Just In
- 1 hr ago
நீங்க வீட்டில் தயாரிக்கும் இந்த பானங்கள்... ஆபத்தான நோயிடமிருந்து உங்களை பாதுகாக்குமாம் தெரியுமா?
- 1 hr ago
சர்க்கரை நோயாளிகள் மது அருந்தும் போது அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது தெரியுமா?
- 7 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பயணம் சாதகமாக அமையும்...
- 17 hrs ago
பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப இந்த சாக்லேட் ஃபேஸ் பேக்கை போடுங்க..
Don't Miss
- News
பொக்கிஷம்! பேனா விலை என்னவோ ஒன்றரை லட்சம்தான்.. ஆனால் அது அப்பாவுடையதாச்சே.. விஜய் வசந்த் உருக்கம்
- Movies
மெத்தையில் புரண்டபடி குட் நைட் சொன்ன கஸ்தூரி..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
- Finance
மோடி அரசு: ஒரேயொரு அறிவிப்பு.. கொட்டோ கொட்டுது துட்டு..! ஆனா அம்பானி-க்கு நஷ்டம்..!
- Technology
18 ஜிபி ரேம், பிரத்யேக டிஸ்ப்ளே மற்றும் கூலிங் சிஸ்டம் உடன் Asus ROG Phone 6, 6 Pro: தலைசுத்த வைக்கும் அம்சம்!
- Automobiles
வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!
- Sports
பிசிசிஐ-ன் பண ஆசையால் பறிபோன 5வது டெஸ்ட்.. தோல்விக்கு பின்னால் உள்ள காரணம் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
- Travel
ஸ்டார்கேஸிங் செய்து இரவை இனிமையாக கழிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்களுக்கு இந்த மாதிரி படபடப்பு வந்தா? அது ஆபத்தான நுரையீரல் புற்றுநோயோட அறிகுறியாம்... ஜாக்கிரதை!
உயிர் கொல்லி நோயாக புற்றுநோய் உள்ளது. உலகளவில் பெரும்பாலான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். 200 க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்கள் உள்ளன. புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான மிகப்பெரிய ஆபத்து உள்ளது. இருப்பினும் இது புகைபிடிக்காதவர்களுக்கும் ஏற்படலாம். இந்த நோய் ஆரம்ப கட்டங்களில் அரிதாகவே எந்த எச்சரிக்கை அறிகுறிகளையும் உருவாக்குகிறது. எனவே, நுரையீரல் புற்றுநோயை தொடக்க கட்டத்தில் கண்டறிவது கடினம். மீண்டும் மீண்டும் நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற மிகவும் கவலைக்குரிய அறிகுறிகள் தோன்றும் நேரத்தில், புற்றுநோய் ஏற்கனவே பரவியிருக்கலாம்.
இருப்பினும், ஒரு கட்டி உங்கள் இதயத்தில் அழுத்தத்தை உருவாக்குகிறது என்பதற்கு சில அறிகுறிகளும் உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆபத்தான நோயின் குறைவாக அறியப்பட்ட அறிகுறி இதயத் துடிப்பு ஆகும். நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

படபடப்பு
படபடப்பு என்பது விரைவான துடிப்பு அல்லது அசாதாரணமான வேகமான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு என வரையறுக்கப்படுகிறது. நோயாளிகள் அடிக்கடி படபடப்பு ஏற்படுவதை நெஞ்சில் வேகமாக படபடப்பது, ஒரு தவிர்க்கப்பட்ட துடிப்பு அல்லது மார்பில் படபடக்கும் உணர்வு என விவரிக்கிறார்கள். படபடப்பு ஏற்பட்டாலே, அது மாரடைப்போடு தொடர்புபடுத்துகிறார்கள்.

நுரையீரல் புற்றுநோய்
ஐரோப்பிய கார்டியாலஜி ரிவியூ (இசிஆர்) படி, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படபடப்பு ஒரு பொதுவான நிகழ்வாகும். நுரையீரல் இதயத்தின் மீது அழுத்தம் கொடுப்பதால் இது நிகழலாம். இருப்பினும், படபடப்பு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதைக் குறிக்காது. மன அழுத்தம், உடற்பயிற்சி, மருந்து மற்றும் பல தற்காலிக காரணிகள் கூட வேகமாக துடிக்கும், படபடக்கும் அல்லது இதயம் துடிக்கும் இந்த உணர்வுக்கு வழிவகுக்கும்.

நுரையீரல் புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்
படபடப்பு ஒரு அரிய எச்சரிக்கை அறிகுறி என்பதால், நோயின் மற்ற எச்சரிக்கை அறிகுறிகளையும் கவனிக்க மருத்துவர்கள் எச்சரிக்கையாக இருக்க பரிந்துரைக்கின்றனர். நெஞ்சுத் தொற்று, தொடர்ந்து இருமல், இரத்தம் வெளியேறுதல் அல்லது சுவாசம் மற்றும் இருமலின் போது ஏற்படும் வலி ஆகியவை அறிகுறிகளில் அடங்கும். பசியின்மை, காரணம் தெரியாமல் எடை குறைதல், சோர்வு மற்றும் விழுங்குவதில் சிரமம் போன்றவையும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

விரல்களில் வீக்கம்
சிறிய அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 35 சதவீதத்தினருக்கு விரல்களில் அறிகுறி ஏற்படுகிறது. அது, விரல்களின் முனைகள் நிலைகளில் வீக்கம் ஏற்படுவது. முதலில், நகத்தின் அடிப்பகுதி மென்மையாகவும், நகப் படுக்கையைச் சுற்றியுள்ள தோல் பளபளப்பாகவும் மாறும். அடுத்து, நகங்கள் இயல்பை விட அதிகமாக வளைக்கத் தொடங்குகின்றன. இறுதியாக, விரல்களின் முனைகள் வீங்கி, விரல்களின் மென்மையான திசுக்களில் திரவம் சேகரிப்பதால் ஏற்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
புற்றுநோயை உண்டாக்கும் முகவர் நுரையீரலில் உள்ள அசாதாரண செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய் நிகழ்வுகளில், கட்டி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கார்சினோஜென் (புற்றுநோயை உண்டாக்கும் முகவர்) சிகரெட் புகையாகும். சிகரெட் புகைத்தல் நுரையீரல் புற்றுநோய்க்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது. இது அனைத்து நிகழ்வுகளிலும் 80 முதல் 90 சதவிகிதம் ஏற்படும்.

இறுதி குறிப்பு
நுரையீரல் புற்றுநோய் பொதுவாக மரபுரிமையாக வரவில்லை என்றாலும், குறிப்பிட்ட பரம்பரை அல்லாத பிறழ்வுகள் சிலருக்கு இந்த புற்றுநோயை உருவாக்கலாம். ரேடான் வெளிப்பாடு நுரையீரல் புற்றுநோய்க்கான இரண்டாவது முக்கிய காரணமாகும். அதைத் தொடர்ந்து நச்சு இரசாயனங்கள் வெளிப்படும். நோயுடன் தொடர்புடைய ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம். நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங் என்பது சிகிச்சைக்கு மிகவும் தாமதமாகிவிடும் முன் நோயை கண்டறியும் சிறந்த நம்பிக்கையாகும்.