Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
குளிர்கால நோய்களிடமிருந்து உங்களை எப்படி காத்துக் கொள்வீர்கள் ?
குளிர்கால பருவ நிலை வந்தால் கிருமிகளுக்கு கொண்டாட்டம்தான். இவைகள் இந்த ஈரப்பத்தில்தான் பெருகும். நோய்களை அதிக அளவு உற்பத்தி செய்யும்.
காய்ச்சல், ஜலதோஷம், அஜீரணம், குமட்டல் ஆகியவை குளிர் மற்றும் மழைக் காலங்களில் தாக்கும் பொதுவான பிரச்சனைகள். நம் உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தாலும், இவற்றின் ஆதிக்கத்தை தவிர்க்க இயலாது.
அவ்வாறு வரும் சிறு சிறு நோய்களுக்கும் ஆன்டிபயாடிக் சாப்பிட்டு, உங்கள் வெள்ளை அணுக்களை சோம்பேறி செய்து விட வேண்டாம். பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, முழுமையாக ஆன்டிபயாடிக் நம்பியே இருக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுவிடும். ஆகவே நோய்கள் வந்தால் இயற்கையான வழிகளில் நாம் என்ன செய்ய வேண்டும் என காண்போம்.

ஜலதோஷம் காய்ச்சல் ;
இது எல்லாருக்கும் வரக் கூடிய சாதரணம நோய், தினமும் பாலில், மிளகுத் தூள் மற்றும் மஞ்சளை சேர்த்து குடிக்க வேண்டும். முதலில் உங்களுக்கு அதன் பலன் முழுமையாக இல்லாவிட்டாலும், நாளடைவில் எதிர்ப்பு திறன் அதிகரித்து, விரைவில் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் விலகும். சுடு நீரில் மஞ்சள் கலந்து ஆவி பிடித்தாலும் நல்ல பலன் தரும்.

நெஞ்செரிச்சல் :
குளிர்காலத்தில் ஜீரண என்சைம்கள் சரியாக வேலை செய்யாததால், அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும். அப்போது இஞ்சிச் சாறு அல்லது எலுமிச்சை சாறு குடித்தால் அற்புதமான பலனைத் தரும். பழங்கால மருத்துவ முறை இது.

வயிற்று வலி :
வயிற்று வலி ஏற்பட , சூடு, கிருமித் தொற்று, அல்லது வாய்வு , என காரணம் எதுவாகவும் இருக்கலாம். அப்போது, திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி சரியாகும். மேலும் நிறைய நீர் குடிக்கவும். பழங்கள் சாப்பிடவும். ஏனெனில் மலச்சிக்கலாலும் வலி உண்டாகலாம்.

முகப்பருக்கள் :
முகப்பருக்கள் குளிர்காலத்திலும் பாக்டீரியாக்களின் தொற்றுக்களால் ஏற்படும். அந்த சமயங்களில் எண்ணெய் பதார்த்தங்கள், சூடு தரும் உணவுகளைத் தவிர்க்கவும். வேப்பிலையை அரைத்து முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் போட்டால் அவை இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிடும்.

குமட்டல் :
வயிற்றில் ஏதாவது பிரச்சனைகள் உண்டானால் அது குமட்டலாக நமக்கு பிரதிபலிக்கும். அஜீரணம் அல்லது ஃபுட் பாய்ஸனாக இருக்கலாம். அந்த சமயங்களில் எலுமிச்சை ஜூஸில், தேன் மற்றும் இஞ்சி கலந்து குடித்தால், அவை விஷத்தன்மையை முறித்துவிடும்.



Click it and Unblock the Notifications