Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் எலுமிச்சை புல் டீ..! எப்படி தயாரிக்கணும்னு தெரியுமா..
சில சின்ன சின்ன வகை செடிகளின் பயன்களை நாம் கண்டு கொள்வதே இல்லை. ஆனால், இதில் தான் ஏராளமான பயன்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. எதிர்ப்பு சக்தி குறைபாடு முதல் தொப்பை குறைப்பு வரை, பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகின்றது இந்த டீ. இந்த டீயை குடித்து வருவதால் ஏரளமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இதனை மூலிகை டீயாகவும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த டீயை இந்த பதிவில் கூறுவது போன்று தயாரித்து குடித்தால் உடலில் எந்த வித நோய்களும் உண்டாகாமல் அதிக ஆயுளுடன் நீங்கள் வாழலாம். அப்படி என்னதான் இந்த எலுமிச்சை புல்லில் உள்ளது என்கிற கேள்விக்கான விடை இதோ..!

உலக பிரசித்தி பெற்ற டீ..!
பொதுவாகவே ஒவ்வொரு ஊரிலும் ஒருவிதமான டீ மிக பிரபலமாக இருக்கும். அந்த வகையில் இந்த எலுமிச்சை புல் டீ ஆசிய நாடுகள் மற்றும் தாய்லாந்தில் ரொம்ப பிரபலமானது. இதை குடிப்பதால் தான் அங்குள்ள மக்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

ஆயுர்வேத மூலிகை..!
இந்த எலுமிச்சை புல் ஒருவித ஆயுர்வேதமாகவே கருதப்படுகிறது. இந்த புல்லின் மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது. உடல் முழுக்க உள்ள கழுவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற இந்த டீ பெரும்பாலும் உதவும். இது எலுமிச்சையை போன்ற மணமும் கொண்டது.

நோய்களை துரத்தும் புல்..!
எலுமிச்சை புல் அதிக மருத்துவ குணம் கொண்டது. இவற்றில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் உள்ளன. இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் அனைத்தும் பறந்து போய் விடும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு
இந்த புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் முழுவதுமாக குறைக்கவும் இந்த டீ பயன்படுகிறது. எனவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

ஒல்லியாக மாற...
பலருக்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்றுகிறது இந்த டீ. குறைந்த கலோரிகள் இதில் இருப்பதால், உடல் எடையை மிக சீக்கிரத்திலே இது குறைத்து விடும்.

காலையிலே இந்த பிரச்சினையா..?
தினமும் காலையில் யாருக்கெல்லாம் இந்த மலச்சிக்கல் பிரச்சினை உள்ளதோ, அவர்களுக்கு வரப்பிரசாமாக உள்ளது எலுமிச்சை புல். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும். சீனர்கள் இந்த டீயை அவர்களின் மருத்துவ பயன்பாட்டிற்கு பெரிதும் உபயோகித்தனர்.

நச்சுக்களை வெளியேற்ற
நமது உடலில் உள்ள அழுக்குகள் தான் நோயாக உருவாகிறது. இந்த அழுக்குகளை வெளியேற்றிவிட்டால் எந்தவித நோய்களும் உங்களை தாக்காது. இந்த எலுமிச்சை புல் டீயை குடித்து வந்தால் உடலில் சேரக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி விடும். அத்துடன் சிறுநீரக பாதையையும் சுத்தமாக வைத்து கொள்ளும்.

முடி கொட்டுதா..?
என்ன செய்தாலும் இந்த முடி கொட்டும் பிரச்சினை முற்றுப்புள்ளி வைக்க முடியலையே என்கிறவர்களுக்கு ஒரு எளிமையான வழி உள்ளது. இந்த எலுமிச்சை டீ குடித்து வந்தாலே போதும். உங்களின் முடி உதிரும் பிரச்சினை முற்றுப்புள்ளி வைத்து விடலாம். இதற்கு காரணம் இதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி தான்.

மாதவிடாய் வலி...
பெண்களுக்கு ஏற்பட கூடிய பயங்கரமான வலியான இந்த மாதவிடாய் வலியை எளிதாக குணப்படுத்த கூடிய தன்மை இதற்கு உள்ளது. அத்துடன் உடலுக்கு அதிக வலிமையையும் இது தரக்கூடியது. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளுமாம்.

எவ்வாறு தயாரிப்பது..?
இந்த எலுமிச்சை புல் டீயை தயாரிக்க, முதலில் இந்த புல்லை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இதனை வடிகட்டி குடித்து வந்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்தும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications