Latest Updates
-
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா?
மூட்டு வலி இருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்பது உண்மையா?
துவரை வயதானவர்கள், நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவர்களின் பட்டியலில் விஞ்ஞான பரிசோதனையில் தப்பிய நோயாளிகளின் குழு மூட்டு வலி உள்ளவர்கள் என்பதை நாம் க
இந்தியாவில் கொரோனா என்னும் COVID-19 வைரஸின் தாக்குதலுக்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வயது அல்லது பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டாது. ஆனால் உலகளாவிய தரவுகளின் படி, வயதானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், அது கடுமையான சிக்கல்களை உண்டாக்குவதோடு, இறப்பையும் உண்டாக்குகிறது.

அதோடு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களும் COVID-19 வைரஸினால் எளிதில் தாக்கப்படுவதற்கான அபாயத்தில் உள்ளனர். ஆகவே சர்க்கரை நோயாளிகள் அல்லது நாள்பட்ட நிலைமைகளான இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஏனெனில் இந்த வகை நோயாளிகளுக்கு கொரோனாவால் கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்புக்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே. நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுடன், வலுவான மருந்துகளை எடுப்பது வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு உகந்தவை அல்ல.

மூட்டு வலி
இருப்பினும் இதுவரை வயதானவர்கள், நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவர்களின் பட்டியலில் விஞ்ஞான பரிசோதனையில் தப்பிய நோயாளிகளின் குழு மூட்டு வலி உள்ளவர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது வயது மற்றும் நோயெதிர்ப்பு தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனையாகும். அதில் முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு, ஆனால் கீல்வாதம் இல்லை.

கீல்வாதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன
கீல்வாதம், இதயக் கோளாறுகள் அல்லது வளர்சிதை மாற்ற நோய்கள் போன்ற பெரிய ஆபத்து காரணிகளாக இருக்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் வயதான பலருக்கு மூட்டுவலி உள்ளது. கீல்வாதத்துடன் தொடர்புடைய வலி மற்றும் வீக்கம், உங்கள் தன்னுடல் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு முடக்கு வாதம் போன்ற தன்னுடல் தாக்கக் கோளாறுகளைத் தூண்டும். கடுமையான கீல்வாத பிரச்சனை, உடலை உள்ளிருந்து சேதப்படுத்துவதோடு, இது எந்த வைரஸும் உடலைத் தாக்குவதை எளிதாக்குகிறது.

முடக்கு வாதம் COVID-19 அபாயத்தை அதிகரிக்கும்
முடக்கு வாதம் என்னும் கோளாறு நோயெதிர்ப்பு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். அவை பொதுவாக நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளில் உள்ளன, மேலும் நாம் அனைவரும் அறிந்தபடி, அடக்கப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு COVID-19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு நல்லதல்ல. ஆனால் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்குமா என்பது குறித்து புரிந்து கொள்ளும் போது, வல்லுநர்கள் தங்கள் கருத்தில் பிரிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆட்டோ இம்யூன் மற்றும் மூட்டு அழற்சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் நோயாளிகளுக்கு பல வைரஸ் தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை சந்திக்கும் போது, நீங்கள் இதுவரை எடுக்கும் மருந்துகளைப் பற்றி சுகாதார நிபுணர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதனால் அதற்கேற்ப அவரால் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். உங்களிடம் COVID-19 வைரஸிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டால், உங்கள் மருத்துவர் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பார். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவும் இக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.

மாற்று வழி
நோயெதிர்ப்பு-அடக்குமுறைக்கு (immune-suppression) பதிலாக நோயெதிர்ப்பு-பண்பேற்றத்தை (immune-modulation) உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். இதை ஸ்டெம் செல்கள் சிகிச்சை மூலம் செய்யலாம். இது ஒரு மீளுருவாக்கம் செய்யும் மருந்து சிகிச்சையே தவிர வேறு எதுவுமில்லை. இது நோயெதிர்ப்பு-அடக்குமுறை சிக்கலைத் தவிர்க்கிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் COVID-19 வைரஸ் உள்ளிட்ட உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.



Click it and Unblock the Notifications