Latest Updates
-
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்!
மூட்டு வலி இருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்பது உண்மையா?
துவரை வயதானவர்கள், நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவர்களின் பட்டியலில் விஞ்ஞான பரிசோதனையில் தப்பிய நோயாளிகளின் குழு மூட்டு வலி உள்ளவர்கள் என்பதை நாம் க
இந்தியாவில் கொரோனா என்னும் COVID-19 வைரஸின் தாக்குதலுக்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வயது அல்லது பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டாது. ஆனால் உலகளாவிய தரவுகளின் படி, வயதானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், அது கடுமையான சிக்கல்களை உண்டாக்குவதோடு, இறப்பையும் உண்டாக்குகிறது.

அதோடு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களும் COVID-19 வைரஸினால் எளிதில் தாக்கப்படுவதற்கான அபாயத்தில் உள்ளனர். ஆகவே சர்க்கரை நோயாளிகள் அல்லது நாள்பட்ட நிலைமைகளான இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஏனெனில் இந்த வகை நோயாளிகளுக்கு கொரோனாவால் கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்புக்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே. நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுடன், வலுவான மருந்துகளை எடுப்பது வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு உகந்தவை அல்ல.

மூட்டு வலி
இருப்பினும் இதுவரை வயதானவர்கள், நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவர்களின் பட்டியலில் விஞ்ஞான பரிசோதனையில் தப்பிய நோயாளிகளின் குழு மூட்டு வலி உள்ளவர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது வயது மற்றும் நோயெதிர்ப்பு தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனையாகும். அதில் முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு, ஆனால் கீல்வாதம் இல்லை.

கீல்வாதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன
கீல்வாதம், இதயக் கோளாறுகள் அல்லது வளர்சிதை மாற்ற நோய்கள் போன்ற பெரிய ஆபத்து காரணிகளாக இருக்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் வயதான பலருக்கு மூட்டுவலி உள்ளது. கீல்வாதத்துடன் தொடர்புடைய வலி மற்றும் வீக்கம், உங்கள் தன்னுடல் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு முடக்கு வாதம் போன்ற தன்னுடல் தாக்கக் கோளாறுகளைத் தூண்டும். கடுமையான கீல்வாத பிரச்சனை, உடலை உள்ளிருந்து சேதப்படுத்துவதோடு, இது எந்த வைரஸும் உடலைத் தாக்குவதை எளிதாக்குகிறது.

முடக்கு வாதம் COVID-19 அபாயத்தை அதிகரிக்கும்
முடக்கு வாதம் என்னும் கோளாறு நோயெதிர்ப்பு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். அவை பொதுவாக நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளில் உள்ளன, மேலும் நாம் அனைவரும் அறிந்தபடி, அடக்கப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு COVID-19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு நல்லதல்ல. ஆனால் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்குமா என்பது குறித்து புரிந்து கொள்ளும் போது, வல்லுநர்கள் தங்கள் கருத்தில் பிரிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆட்டோ இம்யூன் மற்றும் மூட்டு அழற்சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் நோயாளிகளுக்கு பல வைரஸ் தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை சந்திக்கும் போது, நீங்கள் இதுவரை எடுக்கும் மருந்துகளைப் பற்றி சுகாதார நிபுணர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதனால் அதற்கேற்ப அவரால் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். உங்களிடம் COVID-19 வைரஸிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டால், உங்கள் மருத்துவர் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பார். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவும் இக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.

மாற்று வழி
நோயெதிர்ப்பு-அடக்குமுறைக்கு (immune-suppression) பதிலாக நோயெதிர்ப்பு-பண்பேற்றத்தை (immune-modulation) உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். இதை ஸ்டெம் செல்கள் சிகிச்சை மூலம் செய்யலாம். இது ஒரு மீளுருவாக்கம் செய்யும் மருந்து சிகிச்சையே தவிர வேறு எதுவுமில்லை. இது நோயெதிர்ப்பு-அடக்குமுறை சிக்கலைத் தவிர்க்கிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் COVID-19 வைரஸ் உள்ளிட்ட உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.



Click it and Unblock the Notifications