Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை அனுஷ்கா - அது என்ன நோய்?
அனுஷ்கா ஷெட்டி பாதிக்கப்பட்டுள்ள அந்த நோயின் பெயர் என்ன, அதன் அறிகுறிகள், சிக்கல்கள் மற்றும் யாருக்கெல்லாம் இந்நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பது குறித்து இப்போது விரிவாக காண்போம்.
Actress Anushka Shetty Suffering From A Rare Disease: கடந்த சில மாதங்களாக இந்திய நடிகைகள் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ள நோய்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதில் நடிகை சமந்தா அரிய வகை தசை நோயான மயோசிடிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடிகை மம்தா மோகன் தாஸ் நிறமிழப்பு பிரச்சனையை சந்திப்பதாக தெரிவித்தார். அதேப் போல் ஸ்ருதிஹாசனும் தான் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசினார்.

இந்நிலையில் மிகவும் பிரபலமான, பலரது கனவு கன்னியாக பல ஆண்டுகளாக இருந்து வந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி இன்டர்வியூ ஒன்றில், தான் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த நோய் தாக்கத்தால் இவர் சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 20 நிமிடம் சிரிப்பாராம். இதை அவரால் கட்டுப்படுத்த முடியாதாம். என்ன ஒரு கொடுமையான நோய் என்று பாருங்கள். சரி, அனுஷ்கா ஷெட்டி பாதிக்கப்பட்டுள்ள அந்த நோயின் பெயர் என்ன, அதன் அறிகுறிகள், சிக்கல்கள் மற்றும் யாருக்கெல்லாம் இந்நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பது குறித்து இப்போது விரிவாக காண்போம்.

சூடோபுல்பார் (Pseudobulbar)
நடிகை அனுஷ்கா பாதிக்கப்பட்டுள்ள நோயின் பெயர் தான் சூடோபுல்பார். இந்நிலையில் திடீரென்று கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு அல்லது அழுகை ஏற்படும். பொதுவாக இந்த சூடோபுல்பார் நிலையானது நரம்பியல் பிரச்சனைகள் அல்லது நரம்பியல் காயங்களைக் கொண்டவர்களுக்கு ஏற்படும். இந்நிலையானது மூளை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதைப் பாதிக்கிறது.
சூடோபுல்பார் பிரச்சனையைக் கொண்டவர்கள் மற்றவர்களைப் போல் சாதாரணமான உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் தங்களின் உணர்ச்சிகளை அளவுக்கு அதிகமாக அல்லது வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்கள். இதன் காரணமாக அன்றாட வாழ்க்கையில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள்
சூடோபுல்பாரின் பொதுவான அறிகுறி என்றால், அது கட்டுப்படுத்த முடியாத, அடிக்கடி அழுகை மற்றும் சிரிப்பு வருவதாகும். மேலும் இந்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைப் போல் சாதாரணமாகத் தான் இருப்பார்கள். ஆனால் எப்போது வேண்டுமானாலும் இந்த அழுக்கை அல்லது சிரிப்பு ஏற்படும். பெரும்பாலும் இந்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் சிரிப்பை விட அழுகையையே அதிகம் சந்திப்பார்கள். மேலும் சூடோபுல்பார் பாதிப்பு உள்ளவர்களிடையே மனச்சோர்வு இருக்கும்.

யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புள்ளது?
பெரும்பாலும் சூடோபுல்பார் பிரச்சனையானது நரம்பியல் பிரச்சனை அல்லது நரம்பியல் காயங்களைக் கொண்டவர்களுக்கு ஏற்படும். அந்த நரம்பியல் பிரச்சனைகள் பின்வருமாறு:
* பக்கவாதம்
* அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS)
* மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (MS)
* மூளையில் கடுமையான காயம்
* அல்சைமர் நோய்
* பர்கின்சன் நோய்

எப்போது மருத்துவரைக் காண வேண்டும்?
உங்களுக்கு சூடோபுல்பார் இருப்பதை உணர்ந்தால், உடனே மருத்துவரிடம் தங்களின் நிலை குறித்து கூற வேண்டும். அதுவும் உங்களுக்கு ஏற்கனவே நரம்பியல் பிரச்சனைகள் இருந்து, சூடோபுல்பாரின் அறிகுறிகள் தென்பட்டால், உங்கள் மருத்துவரிடமே இதுக்குறித்து பேசலாம். பெரும்பாலும் இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு நரம்பியல் உளவியலாளர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் மனநல மருத்துவர்களை அணுக வேண்டும்.

சிக்கல்கள்
சூடோபுல்பார் பாதிப்பின் அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், அது அந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மிகுந்த சங்கடத்தையும், மனக்கவலை, மனச்சோர்வு மற்றும் சமூகத்தில் இருந்து தனித்து இருப்பது போன்ற உணர்வு எழும். முக்கியமாக இந்த பாதிப்பானது ஒருவரது தினசரி வேலையை கூட செய்யவிடாமல் இடையூறை ஏற்படுத்தும். அதுவும் ஏற்கனவே நரம்பியல் பிரச்சனையைக் கொண்டிருந்தவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டால் இன்னும் சிரமமாக இருக்கும்.
நிறைய பேருக்கு இம்மாதிரியான ஓர் பிரச்சனை இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் இம்மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு இதுக்குறித்து தெரியப்படுத்தி, மருத்துவரை அணுக சொல்லுங்கள்.



Click it and Unblock the Notifications