Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ஆல்கஹால் நனைத்த பஞ்சை தொப்புளில் தடவுவதால் பெறும் நன்மைகள் என்ன?
பஞ்சில் ஆல்கஹால் நனைத்து அதை தொப்புளில் தடவினால் காய்ச்சல், சளி, வயிற்று வலி குணமாகும் என்பது சரியா? தவறா?
ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதா, பாட்டி வைத்தியம் என பல மருத்துவ முறைகள் இருப்பது போல சிலர் கை வைத்தியமும் பின்பற்றுவர்கள். யாரோ ஒருவர் ஒருசில முறையை கையாண்டு அவர்களுக்கு அளித்த நன்மைகளை கூறி அதை மற்றவர்கள் பயன்படுத்த அறிவுரை கூறுவார்கள்.
ஆனால், இது அனைவருக்கும் நன்மை அளிக்குமா? இதனால் எதிர்மறை தாக்கம் உண்டாக வாய்ப்புகள் உள்ளனவா? என்பதற்கு தகுந்த அறிவியல் ஆராய்ச்சி ஆய்வறிக்கை தகவல்கள் இருப்பதில்லை.
இந்த வகையில் ஒருசிலர் காய்ச்சல், சளிக்கு கையாளும் கைவைத்தியம் தான் ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து தொப்புளில் தடவும் முறை. இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? இது சரியா, தவறா? என்பது பற்றி இங்கு காணலாம்...

செய்முறை!
பஞ்சை 50% ஆல்கஹாலில் நனைத்து அதை தொப்புளில் மிருதுவாக தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடல் வலி குறைந்து, இலகுவாக உணர முடியும் என கூறப்படுகிறது.

கூறப்படும் நன்மைகள்!
இவ்வாறு ஆல்கஹால் நனைத்த பஞ்சை தொப்புளில் தடவுவதால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, மாதவிடாய் காரணமாக ஏற்படும் வலி குறையும் என கூறப்படுகிறது.

ஆய்வு என்ன கூறுகிறது!
நடுத்தர, ஏழை பெற்றோர்கள் தான் இந்த முறையை பயன்படுத்துகின்றனர். இம்முறை உடல் வெப்பத்தை குறைத்து காய்ச்சல் சரியாக செய்கிறது எனிலும், தொடர்ந்து இம்முறையை பின்பற்றுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணியாக அமையலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கோளாறுகள்!
சில ஆய்வுகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் குறைய பஞ்சில் ஆல்கஹால் நனைத்து தொப்புளில் தடவியதால் இதய கோளாறுகள், நரம்பியல் கோளாறுகள் உண்டானதாக ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அசிட்டமினோஃபென்!
சிறந்த பலன் பெற வேண்டும் என்றால் ஒரு வயது கடந்த குழந்தைகளுக்கு அசிட்டமினோஃபென் என்ற பாராசிட்டமாலை தரலாம். அதையும் மருத்துவரின் அறிவுரையின்படியே தர வேண்டும்.
இது காய்ச்சல் குறைய உதவும் என்கின்றனர். இதையும் குழந்தைகள் நல மருத்துவரின் அறிவுரையின் பேரில் பயன்படுத்துவதே சரி.

குறிப்பு!
பிரபலமாக பெற்றோர்கள் பின்பற்றும் இந்த ஆல்கஹால் நனைத்த பஞ்சை தொப்புளில் தடவும் மருத்துவ முறை காய்ச்சல் சரிப்படுத்தும் என்ற போதிலும். இதனால் சருமத்திற்கு அபாயமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











