Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
நீச்சல் குளத்தில் குளித்த பின் கண்கள் சிவப்பது குளோரினால் அல்ல, வேறு எதனால் தெரியுமா?
ஸ்விம்மிங் பூலில் குளித்த பிறகு கண்கள் ஏன் சிவக்கின்றன என்று கேட்டால், நீரில் கலக்கப்படும் குளோரின் என்று தான் அனைவரும் கூறுவார்கள். இதை தான் நாமும் நம்பி வந்தோம். ஆனால், அது குளோரினால் அல்ல, மனிதர்களின் சிறுநீரால் என்று கூறி அதிர்ச்சியளிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

நீரில் குளோரின் கலப்பதால், அதில் இருக்கும் கிருமிகள் அளிக்கப்பட்டு சரும எரிச்சல், காதுகளில் தொற்று, வயிற்றுப்போக்கு எல்லாம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பிறகு எப்படி கண்களில் மட்டும் எரிச்சல் ஏற்படுகிறது என்று பார்த்தல், நீச்சல் குளத்தில் குளிக்கும் சிலர் சிறுநீர் கழிப்பதால் தான் இது ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
சிறுநீர் மட்டுமின்றி அதிகமானோர் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வையும் கூட கண்கள் சிவப்பதற்கும், எரிச்சல் ஏற்படுவதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. நீங்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது எனில், அந்த நீரில் சிறுநீர் அல்லது அளவுக்கு அதிகமாக வியர்வை கலந்துள்ளது என்று பொருள். எனவே, உடனடியாக அந்த நீரை மாற்ற வேண்டியது அவசியம்.
வீட்டில் தனியாக நாம் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஏற்படுவதை விட, பொது நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களில் நாம் விளையாடும் நீச்சல் குளங்களில் குளிக்கும் போது தான் கண்ணெரிச்சல் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம், அங்கு வருவோர் அவர்களுக்கே தெரிந்தும், தெரியாமலும் சிறுநீர் கழிப்பது, மற்றும் கட்டுபடுத்த முடியாத வியர்வை கலப்பதால் தான்.
அடுத்த முறை நீங்கள் தனியார் ஹோட்டல் அல்லது கேளிக்கை பூங்காக்களில் இது போன்ற சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தால், உடனே மேலாளரிடம் கூறி, நீச்சல் குளத்தின் நீரை மாற்ற அறிவுரைக்க மறக்க வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


