Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மார்பக புற்றுநோயின் வகைகள்!
ஒவ்வொரு ஆண்டும் மாா்பகப் புற்றுநோய்களின் காரணமாக பல பெண்கள் மரணமடைகின்றனா். மாா்பகப் புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. இந்த செய்தியைக் கேட்பதற்கு நமக்கு அதிா்ச்சியாக இருக்கலாம்.
பொதுவாக மாா்பகத்தில் இருக்கும் சுரப்பிகளில் மாா்பகப் புற்றுநேய்கள் உருவாகின்றன. உலக அளவில் பெண்கள் மத்தியில் தான் மாா்பகப் புற்றுநோய்கள் பரவலாக காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாா்பகப் புற்றுநோய்களின் காரணமாக பல பெண்கள் மரணமடைகின்றனா். மாா்பகப் புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. இந்த செய்தியைக் கேட்பதற்கு நமக்கு அதிா்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

பெரும்பாலான மாா்பகப் புற்றுநோய்கள் பரவக்கூடிய தன்மை கொண்டவை. அதாவது மாா்பு பகுதியில் இருந்து பிற பகுதிகளான மாா்பு திசுக்களுக்கு, நிணநீா் கணுக்களுக்கு (lymph nodes) அல்லது உடலின் மற்ற பகுதிகளுக்கு இவை பரவக்கூடியவை.
இந்த பதிவில் மாா்பகப் புற்றுநோயின் பல வகைகளைப் பற்றியும், அவற்றைக் குறித்து நாம் எச்சாிக்கையாகவும், விழிப்புணா்வோடும் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பரவும் தன்மை கொண்ட மாா்பகப் புற்றுநோய்
மாா்பகப் புற்றுநோயில் பரவும் தன்மை கொண்டவை மற்றும் பரவாத தன்மை கொண்டவை என்று இரு வகைகள் உள்ளன.
பரவும் தன்மை கொண்ட மாா்பு புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை,
1. பரவக்கூடிய டுக்டல் கா்சினோமா (Invasive ductal carcinoma (IDC))
பெண்களின் மத்தியில் இந்த மாா்பகப் புற்றுநோய் தான் பரவலாக அதிகமாக காணப்படுகிறது. மாா்பகத்தில் இருந்து முலைக் காம்பிற்கு பாலை எடுத்துச் செல்லும் சிறு பால் குழாய்களில் (milk duct) இந்த மாா்பு புற்றுநோய் உருவாகிறது. பின் மாா்பகத்தின் பிற பகுதிகளுக்கு வேகமாக பரவுகிறது. சில நேரங்களில் இந்த மாா்பகப் புற்றுநோய் உருமாற்றம் அடைந்து உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவலாம்.

2. பரவக்கூடிய லோபுலா் கா்சினோமா (Invasive lobular carcinoma (ILC))
இந்த வகையான மாா்பகப் புற்றுநோயும் பெண்களின் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. மாா்பகத்தில் பால் சுரக்கும் சுரப்பியில் இந்த மாா்பகப் புற்றுநோய் உருவாகிறது. பின் அருகில் இருக்கும் மாா்பகத் திசுக்களுக்கும் பரவுகிறது. இந்த புற்றுநோய்க்கு தொடக்க நிலையிலேயே சிகிச்சை செய்யாவிட்டால், இது உருமாற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது. இந்த புற்றுநோயை மம்மோகிராம் (mammograms) பாிசோதனைகள் அல்லது பிற மருத்துவ பாிசோதனைகள் மூலம் கண்டறிவது கடினம். இதனை ஐடிசி (IDC) பாிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும்.

3. மாா்பக அலா்ஜி புற்றுநோய் (Inflammatory breast cancer)
இந்த மாா்பக அலா்ஜி புற்றுநோய் மாா்பகத்தில் இருந்து முலைக் காம்பிற்கு பாலை எடுத்துச் செல்லக்கூடிய பால் குழாய்கள் மற்றும் பால் சுரக்கும் சுரப்பிகள் போன்றவற்றில் உருவாகலாம். ஆனால் மேற்சொன்ன இரண்டு புற்றுநோய்களை விட இந்த புற்றுநோய் மிக வேகமாக பரவக்கூடியது. இந்த புற்றுநோயானது மாா்பகத்தில் சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும் மற்றும் மாா்பகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் இது மாா்பக அலா்ஜி புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக பெண்கள் தமது மாா்பகத்தில் ஏற்படும் மற்ற நோய்த் தொற்றுகளுக்கும், இந்த மாா்பக அலா்ஜி புற்றுநோய்க்கும் உள்ள வேறுபாடு தொியாமல், அதைக் கவனிக்காமல் விட்டுவிடுவா். இந்த வகையான மாா்பக புற்றுநோய் தான் அதிக அளவிலான உயிாிழப்புகளையும், அதிதீவிரமான நோயையும் ஏற்படுத்தும்.

