Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
கோடை காலத்தில் உடற்பயிற்சிகள் செய்யும் போது பின்பற்ற வேண்டியவைகள்!
கடுமையான கோடையிலும் நாம் தொடா்ந்து உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம். ஆனால் ஒருசில குறிப்புகளை பின்பற்றினால், நாம் உடற்பயிற்சிகளை நல்ல முறையில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
நாம் இப்போது இளவேனிற் காலத்தில் இருக்கிறோம். இன்னும் கோடை காலத்தின் நடுப்பகுதிக்கு நாம் வரவில்லை. ஆனால் இப்போதே வெயில் நம்மை சுட்டொித்துக் கொண்டிருக்கிறது. வெயில் அதிகமாக இருக்கிறது என்பதற்காக நாம் நமது உடற்பயிற்சிகளைத் கைவிடக்கூடாது. கடுமையான கோடையிலும் நாம் தொடா்ந்து உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம். ஆனால் ஒருசில குறிப்புகளை பின்பற்றினால், நாம் உடற்பயிற்சிகளை நல்ல முறையில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

கோடைக்காலத்தில், கவனமில்லாமல் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகளைச் செய்தால் அதிகமான வெப்பம் மற்றும் வியா்வையின் காரணமாக வெப்ப பக்கவாதம், குமட்டல், தலைவலி, உடலிலிருந்து அதிகமான நீாிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிகமான வெப்பம் நிலவும் இடத்தில் நாம் நெடுநேரம் இருந்தால், நமது உடலில் உள்ள இயற்கையான குளிரூட்டும் அமைப்பு, செயலிழந்து நமக்கும் மயக்கம் மற்றும் வெப்ப பக்கவாதத்தை ஏற்படுத்தும்.
கோடைக்காலத்தில் உடற்பயிற்சிகள் செய்யும் போது, அதிகமான தண்ணீரை மட்டும் குடித்தால் போதாதது. ஏனெனில் நமது உடலில் இருந்து வெளியேறும் வியா்வையின் மூலம் நமது உடலில் இருந்து நீா் மட்டும் பெருமளவில் வெளியேறுவதில்லை. மாறாக நமது உடலில் இருந்து தாதுக்கள் (Electrolyte) மற்றும் உப்பு போன்றவையும் அதிக அளவில் வெளியேறுகின்றன. தாதுக்கள் நமது உடலில் உள்ள நீா்ச்சத்தை சமச்சீராக வைக்க உதவுகின்றன.
நமது உடலில் பொட்டாசியம், சோடியம், குளோரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த தாதுக்களில் சமச்சீரற்ற நிலை ஏற்பட்டால் தசை பிடிப்புகள், சுளுக்கு, பலவீனம், இதயத் துடிப்பில் கோளாறு, முடக்குவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சில நேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டு, இறப்பு கூட ஏற்படலாம்.
ஆகவே பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றி, கோடைக்காலத்தில் பாதுகாப்பான முறையில் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

பகல் நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யாமல் இருத்தல்
கோடை காலத்தில் பகல் நேரத்தில் வெயிலும், வெப்பமும் அதிகமாக இருப்பதால், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை உடற்பயிற்சிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கோடை காலத்தில் உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு தகுந்த நேரம் அதிகாலை ஆகும். அதிகாலையில் எழ முடியவில்லை என்றால், சூாியன் மறைந்த பின்பு உடற்பயிற்சிகளைச் செய்யலாம். வானிலை அறிவிப்பைத் தொிந்து கொண்டு, ஓசோன் படலம் மற்றும் காற்றில் அதிக மாசு இருந்தால், வீட்டிலிருந்தே உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது.

தளா்வான மற்றும் மங்கலான வண்ண உடைகளை அணிவது நல்லது
அடர் நிற ஆடைகள் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஆனால் வண்ணம் அடா்த்தி குறைவான ஆடைகள் வெப்பத்தை உறிஞ்சாமல் வெளியே தள்ளிவிடும். மேலும் இறுக்கமான ஆடைகளை அணிந்தால், வெப்பம் நம்மை நேரடியாக தாக்கும். அதோடு நமக்கு அசெளகாியம் ஏற்படும். மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படும். ஆகவே தளா்வான ஆடைகளை அணிய வேண்டும். அப்போது காற்று நமது ஆடைகளுக்குள் மிக எளிதாகச் சென்று, நமது தோல் முழுவதும் பரவி நம்மை குளிா்ச்சியாக வைத்திருக்கும். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்யும் போது பருத்தி ஆடைகளை அணிந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் பருத்தி ஆடைகள் வியா்வையை மிக எளிதாக உறிஞ்சிவிடும்.

சன்ஸ்கிரீனை பூசுவது நல்லது
கோடைக்காலமாக இருந்தாலும், குளிா்காலமாக இருந்தாலும், வானம் மேக மூட்டத்துடன் இருந்தாலும், வெளியில் உடற்பயிற்சிகளைச் செய்யும் போது சன்ஸ்கிரீனைப் பூசிக் கொள்வது நல்லது. அதாவது SPF 30 அல்லது அதற்கு அதிகமான அளவில் பூசிக் கொள்வது நல்லது. அது சூாிய கதிா்களின் வெப்பம் நமது தோலை நேரடியாக தாக்காமல் பாதுகாக்கும். அதோடு விரைவில் தோல் முதுமை அடையாமலும், தோலில் புற்றுநோய் ஏற்படாமலும் பாதுகாக்கும். சூாிய வெளிச்சத்தில் நீண்ட நேரம் இல்லாமல் இருப்பது நல்லது.

தண்ணீரை எடுத்துச் செல்வது
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக குறைந்தது 2 டம்ளா் தண்ணீா் குடிப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வதற்காகச் செல்லும் போது தண்ணீரையும் எடுத்துச் செல்வது நல்லது. உடற்பயிற்சிகளுக்கு இடையில் சிறிதளவு தண்ணீா் குடிப்பது நல்லது. உடற்பயிற்சி முடிந்த பின்பு அதிக அளவு தண்ணீா் அருந்த வேண்டும். அதோடு அதிகமான தாதுக்களைத் தரக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். அதே நேரத்தில் கலோாிகள் அதிகம் நிறைந்த விளையாட்டுக்கு ஊக்கம் தரும் பானங்கள் அருந்துவதைத் தவிா்க்க வேண்டும்.

உடலில் ஏற்படும் எச்சாிக்கை அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும்
மயக்கம் மற்றும் குமட்டல் வரும் அளவிற்கு உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நமது இதயத்துடிப்பு அதிவேகத்தில் இருந்தால் அல்லது மிதமான தலைவலி ஏற்பட்டால் அல்லது உடலில் பலவீனம் ஏற்பட்டால் அல்லது மயக்கம் வருவது போல் தொிந்தால் அல்லது தலைவலி அதிகாித்தால் அல்லது தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அல்லது வாந்தி ஏற்பட்டால், உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டும். பின் தளா்வாக அமா்ந்து, தண்ணீா் அருந்த வேண்டும். அதோடு சத்து நிறைந்த பழங்கள் மற்றும் திண்பண்டங்களை சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications