Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்த ஒரு டம்ளர் சர்பத், தாகத்தைப் போக்கி உடல் வறட்சியைத் தடுக்கும் எனத் தெரியுமா?
இங்கு கோடையில் உடல் வறட்சியைத் தடுக்க உதவும் சர்பத் ரெசிபிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கோடைக்காலத்தில் தாகம் எடுக்கும் போது ஃப்ரிட்ஜில் வைத்த நீர் அல்லது பாக்கெட் ஜூஸ் அல்லது குளிர் பானங்களைக் குடிக்கத் தோன்றும். ஆனால் இவைகள் உடல் நலத்திற்கு தீங்கைத் தான் விளைவிக்குமே தவிர நன்மைகளை அல்ல. ஆனால் கோடையில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடல் வறட்சியைத் தடுக்கவும் ஒருசில சர்பத்துகள் உதவும்.

இக்கட்டுரையில் உடல் வறட்சியைத் தடுத்து, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் சில எளிய சர்பத் ரெசிபிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து வீட்டில் தயாரித்து வைத்து அவ்வப்போது குடித்து மகிழுங்கள்.

சோம்பு சர்பத்
சோம்பு சர்பத் உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள மட்டுமின்றி, உடல் வெப்பத்தையும் குறைக்கும். அதற்கு 1 டீஸ்பூன் சோம்பை 1 லிட்டர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, தேன் கலந்தால், சோம்பு சர்பத் ரெடி!

புளி சர்பத்
புளியில் உள்ள வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் உடல் வறட்சியால் இழக்கப்பட்ட எலக்ட்ரோலைட்டுக்களை தக்க வைக்க உதவும். அதற்கு சிறிது புளியை வெல்லம் மற்றும் கல் உப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் நீர் சேர்த்து கையால் கரைத்து வடிகட்டினால், புளி சர்பத் ரெடி!

கொக்கும் சர்பத்
இது மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமான ஓர் சர்பத். இந்த கொக்கும் சர்பத் புளிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். கோடையில் இதைக் குடித்தால், உடல் வறட்சியில் இருந்து விடுபடலாம். அதற்கு கடைகளில் விற்கப்படும் கொக்கும் சர்பத்தை வாங்கி நீர் சேர்த்து, சுவைக்கு சிறிது உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.

சப்ஜா சர்பத்
இது மற்றொரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அற்புத பானம். இந்த பானம் செரிமானத்திற்கு மட்டுமின்றி, உடல் வறட்சி அல்லது வெப்ப பக்கவாதம் வராமலும் தடுக்கும். அதற்கு ஒரு டம்ளர் குளிர்ச்சியான நீரில் 1/4 டீஸ்பூன் சப்ஜா விதைகளை போட்டு ஊற வைக்க வேண்டும். பின் அதில் ஒரு சிட்டிகை உப்பு, சிறிது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

குல்கந்த் சர்பத்
ரோஜாப் பூ இதழ்கள் உடல் மற்றும் சருமத்தை இதமாக வைத்துக் கொள்ளும். கோடையில் ரோஜாப்பூக்கள் கொண்டு தயாரிக்கப்படும் குல்கந்த்தை வைத்து சர்பத் தயாரித்து குடித்தால், உடல் சூடு குறையும். அதற்கு சிறிது குல்கந்த் அல்லது உலர்ந்த ரோஜாப்பூ இதழ்களை வெல்லம் கலந்த நீரில் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்நீரை வட்டிகட்டி சிறிது நீர் ஊற்றி ஐஸ்கட்டிகளை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











