Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
தலைவலி தாங்கமுடியலையா? 5 நிமிடத்தில் நிவாரணம் பெற இந்த கை வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...
உங்களுக்கு தலைவலி வந்தால், உடனே மாத்திரை போடாமல், முதலில் கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். ஒருசில கை வைத்தியங்கள் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பனி அதிகம் பொழிகிறது என்றே கூற வேண்டும். பொதுவாக பனி அதிகம் பொழியும் போது நிறைய பேர் அடிக்கடி தலைவலியை அனுபவிப்பதுண்டு. பொதுவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக குளிர்காலத்தில் நமது மூளையில் உள்ள செரடோனின் போன்ற கெமிக்கல்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால், அது தலைவலியை உண்டாக்குகிறது.

எந்த வலியை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ள முடியும், ஆனால் தலைவலியை மட்டும் ஒருவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தலைவலியானது அந்த அளவில் சகித்துக் கொள்ள முடியாத அளவில் இருக்கும்.

எப்போதெல்லாம் ஒருவருக்கு தலைவலி ஏற்படுகிறது?
உடலுக்கு தினமும் போதுமான அளவு ஓய்வு கிடைக்க வேண்டும். அவ்வாறு ஓய்வு கிடைக்காமல், அதிக மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமில்லாமை போன்றவை ஒருவருக்கு தலைவலியை வரத்தூண்டும். இது தவிர, குளிர்ச்சியான காலநிலையும் தலைவலி வருவதற்கு முக்கிய காரணாமகும். ஜர்னல் ஆஃப் ஹெட்ஏக் பெயினின் படி, குறைந்த வெப்பநிலைக்கும், அடிக்கடி தலைவலி வருவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது. அதனால் தான் குளிர்காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.
குளிர்காலத்தில் தலைவலி வந்தால், அதற்கு அடிக்கடி மாத்திரை போடுவது நல்லதல்ல. எனவே உங்களுக்கு தலைவலி வந்தால், உடனே மாத்திரை போடாமல், முதலில் கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். ஒருசில கை வைத்தியங்கள் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். இப்போது அந்த மாதிரியான தலைவலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் சில கை வைத்தியங்களைத் தான் பார்க்கப் போகிறோம்.

இஞ்சி
தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க இஞ்சி பெரிதும் உதவி புரியும். அதுவும் இஞ்சியானது வலியைக் குறைப்பது மட்டுமின்றி, செரிமான செயல்முறையை மேம்படுத்தி, செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும். அதற்கு இஞ்சி பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து தலையில் தடவலாம் அல்லது இஞ்சி டீ தயாரித்தும் குடிக்கலாம். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க இஞ்சி சாறுடன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.

காப்ஃபைன்
சளியால் தலைவலியை அனுபவிப்பவரானால், வெதுவெதுப்பான பானங்களைக் குடிக்க முயல வேண்டும். பெரும்பாலும் தலைவலிக்கும் போது காபி அல்லது டீ குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் காபி அல்லது டீயில் உள்ள காப்ஃபைன் மன அழுத்தத்தைக் குறைத்து, மூளையை ரிலாக்ஸ் அடையச் செய்து, தலைவலியைக் குறைக்கிறது.

பட்டை
தலைவலிக்கு உடனடி நிவாரணம் அளிக்க உதவும் மற்றொரு சமையலறை பொருள் தான் பட்டை. அதற்கு பட்டையை அரைத்து பொடி செய்து, அந்த பட்டை பொடியை சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கிராம்பு
மசாலா பொருட்களுள் ஒன்றான கிராம்பில் வலி நிவாரண பண்புகள் உள்ளன. உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது என்றால், சிறிது கிராம்பை எடுத்து தட்டி அதை ஒரு கைக்குட்டையில் வைத்து, அடிக்கடி அதை நுகர்ந்து பாருங்கள். இதனால் தலைவலி வருவதைத் தடுக்கலாம். ஒருவேளை உங்களுக்கு கடுமையான தலைவலி என்றால், 2 துளி கிராம்பு எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயை நெற்றியில் தடவி மசாஜ் செய்தால், தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











