Latest Updates
-
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!
ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்கிறீர்களா? கொஞ்சம் யோசிச்சுக்கோங்க!!
காய்ச்சல், ஜலதோஷம் என சின்ன உபாதைகள் எல்லாம் வந்தால்தான் நாம் இயல்பாக இருக்கிறோம் என்று பொருள். இதற்கே பயந்து போய் உடனே கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடுவதால் உங்கள் உடல் எப்படி பாதிக்கப்படுகிறது?
ஒரு நாட்டில் போர் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த ஒரு பயிற்சியும் பெறாமல் இருக்கிறார்கள். சிறிய போர் வருகிறது. அப்போது அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் போரிடுகிறார்கள்.
இதனால் என்ன நடக்கும். அந்த வீரர்கள் போரிடுவதையே மறந்திருப்பார்கள். மிகப் பெரிய போர் வரும்போது அப்போதும் என்ன செய்வதென தெரியாமல் தோற்றுவிடுவார்கள். மாற்று வீரர்கள் வந்து காப்பாற்ற வேண்டும்.

இதுதான் நம் உடலில் நடக்கும் மெக்கானிசம். உங்கள் ரத்தத்திலுள்ள வெள்ளையணுக்கள்தான் போர் வீரர்கள் (ஆன்டிபாடி). அந்த மாற்று வீரர்கள்தான் ஆன்டிபயாடிக்.

ஆன்டிபாடி :
வெள்ளையணுக்கள் சின்ன சின்ன உபாதைகளில் அவை தங்கள் முழு பலத்தையும் காண்பித்து எதிர்ப்பதால். பலம் பெற்று இன்னும் தங்களை மேம்படுத்திக் கொள்ளும்.

ஆன்டிபயாடிக் :
ஆனால் சின்ன நோய்களுக்கெல்லாம் மாற்று வீரர்களான ஆன்டிபயாடிக்கை எடுத்துக் கொண்டால் வெள்ளையணுக்களுக்கு உடலை எப்படி காப்பதென தெரியாமல் பலம்பெறாது.
இதனால் எப்போதும் ஆன்டிபயாடிக்கையே நம்பி இருக்க வேண்டும். அதனால் என்ன பிரச்சனைகள் உண்டாகுமென தெரியுமா?

உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதி :
நீங்கள் தொடர்ந்து ஆன்டிபயாடிக் சாப்பிடும்போது உடல் பருமன் அதிகரிக்கும். சர்க்கரை வியாதி வரும் ஆபத்தும் இருக்கிறது.

ஹைபர் அசிடிட்டி மற்றும் அல்சர் :
ஆன்டிபயாடிக் உடலில் பெருகும் நல்ல பேக்டீரியாக்களின் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் பலவித பிரச்சனைகள் ஏற்படும்.
இவை அதிக அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால் நெஞ்செரிச்சலில் தொடங்கி அல்சர் வரை முடியலாம்.

மனப்பதட்டம் :
ஆன்டிபயாடிக் நரம்பு மண்டல்த்தை பலவீனப்படுத்தும். மூளியயில் செயல்திறனையும் பாதிக்கும். இதனால் மனப்பதட்டம், குழப்பம், ஆகியவை உண்டாகலாம்.

சிறு நீரகம் :
யோசித்து பாருங்கள். இவற்றை உடலுக்குள் நோய்க்கு பயன்படுத்திய பிறகு அதன் சக்தி வாய்ந்த நச்சுப்பொருட்கள் இறுதியாக சிறு நீரகத்தை சென்றடையும்.
அவ்ற்றை வடிகட்ட முடியாமல் திணறும். . இதனால் சிறு நீரகம் செயலிழக்கும் அபாயமும் உண்டாகும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துங்கள் :
முடிந்த வரை சின்ன சின்ன வியாதிகளுக்கு மாத்திரைகளை தவிருங்கள். காய்ச்சல் ஜலதோஷம் ஆகியவை சதரணமாக நடக்கக் கூடியதுதான்.
நல்ல ஆரோக்கியமான காய்கறிகளால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தினால் 3 நாட்களில் சரியாகிவிடும்.



Click it and Unblock the Notifications