Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
வெளி உலகத்தோடு இணைந்து வாழ்ந்தால் பெண்ணிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
வெளிச் சூழலில் வாழும் பெண்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற கருத்தை பற்றிய தகவல் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிச் சூழலில் இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது உங்களுக்கு ஆரோக்கியமான தருணங்களை அள்ளிக் கொடுக்கும். அதுவும் பெண்களுக்கு வெளிச் சூழல் வாழ்க்கை அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கிறதாம்.
ஆமாங்க சுற்றிலும் பச்சை பசுமையான இயற்கை சூழல், மலைகள், அருவிகள், தூய்மையான காற்று என்று வாழும் பெண்களின் இறப்பு விகிதம் 12% மற்ற சூழலில் வாழும் பெண்களை காட்டிலும் குறைவாக உள்ளதாம்.
பசுமை நிறைந்த சூழலில் வாழும் பெண்களில் 34% குறைவான அளவில் தான் மூச்சுப் பிரச்சினையால் இறக்கிறார்களாம். 13% அளவில் தான் கேன்சரால் இறப்பு விகிதம் ஏற்படுகிறதாம். இது மற்ற சூழலில் வாழும் பெண்களின் இறப்பை காட்டிலும் குறைவாக உள்ளதாம் .

பெண்களே நீங்கள் நீண்ட காலம் வாழ நினைத்தால் பசுமையான சூழல் அதை கொடுக்கும் என்பது தான் புதிய தகவல். இந்த இயற்கையான அமைதியான சூழல் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் உடல் செயல்களை அதிகப்படுத்துவதால் உங்கள் ஆயுளும் நீடிக்கிறது.
பசுமையான இயற்கைக்கும் இறப்பு விகதத்திற்கும் தொடர்பு உள்ளது. இதனுடன் மற்ற காரணிகளான வயது, வாழ்க்கை ஓட்டம், புகைப்பழக்கம், பொருளாதாரம் அவைகளும் சேர்க்கப்படுகின்றன.
பெண்கள் 250 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிலும் பசுமையான சூழலில் வாழ்ந்தால் 12% விபத்து இல்லாத இறப்பு விகிதம் குறைகிறது. இந்த ஆராய்ச்சி குறிப்பாக கேன்சர் மற்றும் மூச்சுப் பிரச்சினைகளின் இறப்பு விகிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
உடல் நலக் கோளாறுகள், மன அழுத்தம் ,கவலை எல்லாவற்றையும் மறக்கடிக்க வைத்திடுமாம் பசுமையான சூழல். எனவே நீங்கள் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ விரும்பினால் பசுமையான இயற்கை சூழலில் உங்கள் நேரத்தை கழியுங்கள்.
அழகாக காற்றில் அசைந்தாடும் பூக்கள், பசுமையான புல்வெளி, உயர்ந்த மரங்கள் இப்படி சுற்றிலும் எங்கும் பசுமை நிறைந்த இடங்கள் உங்கள் மன நல ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாம்.
இயற்கையின் பசுமை உங்கள் கேன்சர், மூச்சுப் பிரச்சினை மற்றும் சிறுநீரக பிரச்சினை இவற்றால் ஏற்படும் இறப்பு விகிதத்தை நேரடியாக குறைப்பதில்லை.
அதற்கு பதிலாக உங்கள் மன நல ஆரோக்கியம், சமூக பங்களிப்பு, உடல் செயல்கள் மற்றும் மாசு இல்லாத தூய்மையான காற்று போன்றவற்றின் வழியாக இறப்பு விகிதத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

