Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
நீச்சல் குளத்தில் குளித்த பின் கண்கள் சிவப்பது குளோரினால் அல்ல, வேறு எதனால் தெரியுமா?
ஸ்விம்மிங் பூலில் குளித்த பிறகு கண்கள் ஏன் சிவக்கின்றன என்று கேட்டால், நீரில் கலக்கப்படும் குளோரின் என்று தான் அனைவரும் கூறுவார்கள். இதை தான் நாமும் நம்பி வந்தோம். ஆனால், அது குளோரினால் அல்ல, மனிதர்களின் சிறுநீரால் என்று கூறி அதிர்ச்சியளிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

நீரில் குளோரின் கலப்பதால், அதில் இருக்கும் கிருமிகள் அளிக்கப்பட்டு சரும எரிச்சல், காதுகளில் தொற்று, வயிற்றுப்போக்கு எல்லாம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பிறகு எப்படி கண்களில் மட்டும் எரிச்சல் ஏற்படுகிறது என்று பார்த்தல், நீச்சல் குளத்தில் குளிக்கும் சிலர் சிறுநீர் கழிப்பதால் தான் இது ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
சிறுநீர் மட்டுமின்றி அதிகமானோர் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வையும் கூட கண்கள் சிவப்பதற்கும், எரிச்சல் ஏற்படுவதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. நீங்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது எனில், அந்த நீரில் சிறுநீர் அல்லது அளவுக்கு அதிகமாக வியர்வை கலந்துள்ளது என்று பொருள். எனவே, உடனடியாக அந்த நீரை மாற்ற வேண்டியது அவசியம்.
வீட்டில் தனியாக நாம் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஏற்படுவதை விட, பொது நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களில் நாம் விளையாடும் நீச்சல் குளங்களில் குளிக்கும் போது தான் கண்ணெரிச்சல் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம், அங்கு வருவோர் அவர்களுக்கே தெரிந்தும், தெரியாமலும் சிறுநீர் கழிப்பது, மற்றும் கட்டுபடுத்த முடியாத வியர்வை கலப்பதால் தான்.
அடுத்த முறை நீங்கள் தனியார் ஹோட்டல் அல்லது கேளிக்கை பூங்காக்களில் இது போன்ற சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தால், உடனே மேலாளரிடம் கூறி, நீச்சல் குளத்தின் நீரை மாற்ற அறிவுரைக்க மறக்க வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