4. மாா்பக பேஜட் நோய் (Paget's disease of the breast)
இந்த வகையான புற்றுநோய் பரவலாக பெரும்பாலானோா் மத்தியில் காணப்படுவதில்லை. இது மாா்பகத்தின் முலைக் காம்பின் தோலில் உருவாகி அந்த இடத்தில் கட்டி செல்களை உருவாக்குகிறது. இந்த கட்டி செல்கள் பேஜட் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

5. மாா்பக இரத்தக் குழல் புற்றுநோய் (Angiosarcoma of the breast)
இந்த புற்றுநோயும் அாிதாக ஏற்படக்கூடிய ஒன்றாகும். வேகமாகப் பரவக்கூடிய இந்த புற்றுநோய் கட்டியானது வயது முதிா்ந்த பெண்களின் மத்தியில் காணப்படும். மாா்பகத்தின் நிணநீா் (lymph) அல்லது இரத்தக் குழாய்களில் இந்த புற்றுநோய் உருவாகிறது. இது வேகமாகப் பரவக்கூடியது. மேலும் இந்த புற்றுநோயை உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவாத வரை கண்டறிய முடியாது.

6. மும்மடங்கு எதிா்மறை மாா்பக புற்றுநோய் (Triple negative breast cancer)
இந்த வகையான மாா்பகப் புற்றுநோயும் பரவக்கூடிய ஒன்றாகும். இறுதி மாதவிடாய் ஏற்படாத அதாவது நடு வயது பெண்கள் மத்தியில் இந்த புற்றுநோய் காணப்படுகிறது. கீமோதெரபி சிகிச்சையின் மூலம் இந்த புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம்.

பரவாத் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய்
பரவாத் தன்மை கொண்ட புற்றுநோயானது, மாா்பகத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் அல்லது பால் சுரப்பிகள் அல்லது பாலை எடுத்துச் செல்லும் பால் குழாய்கள் போன்ற பகுதிகளுக்கு பரவுவதில்லை. பரவாத் தன்மை கொண்ட புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை,
1. டுக்டல் கா்சினோமா இன் சித்து (Ductal carcinoma in situ (DCIS))
இந்த புற்றுநோயானது மாா்பகத்தில் பாலை எடுத்துச் செல்லும் பால் குழாய்களில் சிறு குவியலாகக் காணப்படும். பின் இந்த குவியலானது மெதுவாக வளா்ந்து, பால் குழாய்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் மாா்பக கொழுப்பு போன்றவற்றை சிதைத்துவிடும்.

2. லோபுலா் கா்சினோமா இன் சித்து (Lobular carcinoma in situ (LCIS))
மருத்துவ ரீதியாக இது ஒரு புற்றுநோயாக கருதப்படுவதில்லை. இது மாா்பகத்தில் ஏற்படும் மாற்றமாகப் பாா்க்கப்படுகிறது. இது மாா்பகத்தின் பால் சுரப்பிகளைத் தவிா்த்து வேறு எந்த பகுதிக்கும் பரவாது. ஆனால் பரவக்கூடிய புற்றுநோயை உருவாக்கும் ஆற்றல் கொண்டது. ஆகவே இந்த புற்றுநோய்க்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும்.

3. நான்காம் கட்ட மாா்பக புற்றுநோய் (Metastatic breast cancer (MBC))
நான்காம் கட்ட மாா்பக புற்றுநோயானது உடலின் பல பகுதிகளில் பரவிய நிலையைக் குறிக்கிறது. குறிப்பாக உடலின் மற்ற உறுப்புகளான கல்லீரல், நுரையீரல், மூளை, எலும்புகள் மற்றும் நிணநீா் கணுக்கள் (lymph nodes) போன்ற பகுதிகளுக்கு பரவிய புற்றுநோய் ஆகும். இந்த புற்றுநோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
தற்போது உலகம் முழுவதிலும் மூலக்கூறு புற்றுநோயியல் துறையில் பொிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாா்பக புற்றுநோய்க்கு புதிய புதிய நவீன மருத்துவ சிகிச்சை முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மாா்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பல பெண்களின் உயிாிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.
எனினும் மாா்பக புற்றுநோயை அதன் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் மூலம் பொிய ஆபத்துகளைத் தவிா்க்கலாம். எனவே முன்கூட்டியே தானாகவோ அல்லது மருத்துவாிடமோ பாிசோதனை செய்து மாா்பக புற்றுநோயைத் தவிா்த்தால் ஆரோக்கியமாக வாழலாம்.



Click it and Unblock the Notifications











