Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
இரத்தம் மற்றும் இரத்த குழாய்களை சுத்தம் செய்ய இத சாப்பிடுங்க...
இன்றைய நமது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாசு நிறைந்த சுற்றுச்சூழலாலும், நமது இரத்தத்தில் நிறைய நச்சுக்கள் சேர்கின்றன. அதோடு உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் இரத்த குழாய்களில் படிந்து, இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. ஒருவரது இரத்தத்தையும், இரத்த நாளங்களையும் சுத்தம் செய்வதற்கு ஏராளமான உணவுகள் உதவி புரியும். அதில் எலுமிச்சை மற்றும் பூண்டு போன்றவை மிகவும் சிறப்பாக செயல்படும்.
பொதுவாக எலுமிச்சை, பூண்டு போன்றவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதனால் இது நாட்டு மருத்துவத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் தங்களது டயட்டில் எலுமிச்சை மற்றும் பூண்டை சேர்த்து வந்தால், அதனால் உடலுறுப்புக்கள் சுத்தமாவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கொழுப்புச் செல்களைக் கரைப்பதோடு, உடலில் கொலஸ்ட்ராலை சீரான அளவில் பராமரிக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் இதில் இருக்கும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

பூண்டு
பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள், இரத்தக்குழாய்களுக்கு பாதுகாப்பு அளித்து, இதய பிரச்சனைகளான பெருந்தமனி தடிப்பு அல்லது பக்கவாதம் வரும் வாய்ப்பைத் தடுக்கும். முக்கியமாக பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் உட்பொருள், இரத்தத்தில் உள்ள அதிகளவிலான கொழுப்புக்களைக் கரைத்து, உடலில் ஆரோக்கியமான இரத்தத்தை ஓடச் செய்யும்.
இங்கு எலுமிச்சை மற்றும் பூண்டை எப்படியெல்லாம் உட்கொள்ளலாம் என்று மிகச்சிறந்த 3 வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுத்து தயாரித்து உட்கொள்ளுங்கள்.

முதல் ரெசிபி
தேவையான பொருட்கள்:
* எலுமிச்சை - 6
* பூண்டு பற்கள் - 30

தயாரிக்கும் முறை:
* முதலில் பூண்டு மற்றும் எலுமிச்சையின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை பிளண்டரின் போட்டு அரைத்து, கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
* பின் அந்த பாத்திரத்தில் 2 லிட்டர் நீரை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், நெருப்பைக் குறைத்துவிட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கலவையை குளிர வையுங்கள்.
* அதன் பின், அதில் உள்ள திரவ பகுதியை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
உட்கொள்ளும் முறை:
இந்த பானத்தை தினமும் 50 மிலி என 3 வாரம் தொடர்ந்து எடுக்க வேண்டும். பின் 1 வாரம் இடைவெளி விட்டு, வேண்டுமானால் மீண்டும் 3 வாரங்கள் தொடர்ந்து உட்கொள்ளுங்கள். வேண்டுமானால், இந்த ரெசிபியை 6 மாத இடைவெளி விட்டு மேற்கொள்ளலாம்.

இரண்டாம் ரெசிபி
தேவையான பொருட்கள்:
* பூண்டு பற்கள் - 30
* எலுமிச்சை - 6

தயாரிக்கும் முறை:
* பூண்டு மற்றும் எலுமிச்சையின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் பாதியை பிளெண்டரில் போட்டு, நீர் ஊற்றி அரைத்துக் கொள்ளங்கள்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, அத்துடன் அரைக்காததையும் சேர்த்து அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.
* பின்பு அதனை இறக்கி வடிகட்டி கொண்டு கலவையை வடிகட்டி, திரவப் பகுதியை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.
உட்கொள்ளும் முறை:
தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் 1 டம்ளர் என 3 வாரங்கள் குடிக்க வேண்டும். பின் ஒரு வாரம் இடைவெளி விட்டு, மீண்டும் 3 வாரங்கள் குடியுங்கள்.

மூன்றாம் ரெசிபி
தேவையான பொருட்கள்:
* பூண்டு சாறு - 1 கப்
* இஞ்சி சாறு - 1 கப்
* எலுமிச்சை சாறு - 1 கப்
* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 கப்
* தேன் - 1 கப்

தயாரிக்கும் முறை:
* ஒரு பாத்திரத்தில் தேனைத் தவிர அனைத்து பொருட்களையும் போட்டு 30 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* கலவையானது கலவையானது 3 கப் வரும் வரை நன்கு சுண்ட கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அந்த கலவையை இறக்கி அறை வெப்பநிலையில் குளிர வைத்து, தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துங்கள்.
உட்கொள்ளும் முறை:
தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் காலை உணவு உண்பதற்கு முன் 1 டேபிள் ஸ்பூன் உட்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications