளாமை ஆகும். பல சந்தர்ப்பங்களில், தொற்று ஏற்பட்டவருக்கு காது கேளாமை நிரந்தரமாக இருக்கும்.

எவ்வளவு ஆபத்தானது?
லஸ்ஸா காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றாலும், பெரும்பாலான மக்கள் இத்தொற்றின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைகிறார்கள். இத்தொற்றினால் ஏற்பட்ட ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 1% என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால் இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் விகிதம் 15% ஆகும்.

லஸ்ஸா காய்ச்சலைத் தடுப்பது எப்படி?
லஸ்ஸா காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், எலிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே சிறந்த வழி. அதுவும் நோய் பரவும் இடங்களில் உள்ள எலிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். அதோடு வீட்டிற்குள் எலிகள் நுழைவதைத் தடுக்க போதுமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பேண வேண்டும். எலித்தொல்லை அதிகம் இருந்தால் எலிப் பொறிகளை வைத்து பிடித்து அவற்றை அகற்றவும் மற்றும் உண்ணும் உணவுகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் எனவும் சிடிசி அறிவுறுத்துகிறது.



Click it and Unblock the Notifications











