Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 5 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மூட்டு வலி இருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்பது உண்மையா?
துவரை வயதானவர்கள், நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவர்களின் பட்டியலில் விஞ்ஞான பரிசோதனையில் தப்பிய நோயாளிகளின் குழு மூட்டு வலி உள்ளவர்கள் என்பதை நாம் க
இந்தியாவில் கொரோனா என்னும் COVID-19 வைரஸின் தாக்குதலுக்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வயது அல்லது பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டாது. ஆனால் உலகளாவிய தரவுகளின் படி, வயதானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், அது கடுமையான சிக்கல்களை உண்டாக்குவதோடு, இறப்பையும் உண்டாக்குகிறது.
அதோடு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களும் COVID-19 வைரஸினால் எளிதில் தாக்கப்படுவதற்கான அபாயத்தில் உள்ளனர். ஆகவே சர்க்கரை நோயாளிகள் அல்லது நாள்பட்ட நிலைமைகளான இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
MOST READ: மக்களே உஷார்..! கொரோனா வைரஸ் காற்றிலும் பரவுமாம்.. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்..
ஏனெனில் இந்த வகை நோயாளிகளுக்கு கொரோனாவால் கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்புக்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே. நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுடன், வலுவான மருந்துகளை எடுப்பது வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு உகந்தவை அல்ல.
மூட்டு வலி
இருப்பினும் இதுவரை வயதானவர்கள், நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவர்களின் பட்டியலில் விஞ்ஞான பரிசோதனையில் தப்பிய நோயாளிகளின் குழு மூட்டு வலி உள்ளவர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது வயது மற்றும் நோயெதிர்ப்பு தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனையாகும். அதில் முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு, ஆனால் கீல்வாதம் இல்லை.
கீல்வாதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன
கீல்வாதம், இதயக் கோளாறுகள் அல்லது வளர்சிதை மாற்ற நோய்கள் போன்ற பெரிய ஆபத்து காரணிகளாக இருக்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் வயதான பலருக்கு மூட்டுவலி உள்ளது. கீல்வாதத்துடன் தொடர்புடைய வலி மற்றும் வீக்கம், உங்கள் தன்னுடல் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு முடக்கு வாதம் போன்ற தன்னுடல் தாக்கக் கோளாறுகளைத் தூண்டும். கடுமையான கீல்வாத பிரச்சனை, உடலை உள்ளிருந்து சேதப்படுத்துவதோடு, இது எந்த வைரஸும் உடலைத் தாக்குவதை எளிதாக்குகிறது.
முடக்கு வாதம் COVID-19 அபாயத்தை அதிகரிக்கும்
முடக்கு வாதம் என்னும் கோளாறு நோயெதிர்ப்பு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். அவை பொதுவாக நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளில் உள்ளன, மேலும் நாம் அனைவரும் அறிந்தபடி, அடக்கப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு COVID-19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு நல்லதல்ல. ஆனால் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்குமா என்பது குறித்து புரிந்து கொள்ளும் போது, வல்லுநர்கள் தங்கள் கருத்தில் பிரிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆட்டோ இம்யூன் மற்றும் மூட்டு அழற்சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் நோயாளிகளுக்கு பல வைரஸ் தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை சந்திக்கும் போது, நீங்கள் இதுவரை எடுக்கும் மருந்துகளைப் பற்றி சுகாதார நிபுணர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதனால் அதற்கேற்ப அவரால் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். உங்களிடம் COVID-19 வைரஸிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டால், உங்கள் மருத்துவர் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பார். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவும் இக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
மாற்று வழி
நோயெதிர்ப்பு-அடக்குமுறைக்கு (immune-suppression) பதிலாக நோயெதிர்ப்பு-பண்பேற்றத்தை (immune-modulation) உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். இதை ஸ்டெம் செல்கள் சிகிச்சை மூலம் செய்யலாம். இது ஒரு மீளுருவாக்கம் செய்யும் மருந்து சிகிச்சையே தவிர வேறு எதுவுமில்லை. இது நோயெதிர்ப்பு-அடக்குமுறை சிக்கலைத் தவிர்க்கிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் COVID-19 வைரஸ் உள்ளிட்ட உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.