Just In
- 42 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 2 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மன உளைச்சலை குணப்படுத்தும் மார்ஜாரியாசனா !!
மன உளைச்சல் பலவிதங்களில் இன்று மனிதர்களை தாக்குகிறது. வேலை, குடும்பம், பொருளாதாரம் ஏன் குழந்தைகளுக்கும் அதிக படிக்க வேண்டிய சூழ் நிலையில் மன அழுத்தம் உண்டாகிறது.
மன உளைச்சல் பலவிதங்களில் இன்று மனிதர்களை தாக்குகிறது. போட்டி நிறைந்த சூழ் நிலையில் உங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிகளும் கடின உழைப்பும் தேவைதான்.
அதே சமயம் அதனால் உண்டாகும் மன அழுத்தத்தை கண்டு கொள்ளாமல் விட்டால் அது உங்களையே முடக்கிவிடும்.
மன அழுத்தத்தை எப்படி குணப்படுத்தலாம். சந்தேகமில்லை. யோகாவினால் முடியும். யோகா மன அமைதியையும் , தீர்க்கமான செயலாக்கத்தையும் தர உதவும்.அதனை பற்றி விரிவாக காணலாம்.
மார்ஜாரியாசனா :
மார்ஜாரியாசனா பூனையை போன்ற நிலையில் செய்யப்படுவதாகும். இது மன அழுத்தத்திற்கு சிறந்த யோகாவாக விளங்குகிறது. அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.
செய்முறை :
முதலில் தரையில் முட்டி போட்டு அமருங்கள். நேராக நிமிர்ந்து அமர வேண்டும். மெதுவாக மூச்சைவிட்டபடி தொடருங்கள்.
செய்முறை :
பின்னர் முட்டி போட்ட நிலையிலேயே முன்னோக்கி வளைந்து கைகளை தரையில் பதிக்கவும். இரண்டு கால்களையும் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.
தலையை நன்றாக குனியுங்கள். தொங்க விடுவது போல் தலையை வைக்கவும். தோள்பட்டைகளை நேராக வைத்திருக்கவும்.
முதுகை நன்றாக வளைக்க வேண்டும். சில நொடிகள் இருந்துவிட்டு மீண்டும் இதே போல் 5 முறை செய்யவும்.
நன்மைகள் :
முதுகுத் தண்டிற்கு பலம் தரும். ஸ்பாண்டைலிடிஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
குறிப்பு :
தலையில் சமீபமாக அடிப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது. அதோடு நல்ல பயிற்சியாளரின் உதவியுடன் இந்த ஆசனத்தை செய்வதால் நல்ல பலன் உடனடியாக கிடைக்கும்.