Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் பவனமுத்தாசனம்- தினம் ஒரு யோகா
மலச்சிக்கலால் அநேக பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவகையில் போதிய உடற்பயிற்சி இல்லாததும் காரணம்.
மேலும் கொழுப்பு மிகுந்த உணவுகள் , நார்சத்து குறைந்த உணவுகள், மைதா கலந்த உணவுகள் சாப்பிடுவதால், குறைவான நீர் குடிப்பதால், மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புண்டு.

மலச்சிக்கல் இருந்தால் நச்சுக்கள் வெளியேறாது. கழிவுகள் வெளியே செல்லாமல் உள்ளேயே தங்கிவிடும்போது, வயிற்றில் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.
இவை உடலில் தொற்றுக்களையும், வாய்வினையும் ஏற்படுத்தும். அப்படியே அதனை கவனிக்காமல் விட்டால் பைல்ஸ் போன்ற வியாதிகளை பெற வேண்டிய நிலைமை வரும்.
மலச்சிக்கலை சரிபடுத்த என்னென்னமோ செய்து பார்த்தும் சரியாகாமல் தினம் தினம் போராடிக் கொண்டிருந்தால், நீங்கள் மாற்றுவழியை தேர்ந்தெடுப்பது முக்கியம்.
மலச்சிக்கலை குணமாக்க ஒரு எளிய வழி இருக்கிறது தெரியுமா?ஆமாம் யோகாதான். யோகாவினால் எதுவும் முடியும். உங்கள் மலச்சிக்கலையும் குணப்படுத்த முடியும். எப்படி என பார்க்கலாமா?
பவனமுத்தாசனம்:
பவன் என்றால் சமஸ்கிருதத்தில் வாயு. முக்தா என்றால் விடுதலை. இந்த ஆசனத்தில் அடிவயிற்றில் அதிக அழுத்தம் தரப்படுகிறது. மலக்குடல் நெகிழ்த்தபட்டு மலச்சிக்கலை விடுவிக்கின்றது.
செய்முறை :
முதலில் நேராக படுத்துக் கொள்ளுங்கள். கைகள் தரையில் பதிந்திருக்க வேண்டும். கால்கள் வளையாமல் நேராய் வைத்திருங்கள்.
இப்போது மேலே படத்தில் காட்டியது போல், இடது காலின் முட்டியை மடித்து, தொடை வயிற்றில் படுமாறு கொண்டு செல்லுங்கள்.
வலது கால் தரையிலேயே இருக்கவேண்டும். பின்னர் மெதுவாக தலையை தூக்கி, நெற்றில் இடது முட்டியில் படுமாறு வையுங்கள்.இந்த நிலையிலேயே சில நொடிகள் இருக்க வேண்டும்.
ஆழ்ந்து மூச்சை விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவேண்டும். இடது காலில் செய்தது போல், இப்போது வலது காலுக்கும் செய்யுங்கள்.
இந்த யோகாவை ஒரே சமயத்தில் இரு கால்களிலும் சேர்ந்து செய்யலாம்.
பலன்கள் :
மலச்சிக்கல் தீரும், ஜீரணம் அதிகரிக்கும். வாய்வு உருவாகாமல் தடுக்கும். மலக்குடல் பெருங்குடல் ஆகிவயவை நெகிழப்படும். நச்சுக்கள் வெளியேறும்.
குறிப்பு : கர்ப்பிணிகள் இந்த யோகாவை செய்ய வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














