Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
முடக்கு வாதத்தை கட்டுப்படுத்தும் 5 அற்புத மூலிகைகளை பற்றி தெரியுமா?
முடக்கு வாதம் என்பது ஒரு autoimmune நோயாகும். கிருமிகள் உள்ளே வரும்போதுதான் பொதுவாக நோய் எதிர்ப்பு செல்கள் செயல்படும். சில சமயம் , கிருமிகள் வந்துவிட்டது என தவறாக எண்ணி தனிச்சையாக போரிடும்.
இதனால் உள்ளுறுப்புகளில் சேதாரம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு வகை autoimmune நோய்தான் முடக்கு வாதமும். அதனைப் பற்றியும், அதனை குணப்படுத்தும் மூலிகைகளைப் பற்றியும் காணலாம்.

நோயின் அறிகுறிகள் :
முடக்கு வாதம் வந்தால், கைகால் இணைப்புகளில், வீக்கம் வந்து இறுகி விடும். வலி எடுக்கும். வளைக்க முடியாது. இது எந்த வயதிலும் வரலாம். இளம் வயதிலும் சிலருக்கு வரும். சில வருடங்களில் தானாகவே சரியாகிவிடும். பொதுவாக மத்திய வயதினருக்கும், வயதானவர்களையும் அதிகம் தாக்கும் நோய் இது. இதனௌ குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை.

வலியை குறைக்கும் மூலிகைகள் :
முடக்கு வாதத்தை குணப்படுத்த முடியாவிட்டாலும், அதன் வலியையும், வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இவற்றை குறைக்க மருந்துகள் உள்ளன. இயற்கையான மூலிகைகள் வலி நிவாரணியாக செயல்படுகின்றன்.

இஞ்சி எண்ணெய் :
இஞ்சி எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால், அவை மூட்டு இணைப்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். முடக்கு வாதத்தின் மற்ற பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அன்னாசி :
அன்னாசி மருந்தாக 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ப்ரோமெலைன் வீக்கத்தினை குறைக்கும். முடக்கு வாதம் உள்ளவர்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், வலியிருந்து விடுபடலாம்.

பாரிஜாதம் :
பாரிஜாதம் மேற்கு வங்காளத்தில் விளைகிறது. பாரிஜாதத்திலிருந்து எடுக்கப்படும் சாறினை பருகிவந்தால், முடக்கு வாதத்தால் வரும் வலி மறைந்தே போய்விடும். தெம்புடன் நடக்க முடியும் என 1997 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு நிருபிக்கின்றது.

நில வேம்பு :
நிலவேம்பு டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமில்லாமல் முடக்கு வாதத்திற்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது வலி , வீக்கத்தை குறைக்கும்.

குங்குமப் பூ :
குங்குமப் பூ மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்புச் சத்து அதிகம் கொண்டது. இது முடக்கு வாதத்திற்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தினமும் உணவில் இதனை சேர்த்துக் கொண்டால், வலி குறையும் என ஆயுர்வேதம் சொல்கிறது.



Click it and Unblock the Notifications