பாபா வாங்கவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா?

இன்று வெனிசுலாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட 162 பேர் இந்த நிலநடுக்கத்தில் இறந்துள்ளனர், 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. இந்த செய்தி உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உலகத் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Venezuela Earthquake Baba Vanga 2026 Prediction About Earthquakes

இந்த இயற்கைப் பேரழிவு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் அதே நேரத்தில் பலரது கவனம் பாபா வாங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் பக்கம் திரும்பியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் நடக்கப்போகும் பல்வேறு விஷயங்கள் பற்றி பாபா வாங்கா கணித்துள்ளார். அவரது கணிப்புகளில் இயற்கைப் பேரழிவுகள் முதல் பல்வேறு ஆபத்தான கணிப்புகளும் அடங்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

யார் இந்த பாபா வாங்கா?

"பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்பட்ட பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டில் பேரழிவு தரும் நிகழ்வுகள் நிகழும் என்று கணித்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் மூன்றாம் உலகப் போரின் தொடக்கத்துடன் கூடிய மிகக் கடுமையான நிலநடுக்கங்கள் மற்றும் நவம்பர் மாதத்தில் வேற்றுலக உயிரினங்களுடனான மனிதகுலத்தின் முதல் தொடர்பு ஆகியவை அடங்கும். வாய்மொழியாகப் பகிரப்பட்டு அவரது ஆதரவாளர்களால் விளக்கமளிக்கப்பட்ட அவரது தீர்க்கதரிசனங்கள், அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் விண்வெளியில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து உலகம் முழுவதும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. அவரது கணிப்பின் படி தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அவரது கணிப்பின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நிலநடுக்கங்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள்

பாபா வாங்காவின் கணிப்புகளில், நிலநடுக்கங்கள் மற்றும் பிற இயற்கை சீற்றங்கள், அத்துடன் பல்வேறு வகையான காலநிலை மாற்றங்கள் ஆகியவை பூமியின் மேற்பரப்பில் 7 முதல் 8 சதவீதம் வரையிலான பகுதியில் அழிவை ஏற்படுத்தும் என்று அவர் கணித்திருந்தார். இத்தகைய பேரிடர்கள் நிகழும் பட்சத்தில், ஏற்கனவே மோசமாக உள்ள இயற்கை சீற்றங்கள் மற்றும் வெப்ப அலைகளின் பாதிப்புகள் மேலும் தீவிரமடையக்கூடும். குறிப்பிட்ட பகுதிகள் என்று எதுவும் சுட்டிக்காட்டப்படாவிட்டாலும், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிராந்தியங்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வெனிசுலாவில் அதைவிட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளைப் புவிசார் ஆய்வுகள் சுட்டிக்காட்டி வரும் நிலையில், வாங்காவைப் போன்றவர்களின் கணிப்புகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. அறிக்கைகளின்படி, உலகம் முழுவதும் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

வல்லரசு நாடுகளிடையே போர்

இயற்கைப் பேரழிவுகளைத் தொடர்ந்து, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகள் சம்பந்தப்பட்ட கிழக்குப் பிராந்திய மோதல்களால் தூண்டப்படக்கூடிய ஒரு போரை பற்றி பாபா வங்கா கணித்துள்ளார். தைவான் விவகாரத்தில் சீனா மீதான அழுத்தத்தை அமெரிக்கா அதிகரிக்க முயல்வது மற்றும் அமெரிக்கா-ரஷ்யா இடையே வளர்ந்து வரும் மோதல் சூழல் போன்றவற்றால் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற வாய்ப்புள்ளதாகவே அவர்களை பின்பற்றுபவர்கள் நம்புகின்றனர். அதேவேளையில், இந்தப் போர் முழுமையான அழிவின் மூலம் உலக முடிவை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

Story first published: Thursday, June 25, 2026, 21:02 [IST]
Desktop Bottom Promotion