Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
வெளி உலகத்தோடு இணைந்து வாழ்ந்தால் பெண்ணிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
வெளிச் சூழலில் வாழும் பெண்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற கருத்தை பற்றிய தகவல் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிச் சூழலில் இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது உங்களுக்கு ஆரோக்கியமான தருணங்களை அள்ளிக் கொடுக்கும். அதுவும் பெண்களுக்கு வெளிச் சூழல் வாழ்க்கை அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கிறதாம்.
ஆமாங்க சுற்றிலும் பச்சை பசுமையான இயற்கை சூழல், மலைகள், அருவிகள், தூய்மையான காற்று என்று வாழும் பெண்களின் இறப்பு விகிதம் 12% மற்ற சூழலில் வாழும் பெண்களை காட்டிலும் குறைவாக உள்ளதாம்.
பசுமை நிறைந்த சூழலில் வாழும் பெண்களில் 34% குறைவான அளவில் தான் மூச்சுப் பிரச்சினையால் இறக்கிறார்களாம். 13% அளவில் தான் கேன்சரால் இறப்பு விகிதம் ஏற்படுகிறதாம். இது மற்ற சூழலில் வாழும் பெண்களின் இறப்பை காட்டிலும் குறைவாக உள்ளதாம் .

பெண்களே நீங்கள் நீண்ட காலம் வாழ நினைத்தால் பசுமையான சூழல் அதை கொடுக்கும் என்பது தான் புதிய தகவல். இந்த இயற்கையான அமைதியான சூழல் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் உடல் செயல்களை அதிகப்படுத்துவதால் உங்கள் ஆயுளும் நீடிக்கிறது.
பசுமையான இயற்கைக்கும் இறப்பு விகதத்திற்கும் தொடர்பு உள்ளது. இதனுடன் மற்ற காரணிகளான வயது, வாழ்க்கை ஓட்டம், புகைப்பழக்கம், பொருளாதாரம் அவைகளும் சேர்க்கப்படுகின்றன.
பெண்கள் 250 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிலும் பசுமையான சூழலில் வாழ்ந்தால் 12% விபத்து இல்லாத இறப்பு விகிதம் குறைகிறது. இந்த ஆராய்ச்சி குறிப்பாக கேன்சர் மற்றும் மூச்சுப் பிரச்சினைகளின் இறப்பு விகிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
உடல் நலக் கோளாறுகள், மன அழுத்தம் ,கவலை எல்லாவற்றையும் மறக்கடிக்க வைத்திடுமாம் பசுமையான சூழல். எனவே நீங்கள் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ விரும்பினால் பசுமையான இயற்கை சூழலில் உங்கள் நேரத்தை கழியுங்கள்.
அழகாக காற்றில் அசைந்தாடும் பூக்கள், பசுமையான புல்வெளி, உயர்ந்த மரங்கள் இப்படி சுற்றிலும் எங்கும் பசுமை நிறைந்த இடங்கள் உங்கள் மன நல ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாம்.
இயற்கையின் பசுமை உங்கள் கேன்சர், மூச்சுப் பிரச்சினை மற்றும் சிறுநீரக பிரச்சினை இவற்றால் ஏற்படும் இறப்பு விகிதத்தை நேரடியாக குறைப்பதில்லை.
அதற்கு பதிலாக உங்கள் மன நல ஆரோக்கியம், சமூக பங்களிப்பு, உடல் செயல்கள் மற்றும் மாசு இல்லாத தூய்மையான காற்று போன்றவற்றின் வழியாக இறப்பு விகிதத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

