Just In
- 32 min ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 1 hr ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
முதுகுவலியை குணப்படுத்த இந்த ஆசனத்தை தவறாமல் செய்யுங்க!!
முதுகுவலியை குணப்படுத்த யோகாவில் நிறைய ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் சப்த படங்குஸ்தாசனம். இதை செய்யும்போது முதுகிற்கு நெகிழ்வுத்தன்மையும் பலமும் ஏற்படுகிறது. அதோடு இந்த ஆசனத்தை தினமும் செய்வதால் ப
முதுகுவலியை குணப்படுத்த யோகாவில் நிறைய ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் சப்த படங்குஸ்தாசனம். இதை செய்யும்போது முதுகிற்கு நெகிழ்வுத்தன்மையும் பலமும் ஏற்படுகிறது. அதோடு இந்த ஆசனத்தை தினமும் செய்வதால் பலவித நன்மைகளை பெறலாம்.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு முதுகு அதிக பாதிப்புக்குள்ளாகும். இதனால் தாளாத முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர்.
தொடைகளிலும் அடிக்கடிபிடிப்பு உண்டாகும். அமர்ந்த நிலையில் தொடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் த்சைகளில் உண்டாகும் பிடிப்பே தொடை வலிக்கு காரணம்.
யோகா :
முதுகு வலி போக்கும் வகையில் மருந்துகள், பிஸியோதெரபி என இருந்தாலும், யோகாதான் சிறந்தது என சொல்லலாம். ஏனென்றால் மருந்தோ தெரபியோ அந்த குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும்தான் நிவர்த்தி தரும்.
ஆனால் யோகாவை செய்வதனால் இன்னும் கூடுதலாக பல உறுப்புகள் பலம் பெற்று வலிகளை குணப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
சப்த படங்குஸ்தாசனம் :
சப்த படங்குஸ்தானம் என்பது கைகளால் பாதத்தை தொடுவதாகும். இந்த ஆசனத்தால் தொடைகள் பலம் பெறுகிறது. முதுகிற்கு நெகிழ்வுத்தன்மை அதிகரித்து ரத்த ஓட்டம் நன்றாக பாய்கிறது எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
செய்முறை :
முதலில் கால் நீட்டி அமர்ந்து மெதுவாய் மூச்சை இழுத்து விடுங்கள்.
பின்னர் தரையில் படுத்துக் கொள்ளவும். கால்களையும் கைகளையும் தளர்வாய் வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாய் மூச்சை இழுத்து ஆழமாய் விடவும்.
செய்முறை :
பின் மெதுவாக வலது காலை மட்டும் உயர்த்தவும். நேராக வளைக்காமல் உயர்த்துங்கள்.
உங்களால் ஆரம்பித்தில் நேராக உயர்த்த முடியவில்லையென்றால் யோகா ஸ்ட்ராப் கிடைக்கிறது. அதனை பாதத்தில் மாட்டி உயர்த்தவும். இதனால் முட்டி வளையாமல் நேராக இருக்கும்.
செய்முறை :
கைகளை நீட்டில் வலது பாதத்தின் கட்டை விரலை தொட முயலுங்கள். ஆரம்பித்தில் முயன்றாலும், நன்றாக பயிற்சி செய்தபின் கால் கட்டை விரலை தொட வேண்டும்.
இதே நிலையில் 1 நிமிடம் இருந்த பின் கால்களை தளர்த்துங்கள். அதன்பின் இதே போல் இடது காலிற்கும் செய்ய வேண்டும்.
பலன்கள் :
முட்டியை பலப்படுத்தும். முதுவலியை சரிசெய்யும். தொடை தசைகளை உறுதியாக்கும். கருப்பையின் பலத்தை அதிகப்படுத்தும்.
புரோஸ்டேட் சுரப்பியை தூண்டும். இடுப்பு எலும்புகளை வலுவாக்கும். ரத்த அழுத்தத்தை சமன்படுத்தும்.
குறிப்பு :
தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.