Latest Updates
-
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி -
தமிழ்நாடு ஏன் 234 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க! -
தேங்காய் சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் -
செவ்வாய்-குருபகவான் உருவாக்கும் கேந்திர யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
எடையை குறைக்க உதவும் தினை அவல் கஞ்சி - எப்படி செய்றது-ன்னு பாத்து தினமும் குடிங்க! -
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு வெற்றி தேடிவருமாம் -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்! -
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கணுமா? அப்ப அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது!
மருத்துவ குணம் நிறைந்த கருஞ்சீரகத்தின் உடல்நல நன்மைகள்!!!
உணவு பொருட்களுக்கு சுவையூட்டும் முக்கியமான ஒரு பொருள் தான் மருத்துவ குணம் நிறைந்த கருஞ்சீரகம் என்ற மசாலா. தைமோக்வினோன் எனப்படும் ஆற்றல் மிக்க பையோ-ஆக்டிவை இது கொண்டுள்ளது. அதனால் வலிப்பு, அலர்ஜிகள் போன்றவைகளை குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தவும் இது உதவுகிறது.
இந்த விதை தோன்றியது எகிப்தில். சிறிய விதைப்பையாக வளரும் இதனை வெளியே எடுக்க அதன் மேல் தண்ணீரை ஊற்ற வேண்டும். இது ப்ளாக் காரவே அல்லது ரோமா கொரியாண்டெர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விதைகள் சிறியது என்றாலும் அதன் சக்தி மிகவும் வலிமையானவை.
இது எம்.எஸ்.ஆர்.ஏ. மற்றும் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பளிக்கும். இந்த விதைகளைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பல பல நன்மைகளை கூறி வருவதால், இந்த இயற்கையான பொருளின் சக்தியைப் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம்.

சர்க்கரை நோயை குணப்படுத்தும்
தினமும் இரண்டு கிராம் அளவிலான கருஞ்சீரக விதைகளை உட்கொண்டால் ஃபாஸ்டிங் க்ளுகோஸ் குறையும், இன்சுலின் எதிர்ப்பு குறையும், பீட்டா அணுக்களின் செயல்பாடு அதிகரிக்கும், க்ளைகோசைலேடத் ஹீமோகுளோபின் (எச்.பி.ஏ.1.சி) குறையும்.

ஹெலிகோபேக்டர் பைலோரி தொற்று
மருத்துவ ரீதியாக ஆன்டி-எச். பைலோரி நடவடிக்கைக்கு தேவையான குணத்தை இந்த கருஞ்சீரக விதைகள் கொண்டுள்ளது. மேலும் இதில் ட்ரிப்பில் எராடிக்கேஷன் தெரப்பியில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.

வலிப்பு
கருஞ்சீரக விதைகளில் வலிப்புத் தடுப்பு மருந்தின் குணங்கள் உள்ளதாக மரபு ரீதியாக அறியப்படுகிறது. வலிப்பு நோயால் அவதிப்படும் குழந்தைகளை கொண்டு 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி, ஆளுகைக்கு உட்படுத்த முடியாத குழந்தைகள் முதல் மருந்து சிகிச்சை அளிக்கப்படும் குழந்தைகள் வரை, பறிமுதல் நடவடிக்கையை கருஞ்சீரக தண்ணீர் பெருவாரியாக குறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உயர் இரத்த அழுத்தம்
தினமும் 100 முதல் 200 மி.கி. அளவிலான கருஞ்சீரக விதைகளின் சாற்றினை, இரு வேளை என்ற வீதத்தில் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்தினால், உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் குறையும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா
இதிலுள்ள முக்கிய மூலப்பொருளில் ஒன்றான மோக்வியோன், மிருக வகை ஆஸ்துமாக்களுக்கு கொடுக்கப்படும் ஃப்லூடிகேசோன் மருந்தை விட சக்தி வாய்ந்ததாகும். கருஞ்சீரக விதைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீர், ஆஸ்துமாக்களுக்கு நல்ல பலனை தரும் என்றும் மற்றொரு ஆய்வு கூறுகிறது.

தொண்டை புண்
கடுமையான டான்சில்லோஃபாரின்கிட்டிஸ் அல்லது தொண்டை திசு அழற்சிக்கு மிகச்சிறந்த சிகிச்சையாக கருஞ்சீரக விதை விளங்குகிறது என ஆராய்ச்சிகள் கூறுகிறது. எளிமையாக சொல்லப்போனால், தொண்டைப் புண்களை இது குணப்படுத்தும்.

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தழும்புகளை தடுத்தல்
அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நிலைகளின் மீது இது சோதிக்கப்பட்டுள்ளது. அதன் படி உள்ளுறை மேற்பரப்புகளில் தழும்புகள் அல்லது ஒட்டுப்பண்பு உருவாகாமல் பாதுகாக்க கருஞ்சீரக விதைகள் உதவுகிறது.

சொரியாஸிஸ்
சொரியாஸிஸ் அழற்சி மீது கருஞ்சீரக விதிகளை தடவினால், புறத்தோல் தடித்தல் அதிகமாகி, வெடிப்புகளை இதமாக்கும்.

பார்கின்சன் நோய்
கருஞ்சீரக விதிகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்த நீரில் கிடைக்கும் தைமோக்வினோன், பார்கின்சன் நோய் மற்றும் மூளைத்தேய்வு நோயுடன் சம்பந்தப்பட்ட நச்சுக்கள் நியூரான்களை பாதுகாக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.

பாம்புக்கடி, மூல நோய் மற்றும் புள்ளிகள்
பாம்புக்கடி, மூல நோய் மற்றும் புள்ளிகள் போன்றவைகளுக்கு எதிராக கருஞ்சீரக விதை எண்ணெய் உதவும். 25 கிராம் கருஞ்சீரக விதையை தண்ணீருடன் சேர்த்து குடித்தால், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக உதவும்.



Click it and Unblock the Notifications











