Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு 'முற்றுப்புள்ளி' வைக்கணுமா? அப்ப இத செய்யுங்க...
மௌத் வாஷ்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை திறம்பட அழிக்கக்கூடியவை. வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனையே இருக்காது.
வாய் ஆரோக்கியம் ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. வாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவது, நாக்கை சுத்தம் செய்வது, பல்லிடுக்குகளில் உள்ள உணவுத் துகள்களை அகற்றுவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். தற்போது வாயை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு மௌத் வாஷ்கள் விற்கப்படுகின்றன. ஆனால் கடைகளில் விற்கப்படும் மௌத் வாஷ்களில் கெமிக்கல்கள் நிறைந்திருப்பதால், அவற்றை அதிகம் பயன்படுத்தினால் வாயின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.

அதுவே இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட மௌத் வாஷ்களால் வாயை சுத்தம் செய்தால், எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் வாய் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும். மௌத் வாஷ்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை திறம்பட அழிக்கக்கூடியவை. வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனையே இருக்காது. இப்போது வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் நேச்சுரல் மௌத் வாஷ்களை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

மௌத் வாஷ்களைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்:
* பிரஷ் மற்றும் பிளாஷ் செய்வதை விட சிறந்தது
* சொத்தைப் பற்கள் குறையும்
* பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும்
* வாய் துர்நாற்றமின்றி புத்துணர்ச்சியுடன் இருக்கும்
* பற்களில் மஞ்சள் கறைகள் படிவது தடுக்கப்படும்
* வாய்ப் புண்கள் சரியாக உதவும்
இப்போது வீட்டிலேயே எப்படி சில நேச்சுரல் மௌத் வாஷ்களைத் தயாரித்து பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

பேக்கிங் சோடா
தேவையான பொருட்கள்:
* பேக்கிங் சோடா அல்லது சோடியம் பை கார்பனேட் - ½ டீஸ்பூன்
* வெதுவெதுப்பான நீர் - ½ டம்ளர்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ½ டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பற்களைத் துலக்கிய பின் அல்லது துலக்குவதன் முன்பு தயாரித்து வைத்துள்ள நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
* இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை வாயைக் கொப்பளிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்
தேவையான பொருட்கள்:
* சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்.
* பின் அந்த எண்ணெயை துப்ப வேண்டும். முக்கியமாக இச்செயலை தினமும் காலையில் பற்களைத் துலக்குவதற்கு முன் செய்ய வேண்டும். இதனால் வாய் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

உப்பு
தேவையான பொருட்கள்:
* கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
* வெதுவெதுப்பான நீர் - 1/2 டம்ளர்
பயன்படுத்தும் முறை:
* முதலில் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 1/2 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த நீரை வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும்.
* இப்படி தினமும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் செய்ய வேண்டும்.

கற்றாழை ஜூஸ்
தேவையான பொருட்கள்:
* கற்றாழை ஜூஸ் - அரை கப்
* நீர் - அரை கப்
* பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் அரை கப் நீரில், பேக்கிங் சோடா மற்றும் அரை கப் கற்றாழை ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* தினமும் பற்களைத் துலக்கிய பின் அந்த கலவையால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
* இப்படி தினமும் 3-4 முறை செய்து வர, வாயில் உள்ள கிருமிகள் அழிந்து, வாய் துர்நாற்றம் நீங்கும்.

புதினா எண்ணெய்
தேவையான பொருட்கள்:
* புதினா எண்ணெய் - 2-3 துளிகள்
* தண்ணீர் - ஒரு கப்
பயன்படுத்தும் முறை:
* ஒரு கப் நீரில் 2-3 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
* இப்படி ஒரு நாளைக்கு ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் வாயைக் கொப்பளிக்கலாம்.

பட்டை எண்ணெய்
தேவையான பொருட்கள்:
* பட்டை எண்ணெய் - 2-3 துளிகள்
* தண்ணீர் - ஒரு கப்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு கப் நீரில் 2-3 துளிகள் பட்டை எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
* இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வாயைக் கொப்பளிக்கலாம்.

டீ ட்ரீ ஆயில்
தேவையான பொருட்கள்:
* டீ-ட்ரீ ஆயில் - 1-2 துளிகள்
* தண்ணீர் - 1/2 கப்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு கப் நீரில் 1-2 துளிகள் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
* இப்படி ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.



Click it and Unblock the Notifications











