Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு மனநல பாதிப்பு உண்டாகிறது, ஏன் தெரியுமா?
உலக மக்கள் தொகையில் 38 சதவீதம், இந்தியா மற்றும் சீனாவின் மக்களே ஆக்கிரமித்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள இந்த இரு நாடுகளிலுமே மக்கள் அதிகமாய் மன நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது.
இந்திய- சீன மக்களின் மன நலம் தொடர்பான ஆராய்ச்சி நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சீனாவில் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக, நரம்பு தளர்ச்சி, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் சைக்யாட்ரிக் நோயினால் பாதிப்புக்குள்ளானோர் 40 சதவீதம், அவர்களின் மன நோயை குணப்படுத்தாமலே இருக்கின்றனர். தகுந்த மன நல மருத்துவரிடம் பரிசோதிக்காமல், அப்படியே விட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் பத்தில் ஒருவர் மன நோய்களுக்கு ஆளாகிறார்கள், மன அழுத்தம், பதட்டம் அதனால் உண்டாகும் நரம்பு தளர்ச்சி, ஆகியவ்ற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சரியாக இந்த நோய்கள் கவனிக்கப்படாமல் இருப்பதற்கு காரணங்களையும் குறிப்பிடுகிறார்கள். தகுந்த மன நல மருத்துவங்கள் இல்லை, சிறந்த மருத்துவர்கள் இல்லை, போதிய அளவு வசதிகள் இல்லை என நிறைய காரணங்களை சாடியிருக்கிறார்கள்.
அரசாங்கத்தால் 1 சதவீதத்திற்கும் குறைவான முதலீடே மன நல மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதனால்தான் போதுமான வசதி கொண்ட மன நல மருத்துவமனைகள் இந்தியாவில் அமையாததற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
மன நல மருத்துவ மனைகளில் போதுமான ஊழியர்களை நியமிக்க வெண்டும். இந்த மாதிரியான மருத்துவமனைகள் உருவாக சமூகத்தில் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
நல்ல படித்த மன நல மருத்துவர்கள் சேவை செய்ய வர வெண்டும் என கூறுகின்றனர். இதனால் இன்னும் மனநலக் காப்பகங்கள் அதிகப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்களுக்கு தீர்வு அளிக்கலாம் என்றும் ஆய்வாலர் கூறுகிறார்.
மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை, எபிலெப்ஸி, ஆகியவை இந்தியாவில் வர நம் சமூக கட்டமைப்பு மற்றும் வாழும் சூழ் நிலைகளும் ஒரு விதத்தில் காரணம் என்கின்றனர்.
இதன் தொடர்பான ஆய்வு இன்னும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனைப் பற்றி லேன்சட் அண்ட் லேன்சட் சைக்யாட்ரி என்ற இதழில் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













