Latest Updates
-
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா?
இந்தியா சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரபலமான நாடாக இருந்து வருகிறது. இந்தியா பொதுவாக அனைவரையும் வரவேற்கும், பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த பிரபலமானக் கருத்தை பொய்யாக்கும் வகையில், இந்தியாவின் குடிமக்கள் செல்வதற்குத் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அல்லது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்ட பல இடங்கள் இந்தியாவிற்குள்ளேயே இருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடியுமா?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டுத் தூதரக ஒப்பந்தங்கள் அல்லது குறிப்பிட்ட வர்த்தகக் கொள்கைகள் என இந்த இடங்களுக்குள் இந்தியர்கள் நுழைய பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Free Kasol Cafe
இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள கசோல் கிராமத்தில் அமைந்துள்ள 'ஃப்ரீ கசோல் கஃபே' (Free Kasol Cafe), இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் இந்தியர்களுக்குச் சேவை வழங்க மறுப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கியமாக இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவை அளிக்கும் இந்தக் கஃபேவில், இந்தியப் பார்வையாளர்களுக்கு உணவிற்கான பட்டியலைக் கூட வழங்க மறுத்த சம்பவங்கள் இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டன.
Red Lollipop Hotel, Tamil Nadu
சென்னையில் உள்ள ரெட் லாலிபாப் ஹோட்டல், சர்வதேசப் பயணிகளுக்கான ஒரு பிரத்யேக இடமாகும். இந்த ஹோட்டல் நிர்வாகத்தின் கொள்கைப்படி, இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு, வெளிநாட்டு விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது வெளிநாட்டவர்களுக்காக பிரத்யேக சேவைகளை வழங்கும் ஹோட்டலாகும், மேலும் பாஸ்போர்ட்டுடன் மட்டுமே விருந்தினர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஹோட்டல், இந்தியாவிற்கு முதன்முறையாக வரும் சர்வதேசப் பயணிகளுக்காக மட்டுமேயானது என்றும், 'இந்தியர்களுக்கு அனுமதி இல்லை' என்ற விதி தங்களின் விளம்பர உத்தியின் ஒரு பகுதி என்றும் நிர்வாகம் கூறுகிறது.
கோவாவில் உள்ள வெளிநாட்டினருக்கான பீச்
கோவா அதன் கடற்கரைகள், இரவு நேர பார்ட்டிகள் மற்றும் சுற்றுலாச் சூழலுக்குப் பெயர் பெற்றது. 40-க்கும் மேற்பட்ட கடற்கரைகளைக் கொண்டுள்ள இது, உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இருப்பினும், இங்குள்ள அனைத்து கடற்கரைகளிலும் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில கடற்கரைகள் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியர்களை தடைசெய்ய அதிகாரப்பூர்வ சட்டம் எதுவும் இல்லை என்றாலும், சில தற்காலிகக் கடைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் இந்தியர்களை வித்தியாசமாக நடத்துகிறார்கள். வெளிநாட்டுப் பெண்களுக்கு ப்ரைவசியை வழங்குவதற்காகவே அவ்வாறு செய்வதாகவும், தேவையற்ற கவனம் அல்லது கேலி கிண்டல்களிலிருந்து சர்வதேச விருந்தினர்களைப் பாதுகாப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யன் காலனி, தமிழ்நாடு
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அருகில், ரஷ்யப் பொறியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் வசிக்கும் "ரஷ்யன் காலனி" என்ற குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. 1800-களில் ரஷ்யர்களால் உருவாக்கப்பட்ட இக்குடியிருப்புப் பகுதிக்குள் இந்தியக் குடிமக்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை. இது ஒரு சுற்றுலாத் தலமாக மாறியிருந்தாலும், இது ஒரு தனியார் குடியிருப்புப் பகுதியாக இருப்பதால், ரஷ்யத் தூதரகத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெறாமல் இந்தியர்கள் பொதுவாக உள்ளே நுழைய முடியாது.
வெளிநாட்டினருக்கான பாண்டிச்சேரி கடற்கரைகள்
கோவா கடற்கரைகளில் மட்டுமல்ல, புதுச்சேரியின் சில கடற்கரைகளிலும் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாட்டை நீங்கள் காணலாம். இந்தியர்கள் உள்ளே நுழைவதைத் தடுப்பதற்காக, கடற்கரையோரக் கடைகள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் கயிறுகள் அல்லது தடுப்புகளை அமைத்திருப்பதை அங்கு காண முடியும்.
நார்புலிங்கா கஃபே (Norbulinka Cafe), தர்மசாலா
தர்மசாலாவில் அமைந்துள்ள 'நார்புலிங்கா கஃபே' (Norbulinka Cafe), அழகான தோட்டங்கள் மற்றும் மடாலயங்களால் சூழப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த அழகிய இடத்திற்குள் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள் கூட இதன் வளாகத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிராட்லேண்ட்ஸ் ஹோட்டல், சென்னை
சென்னையில் அமைந்துள்ள இந்த விடுதி, இந்தியர்களுக்கு அனுமதி அளிக்காமல் வெளிநாட்டினரை மட்டுமே வரவேற்கும் இந்தியாவின் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். இந்த விடுதி 'இந்தியர்களுக்கு அனுமதியில்லை' என்ற கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றுகிறது; எனவே, வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு தங்கும் வசதி வழங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
