Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் எலுமிச்சை புல் டீ..! எப்படி தயாரிக்கணும்னு தெரியுமா..
சில சின்ன சின்ன வகை செடிகளின் பயன்களை நாம் கண்டு கொள்வதே இல்லை. ஆனால், இதில் தான் ஏராளமான பயன்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. எதிர்ப்பு சக்தி குறைபாடு முதல் தொப்பை குறைப்பு வரை, பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகின்றது இந்த டீ. இந்த டீயை குடித்து வருவதால் ஏரளமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இதனை மூலிகை டீயாகவும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த டீயை இந்த பதிவில் கூறுவது போன்று தயாரித்து குடித்தால் உடலில் எந்த வித நோய்களும் உண்டாகாமல் அதிக ஆயுளுடன் நீங்கள் வாழலாம். அப்படி என்னதான் இந்த எலுமிச்சை புல்லில் உள்ளது என்கிற கேள்விக்கான விடை இதோ..!

உலக பிரசித்தி பெற்ற டீ..!
பொதுவாகவே ஒவ்வொரு ஊரிலும் ஒருவிதமான டீ மிக பிரபலமாக இருக்கும். அந்த வகையில் இந்த எலுமிச்சை புல் டீ ஆசிய நாடுகள் மற்றும் தாய்லாந்தில் ரொம்ப பிரபலமானது. இதை குடிப்பதால் தான் அங்குள்ள மக்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

ஆயுர்வேத மூலிகை..!
இந்த எலுமிச்சை புல் ஒருவித ஆயுர்வேதமாகவே கருதப்படுகிறது. இந்த புல்லின் மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது. உடல் முழுக்க உள்ள கழுவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற இந்த டீ பெரும்பாலும் உதவும். இது எலுமிச்சையை போன்ற மணமும் கொண்டது.

நோய்களை துரத்தும் புல்..!
எலுமிச்சை புல் அதிக மருத்துவ குணம் கொண்டது. இவற்றில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் உள்ளன. இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் அனைத்தும் பறந்து போய் விடும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு
இந்த புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் முழுவதுமாக குறைக்கவும் இந்த டீ பயன்படுகிறது. எனவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

ஒல்லியாக மாற...
பலருக்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்றுகிறது இந்த டீ. குறைந்த கலோரிகள் இதில் இருப்பதால், உடல் எடையை மிக சீக்கிரத்திலே இது குறைத்து விடும்.

காலையிலே இந்த பிரச்சினையா..?
தினமும் காலையில் யாருக்கெல்லாம் இந்த மலச்சிக்கல் பிரச்சினை உள்ளதோ, அவர்களுக்கு வரப்பிரசாமாக உள்ளது எலுமிச்சை புல். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும். சீனர்கள் இந்த டீயை அவர்களின் மருத்துவ பயன்பாட்டிற்கு பெரிதும் உபயோகித்தனர்.

நச்சுக்களை வெளியேற்ற
நமது உடலில் உள்ள அழுக்குகள் தான் நோயாக உருவாகிறது. இந்த அழுக்குகளை வெளியேற்றிவிட்டால் எந்தவித நோய்களும் உங்களை தாக்காது. இந்த எலுமிச்சை புல் டீயை குடித்து வந்தால் உடலில் சேரக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி விடும். அத்துடன் சிறுநீரக பாதையையும் சுத்தமாக வைத்து கொள்ளும்.

முடி கொட்டுதா..?
என்ன செய்தாலும் இந்த முடி கொட்டும் பிரச்சினை முற்றுப்புள்ளி வைக்க முடியலையே என்கிறவர்களுக்கு ஒரு எளிமையான வழி உள்ளது. இந்த எலுமிச்சை டீ குடித்து வந்தாலே போதும். உங்களின் முடி உதிரும் பிரச்சினை முற்றுப்புள்ளி வைத்து விடலாம். இதற்கு காரணம் இதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி தான்.

மாதவிடாய் வலி...
பெண்களுக்கு ஏற்பட கூடிய பயங்கரமான வலியான இந்த மாதவிடாய் வலியை எளிதாக குணப்படுத்த கூடிய தன்மை இதற்கு உள்ளது. அத்துடன் உடலுக்கு அதிக வலிமையையும் இது தரக்கூடியது. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளுமாம்.

எவ்வாறு தயாரிப்பது..?
இந்த எலுமிச்சை புல் டீயை தயாரிக்க, முதலில் இந்த புல்லை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இதனை வடிகட்டி குடித்து வந்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்தும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











