Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!
கொரோனா குடும்பத்தை சார்ந்த இந்த COVID-19 வைரஸ் தொற்று ஒருவருக்கு இருக்கிறதா என்பதை கண்டறிய இரத்தத்தையோ அல்லது சிறுநீரையோ பரிசோதிக்க மாட்டார்கள். இந்த பரிசோதனைக்கு ஒருவரது மூக்கு சளியை தான் சேகரிப்பர்.
உலகை அச்சுறுத்தி வரும் COVID-19 எனும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. உலக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. COVID-19 வைரஸ் பரவுவதை தடுக்கவும், தப்பிக்கவும் ஒரே வழி, தனிமைப்படுத்துதல். உலகம் முழுவதிலும் பரிந்துரைக்கப்படும் ஒரே விஷயம் என்றால், தனிமைப்படுத்துதல் தான். நமக்கு நோய் தொற்று உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியவே தனிமையில் இருப்பது தான் சிறந்தது. அப்போது தான் நமக்கு நோய் தொற்று இருந்தாலும், அது பிறருக்கு பரவாமல் தடுக்கலாம்.

உலக மக்களை தனது அச்சத்தால் ஆட்டிப்படைத்து வரும் இந்த COVID-19, மக்களது மனதில் ஏராளமான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இந்த வைரஸ் இருந்தால் நம்மை தனியாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவார்கள் என்ற பயம் பலருக்கு உள்ளது. அதை யாரும் மறுத்துவிட முடியாது. தனிமைப்படுத்துவது என்பது நமக்காகவும், நம்மை சார்ந்தவர்களுக்காகவும் கூறப்படும் ஒரு விஷயம். அதை முறையாக நாம் பின்பற்றினாலே, சுலபமாக நம்மையும், நம் குடும்பத்தையும் நோய் தொற்றில் இருந்து காப்பாற்றி விடலாம்.
இப்போது, COVID-19 பரிசோதனை குறித்து பொதுவாக அனைவரது மனதிலும் எழக்கூடிய சில கேள்விகளுக்கான விடையை தற்போது உங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளோம். இதை படித்துவிட்டாவது, இந்த COVID-19-ஐ கண்டு அஞ்சாமல், துணிந்து நின்று விரட்டியடிக்க முன் வாருங்கள்...

COVID-19 பரிசோதனை
கொரோனா குடும்பத்தை சார்ந்த இந்த COVID-19 வைரஸ் தொற்று ஒருவருக்கு இருக்கிறதா என்பதை கண்டறிய இரத்தத்தையோ அல்லது சிறுநீரையோ பரிசோதிக்க மாட்டார்கள். பொதுவாக நோய் தொற்று என்றால் அதை பரிசோதிக்க இரத்தம் அல்லது சிறுநீரை தானே கேட்பார்கள் என்று யோசிக்கலாம். ஆனால், இந்த COVID-19 வைரஸ் தொற்றை கண்டறிய ஒருவரிடம் இரத்தம் அல்லது சிறுநீரை கேட்க மாட்டார்கள். இந்த சோதனை சற்று முரட்டுத்தனமானது என்று கூட கூறலாம். ஆனால், விரைவில் செய்துவிட கூடிய ஒன்று தான். ஆனால் இவற்றையெல்லாம் விட, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் சோதனைக்குச் செல்லும் முன்பு உங்கள் அறிகுறிகளை பல முறை மதிப்பாய்வு செய்ய தவறாதீர்கள்.

மூக்கு சளி பரிசோதனை
COVID-19 பரிசோதனைக்கு ஒருவரது மூக்கு சளியை தான் சேகரிப்பார்கள். ஒரு நீளமான குழாயை மூக்குனுள் செலுத்தி, தொண்டை பகுதியில் உள்ள சளியை எடுப்பார்கள். இந்த பரிசோதனைக்கு தேவையானது என்றால், அமைதியாக இருப்பது தான். இதனை எடுக்க 10 முதல் 15 வினாடிகள் கூட ஆகாது. எடுக்கப்பட்ட அந்த சளி ஒரு கண்டைனரில் அடைக்கப்பட்டு, சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல்
இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்த வழிகாட்டுதல்களின்படி, ஆர்.என்.ஏ வைரஸ்களுக்கான நிகழ்நேர பாலிமரைஸ் சங்கிலி எதிர்வினை திரையிடலுக்கான சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்கள் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும். கொரோனா பரிசோதனைக்கான ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின்படி, கொரோனா ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரால் கேட்கப்படும் போது மட்டுமே பரிசோதிக்கப்படும்.

