Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
செல்ஃபி எடுக்கப் போறீங்களா? இந்த பாதிப்புகள் ஏற்படலாம் உஷார்!!
மிகையாக செல்ஃபி எடுப்பதால் மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக பல பாதிப்புகளை தருகின்றன. ஏன் உயிருக்கும் ஆபத்தை தரும் வகையில் பல நிகழ்வுகள் உண்டாயிருக்கின்றன. எதுவும் அளவோடு இருக்கும்போது தவறில்லை.
செல்ஃபி எடுப்பதில் என்ன பிரச்சனை. நம முகம் அழகாய் இருக்கிறதா என பார்த்துக் கொள்கிறோம். நமது குறைகள் என்னவென்று தெரிந்து கொள்கிறோம்.
எந்த கோணத்தில் நாம் அழகாய் இருக்கிறோம் என உறுதிபடுத்திக் கொள்கிறோம். இதெல்லாம் சரிதான். ஆனால் இதுவே மிகையாகும்போது ஆபத்துக்கள் தராதா?

பிறந்த குழந்தையே செல்ஃபி எடுக்கிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்கும் எப்போதும் செல்ஃபிதான். இது சிலருக்கு நோயாகவும் மாறியிருக்கிறது. நிமிடத்திற்கு ஒருமுறை செல்ஃபி எடுக்காவிட்டால் நிம்மதியின்றி இருப்பார்கள்.
செல்ஃபி உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல பாதிப்புகளை தருகிறது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றது. செல்ஃபியினால் உண்டாகும் பாதிப்புகள் எவையென பார்க்கலாமா?

அதீத ஈடுபாடு :
சமீபத்தில் ஒஹியோ பல்கலைக்கழகத்தில் எடுத்த ஆய்வில் செல்ஃபி எடுத்துக்க் கொண்டேயிருப்பவர்கள் உளவியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்பவும் செல்ஃபி எடுத்து போட்டுக் கொண்டேயிருப்பவர்கள் உளவியல் ரீதியாக அதீத ஈடுபாடு ஒன்றின் மீது வைப்பார்கள்.
இதனால் பலவிதமான பாதிப்புகள் உண்டாகும். உதாரணத்திற்கு ஃபேஸ்புக் அவருக்கு பிடித்தமானதென்றால் அதற்கு அடிமையாகி வேறெந்த வேலையிலும் கவனமில்லாமல் இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களுக்கு தெரபி மிகவும் அவசியம்.

உயிருக்கு ஆபத்தை தரும் :
எப்படியென்றால் வித்யாசமாக எடுக்க வேண்டுமென நினைத்து மிக உயரமான கட்டங்கள் அல்லது அருவி போன்ற நீர்நிலைகளில் அமர்ந்து செல்ஃபி எடுக்கும்போது தங்கள் முகம் சரியாக இருக்கிறதா என கவனத்தை அதில் வைக்கும்போது பிசகி விழுந்து உயிரை துறந்தவர்கள் ஏராளம்.
உயிருக்கு உலை வைக்கும் இதனை சற்று ஆபத்தான் இடங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தலையில் பேன் வர வாய்ப்புகள் உண்டு:
நண்பர்களுடன் எப்போதும் தலையை ஒன்றாக வைத்து ஒட்டி உறவாடு செல்ஃபி எடுத்துக் கொள்ளும்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பென் வர வாய்ப்புகள் அதிகம்.

உடலை இளைக்கச் செய்தல் :
செல்ஃபி எடுக்கும்போது மிக அருகில் மொபைலை வைப்பதால் உடல் குண்டாக தெரியும்.
இதனை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது தாங்கள் குண்டாக தெரிகிறோம் என்று நினைப்பதால் மொபைலில் ஒல்லியாக தெரிய வேண்டும் என தங்கள் சாப்பாட்டின் அளவை குறைத்து உடலை மெலியய்ச் செய்கிறார்கள்.
இதனால் சத்து குறைந்து பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

முழங்கை பாதிப்பு :
தொடர்ந்து முழங்கையை வளைத்தபடியே ஃபோட்டோ எடுப்பதால் முழங்கைகளில் திசுக்கள் பாதிப்படைந்து வீக்கம் உண்டாகிறது.
இதனால் முழங்கை வலி உண்டாகி அங்கே தேய்மானமும் நடக வாய்ப்புகள் அதிகம்.



Click it and Unblock the Notifications











