Latest Updates
-
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா?
இந்தியா மிகவும் வித்தியாசமான அரசியலமைப்பைக் கொண்ட நாடாகும். சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்தார். மோடி அவர்கள் நீண்ட காலம் பதவியில் இருந்தவராக இருக்கும்போது மிகவும் குறைவான காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் யாரென்று கேள்வி நமக்குள் தன்னிச்சையாக எழும்.

மிகவும் குறைவான காலம் என்று வரும் போது வருடங்கள், மாதங்கள் அல்ல சில நாட்கள் மட்டுமே இந்தியாவின் உயரிய பதவியில் அமர்ந்த ஒருவரும் இருக்கிறார். இரண்டு முறை அவர் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தும் அவர் மொத்தம் 26 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்தார். இது கேட்பதற்கு நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அப்படி நடந்த வரலாறு இந்தியாவில் உள்ளது. அவர் யார்? அவர் ஏன் 26 நாட்கள் மட்டும் பிரதமர் பதவியில் அமர்ந்தார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குல்சாரிலால் நந்தா
குல்சாரிலால் நந்தா, இரண்டு முறை 13 நாட்கள் மட்டுமே பதவி வகித்து, இந்தியாவின் மிகக் குறுகிய காலம் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகித்தவர் என்றே பெருமையைப் பெற்றுள்ளார். ஆனால் சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான அவர் இந்தியாவின் முக்கிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகவும் விளங்கினார். அவர் ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவராக இருந்தபோதிலும், இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை எதிர்த்தார், பின்னர் கட்சியிலிருந்து விலகினார்.
எப்போது பிரதமராக பதவியேற்றார்?
1964-ல் நேருவின் மறைவுக்குப் பின்னரும், பின்னர் 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகும் குல்சாரிலால் நந்தா இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை அவர்தான் உருவாக்கினார் என்பது பலரும் அறியாததாகும்.
அரசியல் தொடக்கம்
குல்சாரிலால் நந்தா 1898 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்தில் (தற்போதைய பாகிஸ்தானில்) உள்ள சியால்கோட்டில் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அவர் பெற்ற பொருளாதாரக் கல்வியும், பொதுவுடமைக் கொள்கை மீதான அவரது நம்பிக்கையையும், அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மகாத்மா காந்தியின் தலைமையில் பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். தொழிலாளர் சக்தியை ஒன்றிணைப்பதில் அவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவர் 1916 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் இந்தியாவின் மிகப் பழமையான ஜவுளித் தொழிலாளர் சங்கமான மஸ்தூர் மகாஜன் சங்கத்தை அமைக்க உதவினார்.
இதைத்தொடர்ந்து, அவர் நாட்டில் தொழிலாளர் உரிமைகளுக்கான வழிகாட்டியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, அந்த நோக்கத்திற்காகப் போராடிய பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். 1947-ல் ஜெனீவா சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்ற அவர், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சோசலிசத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அப்போது சோசலிசத்தைப் பின்பற்றிய பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார். 1957-ல் குஜராத்தின் சபர்காந்தா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் இந்திய ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
பதவி மீது ஆசை இல்லாதவர்
1964-ல் ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, இந்தியா சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் வந்தது. நேருவின் சித்தாந்தத்துடன் ஒரு ஜனநாயகத்தை இந்தியா நிலைநிறுத்த முடியுமா என்பதை உலகம் காண விரும்பியது. மேலும், சீனாவுடனான போரிலிருந்து மீண்டு வந்த நிலையில், அவருடைய தற்காலிகத் தலைமை இந்தியாவின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் அமைந்தது. இந்தியா கடுமையான உணவுப் பஞ்சம், நிலையற்ற அரசியல் ஆகியவற்றை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 13 நாட்களுக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரி அவருக்குப் பதிலாக பிரதமராக பதவியேற்றார்.
1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்குப் பிறகு மீண்டும் வரலாறு திரும்பியது. இருப்பினும், இந்த முறை, பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு இந்திய அமைச்சரவை உறுப்பினர்கள் அவரை ஊக்குவித்தனர். ஆனால், சோசலிச சித்தாந்தத்தைக் கொண்டிருந்த அவர் ஒரு அதிகாரப் போட்டியின் அங்கமாக இருக்க விரும்பாததால், அவர் தயக்கம் காட்டினார் என்று அவரது மகள் புஷ்பா நாயக் 1996-ல் இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இரு முறையும் அவர் பதவியில் இருந்த குறுகிய காலம், தேசத்தின் கட்டமைப்பில் எந்தவொரு நீடித்த மாற்றங்களையும் அவரால் செய்ய முடியாமல் தடுத்தது. ஆயினும், ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் அவர் மிகவும் வெளிப்படையாக இருந்தார். அவர் குறுகிய காலமே பிரதமராக இருந்திருந்தாலும் இந்திய வரலாற்றில் அவரின் பெயரை ஒருபோதும் தவிர்க்க முடியாது.



Click it and Unblock the Notifications
