Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
மஞ்சளை சேர்த்துக் கொண்டால் இந்த புற்றுநோய் வராது !!
மஞ்சளின் மகிமையைப் பற்றி உங்களுக்கு எவரும் சொல்லித் தெரிய வேண்டாம். அதில் பல அரிய மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இந்தியாவிலும் சைனாவிலும் மஞ்சளை ஆரம்ப காலங்களிலிருந்து பயன்படுத்தி வருகிறோம். அதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் புற்று நோய் வராது என கேள்விப்பட்டிருப்பீர்கள். இது குடல் புற்றுநோய் செல்களை அழிப்பது விஞ்ஞான பூர்வமாக இப்போது நிருபிக்கப்பட்டுள்ளது.

மஞ்சளிலுள்ள இரு முக்கிய ரசாயனங்கள் புற்றுநோயை அழிக்க பயன்படுபவை. அவை கர்க்யூமின், சிலிமெரின் ஆகியவைகளாகும். இவை இரண்டும் புற்றுநோய் செல்களை அழிக்கின்றனர்.
புற்றுநோய் வந்தவர்களுக்கு தரப்படும் கீமோதெரபி மற்றும் நச்சு மிகுந்த மருந்துக்களின் வீரியங்களால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகின்றன். ஆனால் இந்த இரண்டு ரசாயனங்களும் எந்தவித பக்க விளைவும் இல்லாமல் புற்றுநோய் செல்களை அழித்து, அவற்றை பெருக விடாமலும் தடுக்கின்றன என்று அமெரிக்காவிலுள்ள செயின்ட் லூயிஸ் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் கூறுகிறார்.
ஆராய்ச்சியாளர்கள் குடலில் வரும் புற்றுநோய் செல்களுக்கு முதலில் கர்க்யூமின் கொடுத்து, பின்னர் செலிமெரின் கொடுத்தனர். இதனால் பெரும்பாலான குடல் புற்றுநோய் செல்கள் அழிந்தன என்று மதுரை காமராஜ பல்கலைக் கழக பேராசிரியர் இசக்கி கூறியிருக்கிறார்.
மேலும் மருத்துவ குணங்களைப் பெற்ற இவ்விரு ஃபைடோ கெமிக்கல்களும் இன்னும் நிறைய பலன்களைத் தரலாம். அவற்றை ஆய்வு செய்தால் இன்னும் இவற்றின் நன்மைகள் தெரிய வரும் என்று கூறுகிறார்.
மேலும் இவ்விரு ஃபைடோகெமிக்கல்கள் ஜீன். டி. என்.ஏ ஆகியவற்றில் எவ்வாறு செயல்படுகிறது, அவற்றின் பண்புகள் ஜீனில் எவ்வாறு வெளிப்படுகிறது என்னென்ன மாற்றங்களை அவை மரபணுக்களில் தருகிரது என ஆராய்ந்தால் இன்னும் நிறைய தெரிய வரலாம் என்று இசக்கி கூறியுள்ளார்.
அதே சமயம் இவ்விரு குர்கியூமின் மற்றும் சிலிமெரின் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அவை ஆபத்தை விளைவிக்கும் என்று மேலும் கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













