Just In
- 55 min ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 1 hr ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 2 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 2 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Movies Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலிஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
- News பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை! சென்னை ஹைகோர்ட் அதிரடி! சரணடைகிறாரா ராஜேஷ் தாஸ்?
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மூக்கால சளி ஒழுகுதா? இருமல் கொட்டி தொலைக்குதா? அப்ப இத பண்ணுங்க...உடனே சரியாகிடும்!
மஞ்சள் அல்லது ஹல்டி ஆன்டி-பாக்டீரியல் பண்புகளைக் கொண்ட ஒரு மூலப்பொருளாகும். மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வெதுவெதுப்பான மஞ்சள் பால் சாப்பிடுவது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தற்போது குளிர்காலம் வந்துவிட்டது. இது காய்ச்சல், சளி மற்றும் இருமலின் காலம். நீங்கள் எங்கு சென்றாலும், இந்த நேரத்தில் ஒருவருக்கு அல்லது மற்றவருக்கு இருமல் அல்லது சளி இருப்பதைக் காணலாம். இது சரியாக ஜலதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. சளி அல்லது இருமல் ஒன்றும் தீவிரமானதாக இல்லையென்றாலும், சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது பல நாட்கள் நீடிக்கும். உண்மையில் இது உங்களுக்கு அசெளகாரியமாகவும் தொந்தரவாகவும் இருக்கும். ஜலதோஷம் இருந்தால், கண்களில் கனம், தலைவலி மற்றும் தூக்கமின்மை ஆகியவை அன்றாட வேலைகளில் கவனம் செலுத்துவதை கடினமாக்குகிறது.
மேலும், குளிர்காலத்தில் மக்கள் சளி மற்றும் இருமலால் அதிகம் பாதிக்கப்படுவதால் நிறைய உடல்நல பிரச்சனைகளை கொண்டு வரலாம். எனவே, வீட்டு வைத்தியம் மூலம் சளி மற்றும் இருமலை எவ்வாறு குணப்படுத்துவது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
முலேத்தி
முலேத்தி அல்லது அதிமதுரம் இருமலை குணப்படுத்தும் பழமையான தந்திரங்களில் ஒன்றாகும். உங்களுக்கு தொண்டை புண் இருந்தால் அல்லது தொடர்ந்து இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது ஒரு முலேத்தி குச்சியை மென்று சாப்பிடுவதுதான். ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு நீங்கள் முலேத்தியை மென்று சாப்பிடும்போது, அதன் சாறு உங்கள் தொண்டையை அடைந்து அதை ஆற்றும், இறுதியில் உங்கள் இருமலைக் கட்டுப்படுத்தும்.
தேன், இஞ்சி மற்றும் துளசி
சளி அல்லது இருமலின் போது நாம் வெதுவெதுப்பான பானங்களை குடிக்க வேண்டும் என்று நம் அம்மா பாட்டி கூறுவார்கள். ஆனால் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதற்குப் பதிலாக, அதில் சிறிது இஞ்சி மற்றும் துளசியைக் கொதிக்க வைப்பதன் மூலம் அதை மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றவும். துளசி-இஞ்சி தேநீர் உங்கள் சைனஸைத் திறக்க உதவுகிறது மற்றும் தேன் சேர்ப்பது உங்கள் தொண்டையில் உள்ள தசைகளை தளர்த்தும், இருமலை நிறுத்த உதவும்.
மஞ்சள் பால்
மஞ்சள் அல்லது ஹல்டி ஆன்டி-பாக்டீரியல் பண்புகளைக் கொண்ட ஒரு மூலப்பொருளாகும். மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வெதுவெதுப்பான மஞ்சள் பால் சாப்பிடுவது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இது உங்கள் சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து விரைவாக நிவாரணம் அளிக்க உதவும்.
உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது
உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சிறிது தண்ணீரைச் சூடாக்கி, அதில் 1 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். பின்னர் இந்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளிக்கவும், உங்கள் தொண்டை தளர்வதாகவும், வலி குறைவாகவும் உணரலாம். இது உங்கள் இருமலைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
வைட்டமின் சி
வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் அறியப்படுகிறது. இது ஒரு நல்ல தடுப்பு முறையாகும். குளிர்காலத்தில் நெல்லிக்காய், ஆரஞ்சு அல்லது எலுமிச்சையை தண்ணீரில் சாப்பிடுவது சளி மற்றும் இருமலில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். எனவே, இந்த சூப்பர் பயனுள்ள வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் இருமல் மற்றும் சளி தொந்தரவை நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள்.