Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம்
மன உளைச்சலை குணப்படுத்தும் மார்ஜாரியாசனா !!
மன உளைச்சல் பலவிதங்களில் இன்று மனிதர்களை தாக்குகிறது. வேலை, குடும்பம், பொருளாதாரம் ஏன் குழந்தைகளுக்கும் அதிக படிக்க வேண்டிய சூழ் நிலையில் மன அழுத்தம் உண்டாகிறது.
மன உளைச்சல் பலவிதங்களில் இன்று மனிதர்களை தாக்குகிறது. போட்டி நிறைந்த சூழ் நிலையில் உங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிகளும் கடின உழைப்பும் தேவைதான்.
அதே சமயம் அதனால் உண்டாகும் மன அழுத்தத்தை கண்டு கொள்ளாமல் விட்டால் அது உங்களையே முடக்கிவிடும்.

மன அழுத்தத்தை எப்படி குணப்படுத்தலாம். சந்தேகமில்லை. யோகாவினால் முடியும். யோகா மன அமைதியையும் , தீர்க்கமான செயலாக்கத்தையும் தர உதவும்.அதனை பற்றி விரிவாக காணலாம்.

மார்ஜாரியாசனா :
மார்ஜாரியாசனா பூனையை போன்ற நிலையில் செய்யப்படுவதாகும். இது மன அழுத்தத்திற்கு சிறந்த யோகாவாக விளங்குகிறது. அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :
முதலில் தரையில் முட்டி போட்டு அமருங்கள். நேராக நிமிர்ந்து அமர வேண்டும். மெதுவாக மூச்சைவிட்டபடி தொடருங்கள்.

செய்முறை :
பின்னர் முட்டி போட்ட நிலையிலேயே முன்னோக்கி வளைந்து கைகளை தரையில் பதிக்கவும். இரண்டு கால்களையும் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.
தலையை நன்றாக குனியுங்கள். தொங்க விடுவது போல் தலையை வைக்கவும். தோள்பட்டைகளை நேராக வைத்திருக்கவும்.
முதுகை நன்றாக வளைக்க வேண்டும். சில நொடிகள் இருந்துவிட்டு மீண்டும் இதே போல் 5 முறை செய்யவும்.

நன்மைகள் :
முதுகுத் தண்டிற்கு பலம் தரும். ஸ்பாண்டைலிடிஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

குறிப்பு :
தலையில் சமீபமாக அடிப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது. அதோடு நல்ல பயிற்சியாளரின் உதவியுடன் இந்த ஆசனத்தை செய்வதால் நல்ல பலன் உடனடியாக கிடைக்கும்.



Click it and Unblock the Notifications