Latest Updates
-
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
தினமும் தொப்புளில் எண்ணெய் வைப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்-ன்னு தெரியுமா?
இங்கு தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் பின்பற்றும் சில இயற்கை வைத்தியங்கள் பார்க்க முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே அவைகள் நல்ல பலனை விரைவில் காண்பிக்கும். அதில் ஒன்று தான் தொப்புளில் எண்ணெய் வைப்பது. இந்த பகுதியில் எண்ணெயை தினமும் வைப்பதன் மூலம், நாம் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இக்கட்டுரையில் தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

கடுகு எண்ணெய்
உதடுகளில் அடிக்கடி வெடிப்பு ஏற்படுகிறதா? மூட்டு வலி உள்ளதா? அப்படியெனில் சிறிது கடுகு எண்ணெயை தொப்புளில் வையுங்கள். தொப்புளுக்கும், உதடு மற்றும் மூட்டுகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்கலாம். ஆனால், உண்மையிலேயே நல்ல தீர்வு கிடைக்கும்.

வேப்ப எண்ணெய்
வேப்ப எண்ணெயை தொப்புளில் வைத்து சிறிது மசாஜ் செய்து வந்தால், அசிங்கமாக வரும் பருக்களின் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை தொப்புளில் வைத்து வருவதன் மூலம், முகப் பொலிவு அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்
தினமும் தொப்புளில் தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயிலை வைப்பதன் மூலம், கருவளம் மேம்படும்.

நெய்
மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? அப்படியெனில் தினமும் தொப்புளில் நெய்யை வைத்து வாருங்கள்.

விளக்கெண்ணெய்
முழங்கால் வலி உள்ளவர்கள், விளக்கெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் தொப்புளில் வைத்தால், வலி குறையும்.

ஆல்கஹால்
காய்ச்சல் அல்லது சளியால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியெனில் பஞ்சுருண்டையை ஆல்கஹாலில் நனைத்து, தொப்புளில் வையுங்கள்.

பிராந்தி
மாதவிடாய் கால வயிற்றுப் பிடிப்புக்களில் இருந்து விடுபட, பிராந்தியில் நனைத்த பஞ்சுருண்டையை தொப்புளில் வைத்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications