Latest Updates
-
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்.. -
ஜூன் 29-ல் நிகழும் புதனின் வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் துரத்தப்போகுதாம் -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. -
ஐயங்கார் ஸ்டைல் கதம்ப சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் கூட இந்த சுவை கிடைக்காது -
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடல் ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா -
150 ஆண்டுகளுக்கு பின் பௌர்ணமியில் உருவாகும் 2 யோகங்கள்: இன்று இந்த 5 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
மாதவிடாயின்போது பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டியவைகள்!!
மாதவிடாயின்போது பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகளும், பின்பற்றவேண்டியவைகளும் இங்கே குறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.
28 நாட்களுக்கொருமுறை வரும் மாத விடாயின் போது பெண்கள் கண்டிப்பாக கவனிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்களைப் போல் இந்த நாட்களிலும் மிகச் சாதரணமாக இருந்தால் கருப்பையை பாதிக்கும்.

அந்த காலத்தில் மாதவிடாயின்போது போதுமான ஓய்வு கொடுத்து ஒதுங்கியிருக்க சொன்னதில் அறிவியல் பூர்வமாக உண்மையிருந்தாலும் இன்றைய பிஸி உலகில் அவ்வாறு இருப்பது சாத்தியமற்றது.
இருப்பினும் அந்த 3 நாட்களில் நீங்கள் கொடுக்கும் சில அக்கறையான விஷயங்கள் உங்கள் தளர்வடைந்த கருப்பையை வலுவூட்டும். அவை என்னவென்று பார்க்கலாமா?

கனமான பொருட்களை தூக்குதல் :
மாதவிடாயின்போது பளுவான பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அந்த சமயங்களில் உண்டான இறுக்கத்தால் கர்ப்பபை கீழிறங்கி இருக்கும். பின் சில நாட்களில் தனது இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
ஆனால் அந்த சமயத்தில் பளுவான பொருட்களை தூக்கினால் கர்ப்பப்பை நிரந்தரமாக கீழறங்கி ஹெர்னியா போன்ற பாதிப்புகள் வரும். ஆகவே பளுவானவற்றை தூக்காதீர்கள்.

கீரை :
பெண்களுக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர போக்கினால் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கீரை வகைகள், பேரிச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி அவர்களது உணவில் சேர்க்க வேண்டும்.

இடுப்பெலும்பை பலப்படுத்த :
மாதவிடாயின்போது உளுந்தினால் செய்யப்பட்ட பதார்த்தங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் அது இடுப்பெலும்பை
வலுப்படுத்தும். நரம்புகளுக்கு ஊட்டம் அளிக்கும்.

குளியல் :
மாதவிலக்கின்போது உடலை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. அந்நாட்களில் இரு வேளை குளிக்க வேண்டும், அதில் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். நெருப்புக் குளியலும், சாம்பிராணியும் நல்லது.

பால் :
எப்போதும் பெண்கள் பால் குடிப்பது நல்லது அதிலும் மாதவிடாயின்போது தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

முட்டைகோஸ் :
முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் பெண்கள் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

ஆப்பிள் :
தினம் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.



Click it and Unblock the Notifications