தனியார் சோதனை கூடங்களில் இரத்த பரிசோதனை
இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, நோயாளியிடமிருந்து சுவாச மாதிரிகள் சேகரிக்கும் போது பொருத்தமான உயிர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கும் ஒரு தனி மாதிரி சேகரிப்பு தளத்தை கூட உருவாக்கலாம்.

சோதனைக்கான கட்டணம்
கொரோனா பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.4,500 ஐ தாண்டக்கூடாது என்று தேசிய பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. இதில் ஸ்கிரீனிங் சோதனையாக ரூ.1,500 மற்றும் உறுதிப்படுத்தல் சோதனைக்கு கூடுதலாக ரூ.3,000 ஆகியவை இதில் அடங்கும். இதன் மூலம் நாட்டில் மொத்தம் 116 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை, சுமார் 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரையிலான சோதனைகள் நாளொன்றிற்கு மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, இந்த ஆய்வகங்களானது நாளொன்றிற்கு 10 ஆயிரம் மற்றும் ஒரு வாரத்திற்கு 50 முதல் 70 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ள கூடிய அளவு திறன் உடையவை. இதுவே பிரான்ஸை பொருத்தவரை, வாரத்திற்கு 10 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. பிரட்டனில் வாரத்திற்கு 16 ஆயிரம் சோதனைகளும், அமெரிக்காவில் 26 ஆயிரம் சோதனைகளும், ஜெர்மனியில் 42 ஆயிரம் மற்றும் இத்தாலியில் 52 ஆயிரம் சோதனைகளும் வாரத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது. கொரியாவில் மட்டும் ஒவ்வொரு வாரத்திற்கும் சுமார் 80 ஆயிரம் சோதனைகள் நடைபெறுகிறது.

அரசு ஆய்வகங்களிலும் கொரோனா சோதனை
தேசிய ஆய்வகங்களை தவிர, அனைத்து அரசு ஆய்வங்களிலும் கொரோனா குறித்த மருத்துவ சோதனை மேற்கொள்ள தேசிய ஆய்வகங்கள் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில், இந்தியா முழுவதிலும் கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ள மொத்தம் 116 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வைரஸின் தன்மையை கண்டறிவது
விஞ்ஞான மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆய்வகங்கள், பி.எஸ்.எல் -3 (உயிர் பாதுகாப்பு நிலை) வசதிகளுடன், வைரஸ்கள் கலாச்சாரம் மற்றும் ஆராய்ச்சிக்கான கூடுதல் சோதனை மற்றும் சரிபார்ப்பு தளங்களாக செயல்பட அனுமதிக்கின்றன. மருத்துவ மாதிரிகள் சேகரிப்பதற்காக இந்த ஆய்வகங்களுடன் ஒத்துழைக்குமாறு அரசு மருத்துவமனைகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

சோதனை முடிவுகள் வரும் வரை காத்திருக்கவும்
சோதனை செய்யப்பட்ட பிறகு, உங்களது பயண பட்டியலின் அடிப்படையில் உடனடியாக சேர வலியுறுத்துவர். சோதனையில் முடிவு பாசிடிவ்வாக வந்தாலும், பதற்றப்படாமல் உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால், உங்களுக்கு தேவையான போர்வை, தண்ணீர் அல்லது வீட்டு உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஓய்வு மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் தங்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பணியை அரசு சிறந்த முறையில் பார்த்துக் கொள்ளும்.

தனிமைப்படுத்துதல் நினைத்து பயம் கொள்ளாதீர்
எதுவாக இருந்தாலும், சோதனையின் முடிவுகள் வருவதற்கு ஒன்று அல்லது 2 நாட்கள் ஆகும். அதுவரை நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டியது அவசியம். அப்படியே நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும் அதற்காக பயப்பட தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் உங்கள் மொபைல் போனை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அதன்மூலம், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பிலேயே இருக்கலாம். எனவே, கொரோனா கண்டு அச்சம் தேவையில்லை.
முன்னெச்சரிக்கையும், நோய் தொற்று ஏற்பட்டால் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தாலுமே போதுமானது. குணப்படுத்த கூடிய ஒரு நோய் தொற்று என்பதால், எவ்வித அச்ச உணர்வுமின்றி, தங்களது குடும்பத்தினருடன் இருப்பதற்கான நேரமாக கருதி நிம்மதியாக ஓய்வெடுங்கள்.



Click it and Unblock the Notifications