Just In
- 2 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 7 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 10 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 10 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- News ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கால்சியம் மாத்திரைகள் சாப்பிட்டால் உண்டாகும் பின்விளைவு!!
இப்போது அடிக்கடி விளம்பரங்களில் காண்பீர்கள் 30 வயதிற்கு பின் கால்சியம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று.
எந்த மருத்துவரும் தேவையேயில்லாமல் கால்சியம் போன்ற சத்து மாத்திரைகளை பரிந்துரைக்க மாட்டார்கள். காரணம் கால்சியம் சத்து நாம் சாப்பிடும் அன்றாட உணவுகளில் இருந்தாலே போதுமானது. அதை தவிர்த்து கால்சியம் மருந்துகள் சாப்பிடுவது நல்லதல்ல.
கால்சியம் பாஸ்பரஸ் போன்ற நுண் சத்துக்கள் பல உறுப்புகலின் செயல்பாடுகளில் முக்கியபங்கு வகிக்கின்றன. குறிப்பாக நரம்புகளில், செல்களில் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய தேவை.
60 வயதிற்கு பிறகு வரும் ஆஸ்டியோஃபியரோஸிஸ் போன்ற எலும்பு தெய்மானம் நோய்களுக்கு காரணம் கால்சியம் அளவு குறைவதால்தான். ஆனால் அவற்றிற்காக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் டெமென்ஷியா என்னும் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஸ்வீடனிலுள்ள கோதன்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் பெண்கள் சாப்பிடும் கால்சியம் மாத்திரைக்கும் மன அழுத்தத்திற்கு என்ன தொடர்பு என ஆராய்ச்சி செய்தனர்.
இந்த ஆராய்ச்சிக்காக 700 வயதான பெண்களை ஈடுபடுத்தினர். அவர்களின் மூளையையும் ஸ்கேன் செய்து ஆய்வு படுத்தினார்கள். பொதுவாக ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு மன பிறழ்வு வரும் வாய்ப்பு அதிகம் என்று சொல்வார்கள். இந்த ஆராய்ச்சியின் ஏற்கனவே ஸ்ட்ரோக் வந்த பெண்கள், கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஏழு மடங்கு டெமென்ஷியா எனப்படும் மனப் பிறழ்விற்கு தள்ளப்படுவார்கள்.
ஆனால் ஸ்ட்ரோக் வராமல் இருந்தவர்களுக்கு டிமென்ஷியா வரும் வாய்ப்பு குறைவு என ஆறுதல் அளித்தனர். ஆனால் அவையும் பக்க விளைவுகளை தருபவையே. ஆகவே பெண்கள் கால்சியம் மாத்திரைகளை சாப்பிடும் முன் அதன் தேவையை உறுதி படுத்தியபின்தான் சாப்பிட வேண்டும் என தலைமை ஆராய்ச்சியாளர் கேர்ன் கூறுகிறார்.