Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
செல்ஃபி எடுக்கப் போறீங்களா? இந்த பாதிப்புகள் ஏற்படலாம் உஷார்!!
மிகையாக செல்ஃபி எடுப்பதால் மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக பல பாதிப்புகளை தருகின்றன. ஏன் உயிருக்கும் ஆபத்தை தரும் வகையில் பல நிகழ்வுகள் உண்டாயிருக்கின்றன. எதுவும் அளவோடு இருக்கும்போது தவறில்லை.
செல்ஃபி எடுப்பதில் என்ன பிரச்சனை. நம முகம் அழகாய் இருக்கிறதா என பார்த்துக் கொள்கிறோம். நமது குறைகள் என்னவென்று தெரிந்து கொள்கிறோம்.
எந்த கோணத்தில் நாம் அழகாய் இருக்கிறோம் என உறுதிபடுத்திக் கொள்கிறோம். இதெல்லாம் சரிதான். ஆனால் இதுவே மிகையாகும்போது ஆபத்துக்கள் தராதா?

பிறந்த குழந்தையே செல்ஃபி எடுக்கிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்கும் எப்போதும் செல்ஃபிதான். இது சிலருக்கு நோயாகவும் மாறியிருக்கிறது. நிமிடத்திற்கு ஒருமுறை செல்ஃபி எடுக்காவிட்டால் நிம்மதியின்றி இருப்பார்கள்.
செல்ஃபி உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல பாதிப்புகளை தருகிறது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றது. செல்ஃபியினால் உண்டாகும் பாதிப்புகள் எவையென பார்க்கலாமா?

அதீத ஈடுபாடு :
சமீபத்தில் ஒஹியோ பல்கலைக்கழகத்தில் எடுத்த ஆய்வில் செல்ஃபி எடுத்துக்க் கொண்டேயிருப்பவர்கள் உளவியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்பவும் செல்ஃபி எடுத்து போட்டுக் கொண்டேயிருப்பவர்கள் உளவியல் ரீதியாக அதீத ஈடுபாடு ஒன்றின் மீது வைப்பார்கள்.
இதனால் பலவிதமான பாதிப்புகள் உண்டாகும். உதாரணத்திற்கு ஃபேஸ்புக் அவருக்கு பிடித்தமானதென்றால் அதற்கு அடிமையாகி வேறெந்த வேலையிலும் கவனமில்லாமல் இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களுக்கு தெரபி மிகவும் அவசியம்.

உயிருக்கு ஆபத்தை தரும் :
எப்படியென்றால் வித்யாசமாக எடுக்க வேண்டுமென நினைத்து மிக உயரமான கட்டங்கள் அல்லது அருவி போன்ற நீர்நிலைகளில் அமர்ந்து செல்ஃபி எடுக்கும்போது தங்கள் முகம் சரியாக இருக்கிறதா என கவனத்தை அதில் வைக்கும்போது பிசகி விழுந்து உயிரை துறந்தவர்கள் ஏராளம்.
உயிருக்கு உலை வைக்கும் இதனை சற்று ஆபத்தான் இடங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தலையில் பேன் வர வாய்ப்புகள் உண்டு:
நண்பர்களுடன் எப்போதும் தலையை ஒன்றாக வைத்து ஒட்டி உறவாடு செல்ஃபி எடுத்துக் கொள்ளும்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பென் வர வாய்ப்புகள் அதிகம்.

உடலை இளைக்கச் செய்தல் :
செல்ஃபி எடுக்கும்போது மிக அருகில் மொபைலை வைப்பதால் உடல் குண்டாக தெரியும்.
இதனை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது தாங்கள் குண்டாக தெரிகிறோம் என்று நினைப்பதால் மொபைலில் ஒல்லியாக தெரிய வேண்டும் என தங்கள் சாப்பாட்டின் அளவை குறைத்து உடலை மெலியய்ச் செய்கிறார்கள்.
இதனால் சத்து குறைந்து பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

முழங்கை பாதிப்பு :
தொடர்ந்து முழங்கையை வளைத்தபடியே ஃபோட்டோ எடுப்பதால் முழங்கைகளில் திசுக்கள் பாதிப்படைந்து வீக்கம் உண்டாகிறது.
இதனால் முழங்கை வலி உண்டாகி அங்கே தேய்மானமும் நடக வாய்ப்புகள் அதிகம்.



Click it and Unblock the Notifications