Latest Updates
-
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி!
இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு மனநல பாதிப்பு உண்டாகிறது, ஏன் தெரியுமா?
உலக மக்கள் தொகையில் 38 சதவீதம், இந்தியா மற்றும் சீனாவின் மக்களே ஆக்கிரமித்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள இந்த இரு நாடுகளிலுமே மக்கள் அதிகமாய் மன நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது.
இந்திய- சீன மக்களின் மன நலம் தொடர்பான ஆராய்ச்சி நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சீனாவில் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக, நரம்பு தளர்ச்சி, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் சைக்யாட்ரிக் நோயினால் பாதிப்புக்குள்ளானோர் 40 சதவீதம், அவர்களின் மன நோயை குணப்படுத்தாமலே இருக்கின்றனர். தகுந்த மன நல மருத்துவரிடம் பரிசோதிக்காமல், அப்படியே விட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் பத்தில் ஒருவர் மன நோய்களுக்கு ஆளாகிறார்கள், மன அழுத்தம், பதட்டம் அதனால் உண்டாகும் நரம்பு தளர்ச்சி, ஆகியவ்ற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சரியாக இந்த நோய்கள் கவனிக்கப்படாமல் இருப்பதற்கு காரணங்களையும் குறிப்பிடுகிறார்கள். தகுந்த மன நல மருத்துவங்கள் இல்லை, சிறந்த மருத்துவர்கள் இல்லை, போதிய அளவு வசதிகள் இல்லை என நிறைய காரணங்களை சாடியிருக்கிறார்கள்.
அரசாங்கத்தால் 1 சதவீதத்திற்கும் குறைவான முதலீடே மன நல மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதனால்தான் போதுமான வசதி கொண்ட மன நல மருத்துவமனைகள் இந்தியாவில் அமையாததற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
மன நல மருத்துவ மனைகளில் போதுமான ஊழியர்களை நியமிக்க வெண்டும். இந்த மாதிரியான மருத்துவமனைகள் உருவாக சமூகத்தில் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
நல்ல படித்த மன நல மருத்துவர்கள் சேவை செய்ய வர வெண்டும் என கூறுகின்றனர். இதனால் இன்னும் மனநலக் காப்பகங்கள் அதிகப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்களுக்கு தீர்வு அளிக்கலாம் என்றும் ஆய்வாலர் கூறுகிறார்.
மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை, எபிலெப்ஸி, ஆகியவை இந்தியாவில் வர நம் சமூக கட்டமைப்பு மற்றும் வாழும் சூழ் நிலைகளும் ஒரு விதத்தில் காரணம் என்கின்றனர்.
இதன் தொடர்பான ஆய்வு இன்னும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனைப் பற்றி லேன்சட் அண்ட் லேன்சட் சைக்யாட்ரி என்ற இதழில் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

