Latest Updates
-
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்..
இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு மனநல பாதிப்பு உண்டாகிறது, ஏன் தெரியுமா?
உலக மக்கள் தொகையில் 38 சதவீதம், இந்தியா மற்றும் சீனாவின் மக்களே ஆக்கிரமித்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள இந்த இரு நாடுகளிலுமே மக்கள் அதிகமாய் மன நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது.
இந்திய- சீன மக்களின் மன நலம் தொடர்பான ஆராய்ச்சி நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சீனாவில் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக, நரம்பு தளர்ச்சி, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் சைக்யாட்ரிக் நோயினால் பாதிப்புக்குள்ளானோர் 40 சதவீதம், அவர்களின் மன நோயை குணப்படுத்தாமலே இருக்கின்றனர். தகுந்த மன நல மருத்துவரிடம் பரிசோதிக்காமல், அப்படியே விட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் பத்தில் ஒருவர் மன நோய்களுக்கு ஆளாகிறார்கள், மன அழுத்தம், பதட்டம் அதனால் உண்டாகும் நரம்பு தளர்ச்சி, ஆகியவ்ற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சரியாக இந்த நோய்கள் கவனிக்கப்படாமல் இருப்பதற்கு காரணங்களையும் குறிப்பிடுகிறார்கள். தகுந்த மன நல மருத்துவங்கள் இல்லை, சிறந்த மருத்துவர்கள் இல்லை, போதிய அளவு வசதிகள் இல்லை என நிறைய காரணங்களை சாடியிருக்கிறார்கள்.
அரசாங்கத்தால் 1 சதவீதத்திற்கும் குறைவான முதலீடே மன நல மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதனால்தான் போதுமான வசதி கொண்ட மன நல மருத்துவமனைகள் இந்தியாவில் அமையாததற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
மன நல மருத்துவ மனைகளில் போதுமான ஊழியர்களை நியமிக்க வெண்டும். இந்த மாதிரியான மருத்துவமனைகள் உருவாக சமூகத்தில் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
நல்ல படித்த மன நல மருத்துவர்கள் சேவை செய்ய வர வெண்டும் என கூறுகின்றனர். இதனால் இன்னும் மனநலக் காப்பகங்கள் அதிகப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்களுக்கு தீர்வு அளிக்கலாம் என்றும் ஆய்வாலர் கூறுகிறார்.
மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை, எபிலெப்ஸி, ஆகியவை இந்தியாவில் வர நம் சமூக கட்டமைப்பு மற்றும் வாழும் சூழ் நிலைகளும் ஒரு விதத்தில் காரணம் என்கின்றனர்.
இதன் தொடர்பான ஆய்வு இன்னும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனைப் பற்றி லேன்சட் அண்ட் லேன்சட் சைக்யாட்ரி என்ற இதழில் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

