Latest Updates
-
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா?
மஞ்சளை சேர்த்துக் கொண்டால் இந்த புற்றுநோய் வராது !!
மஞ்சளின் மகிமையைப் பற்றி உங்களுக்கு எவரும் சொல்லித் தெரிய வேண்டாம். அதில் பல அரிய மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இந்தியாவிலும் சைனாவிலும் மஞ்சளை ஆரம்ப காலங்களிலிருந்து பயன்படுத்தி வருகிறோம். அதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் புற்று நோய் வராது என கேள்விப்பட்டிருப்பீர்கள். இது குடல் புற்றுநோய் செல்களை அழிப்பது விஞ்ஞான பூர்வமாக இப்போது நிருபிக்கப்பட்டுள்ளது.

மஞ்சளிலுள்ள இரு முக்கிய ரசாயனங்கள் புற்றுநோயை அழிக்க பயன்படுபவை. அவை கர்க்யூமின், சிலிமெரின் ஆகியவைகளாகும். இவை இரண்டும் புற்றுநோய் செல்களை அழிக்கின்றனர்.
புற்றுநோய் வந்தவர்களுக்கு தரப்படும் கீமோதெரபி மற்றும் நச்சு மிகுந்த மருந்துக்களின் வீரியங்களால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகின்றன். ஆனால் இந்த இரண்டு ரசாயனங்களும் எந்தவித பக்க விளைவும் இல்லாமல் புற்றுநோய் செல்களை அழித்து, அவற்றை பெருக விடாமலும் தடுக்கின்றன என்று அமெரிக்காவிலுள்ள செயின்ட் லூயிஸ் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் கூறுகிறார்.
ஆராய்ச்சியாளர்கள் குடலில் வரும் புற்றுநோய் செல்களுக்கு முதலில் கர்க்யூமின் கொடுத்து, பின்னர் செலிமெரின் கொடுத்தனர். இதனால் பெரும்பாலான குடல் புற்றுநோய் செல்கள் அழிந்தன என்று மதுரை காமராஜ பல்கலைக் கழக பேராசிரியர் இசக்கி கூறியிருக்கிறார்.
மேலும் மருத்துவ குணங்களைப் பெற்ற இவ்விரு ஃபைடோ கெமிக்கல்களும் இன்னும் நிறைய பலன்களைத் தரலாம். அவற்றை ஆய்வு செய்தால் இன்னும் இவற்றின் நன்மைகள் தெரிய வரும் என்று கூறுகிறார்.
மேலும் இவ்விரு ஃபைடோகெமிக்கல்கள் ஜீன். டி. என்.ஏ ஆகியவற்றில் எவ்வாறு செயல்படுகிறது, அவற்றின் பண்புகள் ஜீனில் எவ்வாறு வெளிப்படுகிறது என்னென்ன மாற்றங்களை அவை மரபணுக்களில் தருகிரது என ஆராய்ந்தால் இன்னும் நிறைய தெரிய வரலாம் என்று இசக்கி கூறியுள்ளார்.
அதே சமயம் இவ்விரு குர்கியூமின் மற்றும் சிலிமெரின் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அவை ஆபத்தை விளைவிக்கும் என்று மேலும் கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

